Author: editor5
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் நட்சத்திரமுமான எம்.எஸ். தோனிக்கு 45வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்! ராஞ்சியில் 1981ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி அன்று பிறந்த மகேந்திர சிங் தோனி (MS Dhoni) இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு இந்த இனிய நாளில் முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள், ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்திய கிரிக்கெட்டின் ‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்படும் அவர், உலக கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய வீரர். ரயில்வே டிக்கெட் புக் செய்யும் ஊழியராக இருந்து, உலகின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாகவும், வெற்றிகரமான கேப்டனாகவும் உயர்ந்த அவரது பயணம் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது. தோனியின் ஆரம்ப காலம் மற்றும் அறிமுகம்: பீகார் (தற்போதைய ஜார்கண்ட்) மாநிலத்தைச் சேர்ந்த தோனி, தனது இளம் வயதில் கால்பந்து மற்றும் பேட்மிண்டன் விளையாடியவர். இவரது பள்ளிப்படிப்பை…
செங்கல்பட்டு மாவட்டம், பரனூர் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையொட்டி அமைந்துள்ள காப்புக் காட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவியதால் காப்புக் காடு முழுவதும் புகை சூழ்ந்தது. விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை பரவியதால், தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகி கடும் சிரமத்தை சந்தித்தனர். பரனூர் ரயில் நிலையம் மற்றும் சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலை இடைப்பட்ட பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. மேலும், அடர்ந்த புகை காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
தமிழக முதலமைச்சர் விஜய்யை கேலி செய்யும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டதாகக் கூறப்படும் திமுகவின் ‘ஜென் சி’ பிரிவு ஒருங்கிணைப்பாளர் அன்பானந்தன் அரியப்பன் மீது போடப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் கோரிக்கையை நிராகரித்துள்ளது. இதனால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை போலீசார் பதிவு செய்துள்ள இந்த வழக்கில், முதலமைச்சரை அவமதிக்கும் வகையில் பேசியதுடன், அரசுக்கு அவதூறு ஏற்படுத்தியதாகவும், பெண்களின் நாகரிகத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்துகள் தெரிவித்ததாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 24-ம் தேதி நள்ளிரவில் அன்பானந்தன் அரியப்பனின் வீட்டில் தேன்கனிக்கோட்டை போலீசார் சோதனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. அப்போது அவரை கைது செய்ய முயற்சி எடுக்கப்பட்டதாக திமுகவினர் குற்றம் சாட்டினர். இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார். இது அரசியல் பழிவாங்கல்…
மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கமான ‘அம்மா’ (Association of Malayalam Movie Artists) அமைப்பிலிருந்து முன்னணி நடிகைகளான ரேவதி மற்றும் பத்மபிரியா அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளனர். இருவரும் தங்கள் முடிவை சமூக ஊடகங்களில் வெளியிட்ட கூட்டறிக்கையின் மூலம் அறிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை, ஹேமா கமிட்டி அறிக்கைக்குப் பிறகு அம்மா அமைப்பைச் சுற்றி எழுந்துள்ள தொடர் சர்ச்சைகளுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. 1994-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அம்மா அமைப்பு, மலையாள திரைப்படத் துறையில் பணியாற்றும் நடிகர், நடிகைகளின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களின் நலனை மேம்படுத்தவும், தொழில் ஒற்றுமையை வலுப்படுத்தவும் உருவாக்கப்பட்டது. மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்கள் இதன் தலைமையில் இருந்துள்ளனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த அமைப்பு பல்வேறு புகார்கள் மற்றும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக, 2024-ம் ஆண்டு வெளியான ஜஸ்டிஸ் ஹேமா தலைமையிலான கமிட்டி அறிக்கை, மலையாள சினிமாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல், சமத்துவமின்மை உள்ளிட்ட பல கடுமையான விவகாரங்களை…
மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சையைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டதால், ஏற்கெனவே செலுத்திய தேர்வுக் கட்டணத்தைத் திரும்பப் பெற மாணவர்களுக்கு இன்று (ஜூலை 7) இரவு 11.50 மணி வரை கடைசி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமை (என்டிஏ) இதை வலியுறுத்தியுள்ளது. கடந்த மே 3-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு புகார் எழுந்தது. இதையடுத்து வட மாநிலங்களில் பலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் மருத்துவக் கனவு நோக்கி இரு ஆண்டுகளுக்கும் மேலாக தயாராகி வந்த லட்சக்கணக்கான மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேர்வு எளிதாக இருந்ததாக மாணவர்கள் கூறிய நிலையில், திடீர் ரத்து முடிவால் அவர்களின் உழைப்பு வீணாகியது. இதையடுத்து, மறுதேர்வு ஜூன் 21-ம் தேதி நடத்தப்பட்டது. அதே நேரத்தில், மே 3-ம் தேதி தேர்வில் பங்கேற்ற விண்ணப்பதாரர்களுக்கு செலுத்திய கட்டணத்தை முழுமையாகத்…
நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையை முன்னிட்டு, கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (ஜூலை 7, 2026, செவ்வாய்க்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்டுள்ளார். வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, சராசரி கடல் மட்டத்தில் தெற்கு குஜராத்திலிருந்து வடக்கு கேரளா வரை காற்றழுத்த தாழ்வு பாதை நிலவி வருகிறது. இதன் தாக்கத்தால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அந்த எச்சரிக்கைக்கு அமைவாக, நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முதல் இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியதுடன், மலைப்பாதைகளில் சிறிய அளவிலான மண்சரிவு ஏற்படும் அபாயமும் நிலவுவதாக…
காசா பகுதியை கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக நிர்வகித்து வந்த பாலஸ்தீன இஸ்லாமிய அமைப்பான ஹமாஸ், தனது அரசாங்கத்தை முற்றிலுமாக கலைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த முடிவு, போர் மற்றும் முற்றுகையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள காசாவில் பொது நிர்வாகப் பொறுப்புகளை தொழில்நுட்ப நிபுணர்கள் கொண்ட குழு ஏற்றுக்கொள்வதற்கான முக்கிய படியாகக் கருதப்படுகிறது. நேற்று எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, ஹமாஸ் அமைப்பின் அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. 2006-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்ற ஹமாஸ், 2007-ல் போட்டியாளரான ஃபதா அமைப்பிடமிருந்து காசாவின் கட்டுப்பாட்டை முழுமையாகக் கைப்பற்றியது. அதன் பிறகு இரு தசாப்தங்களாக அங்கு ஹமாஸின் நிர்வாகமே நீடித்து வந்தது. கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்க மத்தியஸ்தத்தில் இஸ்ரேலுடன் போர்நிறுத்தம் அமலுக்கு வந்ததிலிருந்து, அன்றாட நிர்வாகப் பொறுப்புகளிலிருந்து விலகத் தயாராக இருப்பதாக ஹமாஸ் பலமுறை வெளிப்படுத்தியிருந்தது. எனினும், அதன் ஆயுதக் களைவு தொடர்பான பிரச்னை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது. இந்தச் சூழலில்,…
தொடர்ச்சியான கனமழை மும்பை நகரத்தை முழுமையாக பாதித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓட, மக்களின் அன்றாட வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட சம்பவங்கள் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தின. குர்லா பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழையில் ஒரு பெரிய மரம் சாலையில் விழுந்து, அங்கு சென்ற ஒரு நபர் உயிரிழந்தார். அதே இரவில் மான்கூர்ட் பகுதியில் மூன்று மாடி குடியிருப்பு ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஐந்து சிறுவர்கள் உள்பட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் மும்பை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், நேற்று காலை மும்பைக்கு விடுக்கப்பட்டிருந்த ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை ‘ரெட் அலர்ட்’ ஆக உயர்த்தப்பட்டது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இரவு முதலே…
2026 ஃபிஃபா உலகக் கோப்பை தொடரில் ஸ்பெயினிடம் ஏற்பட்ட ஏமாற்றத்தக்க தோல்வியால் போர்ச்சுகல் அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றிலேயே வெளியேறியது. இதன்மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உலகக் கோப்பை வரலாறு முடிவுக்கு வந்துள்ளது. இரண்டாம் பாதியின் கூடுதல் நேரத்தில் மாற்று வீரர் மிக்கேல் மெரினோ அடித்த ஒரே கோலுக்கு ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டிக்கு முன்பே தனது கடைசி உலகக் கோப்பையாக இது இருக்கும் என்று ரொனால்டோ அறிவித்திருந்தார். 2006 உலகக் கோப்பையில் அறிமுகமான அவர், கிட்டத்தட்ட இருபது ஆண்டுகால சர்வதேசப் பயணத்தை இப்போது முடித்துக்கொண்டார். இறுதி விசில் ஒலித்த பிறகு, டல்லாஸ் மைதானத்தில் கண்ணீர் மல்க நின்ற ரொனால்டோவை அவரது சக வீரர்கள் ஆறுதல் கூறி தேற்றினர். ரசிகர்களும் எழுந்து நின்று ‘CR7’ என்று கோஷமிட்டு அவருக்கு மரியாதை செலுத்தினர். ரொனால்டோ தொடர்ச்சியாக இரண்டாவது உலகக் கோப்பை தொடரில் போர்ச்சுகலை காலிறுதிக்கு அழைத்துச் செல்ல…
கரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பயங்கர மக்கள் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்ச்சிக்காக முதலமைச்சர் விஜய் வரும் 10-ம் தேதி கரூர் செல்ல திட்டமிட்டுள்ளதற்கு திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த மனுவின் மீதான தீர்ப்பு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உதவித் திட்டங்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025 செப்டம்பர் 27 அன்று கரூர் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய் நடத்திய மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட பெரும் நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பொதுமக்கள் மத்தியில் கடும் கோபத்தையும் ஏற்படுத்தியது. பாதுகாப்புக் காரணங்களால் முதலமைச்சர் நேரில் செல்ல முடியாததால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மாமல்லபுரம் அழைத்து தலா 20 லட்சம் ரூபாய்…