Author: editor5
ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் அதைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் நடைபெற்ற ஏவுகணைத் தாக்குதல்கள் உலக அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. ஒரு எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல் முழுமையாகத் தீப்பிடித்து எரிந்த சம்பவம், பிராந்திய பாதுகாப்பு நிலையை மேலும் சீர்குலைத்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் பல வர்த்தகக் கப்பல்கள் பலத்த சேதமடைந்தன. ஈரான் உயர்மட்டத் தலைவர் ஆயதுல்லா அலி காமெனியின் இறுதிச் சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு கிண்டலான கருத்தை வெளியிட்டார். “ஈரானுக்கு இறுதிச் சடங்கிற்காக ஒரு வாரம் விடுப்பு கொடுக்கிறோம்” என்ற அவரது பேச்சு சர்வதேச அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்தப் பின்னணியில், கத்தார் மத்தியஸ்தம் செய்த ஒரு வார கால போர்நிறுத்த ஒப்பந்தம் காலாவதியான உடனேயே ஈரான் தனது தாக்குதல்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. ஓமனின் லிமா நகருக்கு அருகே தெற்கு நோக்கி சென்று கொண்டிருந்த இரண்டு வர்த்தகக் கப்பல்கள் ஏவுகணைத் தாக்குதலுக்கு…
சீனாவின் ஹுபே மாகாணத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹுன்ஷி, ஹுன்ஹங், இஹொ, ஜினிங் உள்ளிட்ட நகரங்களில் பலத்த மழை பெய்ததால் உள்ளூர் ஆறுகள் உடனடியாக வெள்ளப்பெருக்கெடுத்தன. வெள்ள நீர் சாலைகளையும் குடியிருப்புப் பகுதிகளையும் சூழ்ந்து, போக்குவரத்து மற்றும் அன்றாட வாழ்க்கையை முடக்கியுள்ளது. மழைக்கு உடனடியாகப் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் சிக்கிய 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 275 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல இடங்களில் வீடுகள், வாகனங்கள் மற்றும் பயிர் நிலங்கள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணிகளில் ராணுவம், தீயணைப்பு வீரர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளப் பகுதிகளில் இருந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் பணியும் வேகமாக நடைபெற்று வருகிறது. இதேபோல், சீனாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள கன்சு மாகாணத்தின் மலைப்பாங்கான பிரதேசத்தில் ஏற்பட்ட பெரிய…
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவுக்கு நேற்று வருகை தந்தார். இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, பிரதமர் மோடிக்கு நாட்டின் உயரிய விருதான ‘பிந்தாங் அடிபூர்ணா ஆஃப் தி ரிபப்ளிக் ஆஃப் இந்தோனேசியா’ பதக்கத்தை வழங்கி கௌரவித்துள்ளார். பிரதமர் மோடி பயணித்த சிறப்பு விமானம் இந்தோனேசிய வான்வெளியில் நுழைந்ததும், அந்நாட்டின் அதிநவீன போர் விமானங்கள் பாதுகாப்பு அரணாகச் சூழ்ந்து விமான நிலையம் வரை அழைத்துச் சென்றன. வழக்கமாக வெளிநாட்டுத் தலைவர்களை வரவேற்க அதிபர் நேரில் வர வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், பிரதமர் மோடியின் மீதான மரியாதையின் அடிப்படையில் அதிபர் பிரபோவோ சுபியாண்டோ தானே விமான நிலையத்துக்கு வந்து உற்சாகமான வரவேற்பு அளித்தார். இந்த சிறப்பு வரவேற்பு இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவின் ஆழத்தை பிரதிபலிப்பதாகக் கருதப்படுகிறது. இரு தலைவர்களும் வர்த்தகம், ராணுவ ஒத்துழைப்பு, கடல்சார் பாதுகாப்பு, தொழில் முதலீடுகள்…
மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில் பெரும் தோல்விக்குப் பிறகு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சியில் ஏற்பட்டுள்ள உடைப்பு கட்சியின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது. மொத்தம் 80 எம்.எல்.ஏக்களில் 58 பேர் அதிருப்தியாளர்களாக மாறி தனித்து செயல்படத் தொடங்கியுள்ள நிலையில், மாநில சட்டமன்ற சபாநாயகர் அவர்களுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கியுள்ளார். இந்த அதிருப்திக் குழுவின் தலைவரான ரிதர்பா எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிருப்தியாளர்கள், மம்தா பானர்ஜி உருவாக்கி வளர்த்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை முழுமையாகக் கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். முதலில் கட்சியின் தலைமை அலுவலகத்தை கைப்பற்றிய அவர்கள், கட்சியின் சின்னம் மற்றும் அங்கீகாரம் தங்களுக்கே உரியது என தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பியுள்ளனர். அந்த மனுவில், தற்போதைய கட்சித் தலைவர் மற்றும் நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டதாக வாதிட்டுள்ளனர். மம்தா பானர்ஜி இந்த நடவடிக்கையை பாஜகவின் மறைமுக சதி எனக் கடுமையாக விமர்சித்துள்ளார். “தைரியம் இருந்தால் நேரடியாக பாஜகவில் சேர்ந்து என்னை எதிர்க்கட்டும்”…
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் தொல். திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து முக்கிய விளக்கம் அளித்தார். அமைச்சரவையில் இடம்பெற்றதால் தங்கள் கட்சி கூட்டணியில் இணைந்துவிட்டதாக அர்த்தம் கொள்ளக் கூடாது என்பதை அவர் தெளிவுபடுத்தினார். திருமாவளவன் கூறியதாவது, “முதலமைச்சர் விஜய், கூட்டணி தொடர்பாக ஆதரவு அளிக்கும் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆனால், இதுவரை இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமையில் இன்னும் முழுமையான கூட்டணி உருவாக்கம் நடைபெறவில்லை” என்றார். அமைச்சரவையில் விசிக பங்கேற்றதால் திமுகவுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக எழும் விமர்சனங்களை அவர் நிராகரித்தார். “இது தவறான புரிதல். திமுகவுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நட்பு உறவு தொடர்ந்து வலுவாக உள்ளது” என்று வலியுறுத்தினார். மேலும், விசிகவில் இருந்து விலகிய ஒருவரை திமுக தனது கட்சியில் இணைத்துக்கொண்டது தங்களுக்கு அதிர்ச்சி அளித்ததாகவும் திருமாவளவன் தெரிவித்தார். இருப்பினும், இந்த சம்பவம் இரு கட்சிகளுக்கும் இடையிலான நீண்டகால உறவை பாதிக்காது…
தவெக ஆட்சியை கவிழ்க்க சதி திட்டம் தீட்டப்பட்டதாக எழுந்த பரபரப்பு குற்றச்சாட்டுகளில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு அனுப்பப்பட்ட சம்மனை புறக்கணித்துள்ள நிலையில், அவர்கள் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து திருவல்லிக்கேணி போலீசார் உயர் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக தலைவர் விஜய் தலைமையிலான அரசுக்கு எதிராக சதி திட்டம் தீட்டி, சில எம்.எல்.ஏ.க்களிடம் பணப் பேரம் நடத்த முயற்சி நடைபெற்றதாக அமைச்சர் நிர்மல்குமார் சில நாட்களுக்கு முன்பு பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். இந்த பின்னணியில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. டாக்டர் இளையராஜா, தன்னிடம் ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாகக் கூறி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். விசாரணையில், ஐ.பி.டி.எஸ். எனும்…
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தன் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்புடன் போராடிய தீண்டாமை ஒழிப்புப் போராளி திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசனின் 167வது பிறந்தநாளான இன்று, முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவருக்கு அஞ்சலி செலுத்தினார். எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பதிவிட்ட மு.க.ஸ்டாலின், “திராவிடமணி” எனப் போற்றப்படும் இரட்டைமலை சீனிவாசன், ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் உரிமைகளுக்காக உலக அளவில் குரல் கொடுத்த தலைவர் என்று புகழ்ந்தார். லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்ற அவர், பிரிட்டிஷ் மன்னர் ஐந்தாம் ஜார்ஜுடன் கைகுலுக்க மறுத்து, “நான் தீண்டத்தகாதவன்” என்று அறிவித்து, தீண்டாமையின் கொடுமையை உலகுக்கு உணர்த்திய துணிச்சலான செயல் வரலாற்றுப் புகழ் பெற்றது. 1859 ஜூலை 7ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கோழியாளம் கிராமத்தில் பிறந்த இரட்டைமலை சீனிவாசன், இளம் வயதிலேயே சாதிய ஒடுக்குமுறையை நேரடியாக அனுபவித்தார். 1893ஆம் ஆண்டு ஆதி திராவிட மகாஜன சபையைத் தொடங்கி,…
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள அரசு பள்ளிக்கு சமீபத்தில் சென்ற பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கீர்த்தனா, அங்கு ஒரு மாணவியிடம் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பினார். மாணவி சற்று தயக்கத்துடன் பதிலளிக்க முயன்ற காட்சி, ஊடகங்களால் பதிவு செய்யப்பட்டு சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது. இந்தச் சம்பவம் எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. திமுக இளைஞர் அணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் அமைச்சரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த விமர்சனங்களுக்கு விரிவான பதிலளிக்கும் வகையில் அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தான் ஒரு அரசு பள்ளி மாணவி என்பதையும், தமிழ் வழிக் கல்வியில் பயின்றவள் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். “இன்று சிலர் ‘அரசு பள்ளி மாணவியை கேலி செய்தார்’ என்ற பொய்யான கதையைப்…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வினாடிக்கு 1000 கன அடிக்கும் மேல் நீர் திறக்கப்படுகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன் ஆற்றில் ரசாயன நுரைகள் பெருக்கெடுத்து கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. பலத்த காற்றுக்கு இந்த ரசாயன நுரைகள் விவசாய தோட்டங்களுக்குள்ளும், சாலையில் செல்லும் பொதுமக்கள் மீதும் விழுவதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கர்நாடகா மாநிலம் பெங்களூரு பகுதியில் இருந்து சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு கழிவுநீர் தென்பெண்ணை ஆற்றில் கலப்பதால் இந்த நுரை ஏற்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஓசூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணாரெட்டி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுடன் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், “கர்நாடகா பெங்களூருவில் இருந்து ஆண்டு முழுவதும் ரசாயன கழிவுநீர் தான் தென்பெண்ணை ஆற்றில் வருகிறது. இந்த நீரை பாசனத்திற்கு பயன்படுத்தினால்…
ஜோலார்பேட்டை அருகே இன்ஸ்டாகிராம் பார்த்ததை பெற்றோர்கள் கண்டித்ததால், பிளஸ் டூ மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரும்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பால்னங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ். இவரது மகள் சுதா (17) என்பவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார்.இந்நிலையில் நேற்று மாலை சுதா வீட்டில் செல்போனில் இன்ஸ்டாகிராம் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது பெற்றோர்கள் படிக்காமல் செல்போன் எதற்கு பார்க்கிறாய் என கேட்டு கண்டித்ததாக தெரிகிறது.இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சுதா வீட்டின் அறைக்கு சென்று கதவை சாத்தியுள்ளார். பின்னர் இதை அறிந்த பெற்றோர்கள் சுதாவை கதவை திறக்க கோரி சத்தம் போட்டு உள்ளனர். ஆனால் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்றபோது தூக்கிட்டு தொங்கிய நிலையில் கிடந்த சுதாவை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்து…