Author: editor5

மேகதாது அணை திட்டத்தால் தமிழ்நாட்டுக்கு நீர் பற்றாக்குறை ஏற்படும் என எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிலைப்பாட்டை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கிண்டல் செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டு மக்களால் முழுமையாக நிராகரிக்கப்பட்ட பாஜக, சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மறைந்து போன நிலையில், ஒரு தொகுதியில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் உள்ள ஒரே எம்எல்ஏவின் ஆதரவுடன் செயல்படும் நயினார் நாகேந்திரன், தமிழ்நாடு காங்கிரஸின் உறுதியான நிலைப்பாட்டை கேலி செய்வது வேடிக்கையானது” என்று தெரிவித்தார். கர்நாடகாவில் காங்கிரஸ் அல்லது பாஜக ஆட்சி இருந்தாலும், காவிரி நீர் பிரச்சினையில் தமிழ்நாட்டின் நியாயமான கோரிக்கைகளை அம்மாநிலம் பொருட்படுத்துவதில்லை என்பது தெரிந்த உண்மை. முன்னாள் முதலமைச்சர்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் மேகதாது அணையைக் கட்டியே தீர்வோம், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மாட்டோம் என பகிரங்கமாக…

Read More

தமிழக அமைச்சரவையில் சில அமைச்சர்கள் தங்கள் துறைக்கு சம்பந்தமில்லாத இடங்களுக்கு ஆய்வு சென்று சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் கடுமையான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். இனிமேல் ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் சொந்தத் துறை சார்ந்த பணிகளை மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும் என்று தெளிவாக உத்தரவிடப்பட்டுள்ளது. 17-வது சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமையிலான கூட்டணி அரசு அமைக்கப்பட்டது. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய், தன் கட்சியினரைத் தவிர, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கும் அமைச்சர் பதவி வழங்கி, சமூக நல்லிணக்க அரசை உருவாக்கியுள்ளார். தற்போது 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் துறை அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி, முக்கிய திட்டங்கள், மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு…

Read More

தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று ‘நலம் ஏஐ’ என்ற புதிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அடிப்படையிலான வாட்ஸ்அப் சாட்பாட் சேவையை தொடங்கி வைத்தார். இந்த சேவை, அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் (OP) சிகிச்சைக்கான முன்பதிவை வீட்டிலிருந்தபடியே எளிதாகச் செய்ய உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில், குறிப்பாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட பெரிய மருத்துவமனைகளில் தினசரி ஆயிரக்கணக்கான நோயாளிகள் புறசிகிச்சைக்கு வருகை தருகின்றனர். காலை முதல் மாலை வரை நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை, முதியோர், நோயாளிகள் மற்றும் பெண்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் ‘நலம் ஏஐ’ சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது உரையாடல் அடிப்படையில் இயங்கும் ஏஐ சாட்பாட் ஆகும். பொதுமக்கள் தங்கள் வீட்டில் இருந்தவாறே எளிய உரையாடல் மூலம் மருத்துவ முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த சேவையைப் பயன்படுத்த, 96192 22999…

Read More

பாகிஸ்தானின் தனியார் ஏர்லைன்ஸ் நிறுவனமான கே2 ஏர்வேஸுக்கு சொந்தமான போயிங் 737-400 ரக சரக்கு விமானம் ஒன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜா விமான நிலையத்திலிருந்து கராச்சி நோக்கி புறப்பட்டு சென்ற வேளையில் அரபிக்கடலில் திடீரென மாயமாகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு சார்ஜாவிலிருந்து புறப்பட்ட இந்த விமானத்தில் மொத்தம் ஐந்து பேர் பயணம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். விமானம் ஓமன் வளைகுடாவை கடந்து அரபிக்கடலின் பகுதியில் நுழைந்தபோது, கராச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. கராச்சியிலிருந்து சுமார் 155 நாட்டிகல் மைல் தொலைவில் இரவு 9.22 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரபிக்கடல் விமான கட்டுப்பாட்டு மையத்தின் ரேடார் தரவுகளின்படி, விமானம் இரண்டு நிமிடங்களுக்கும் குறைவான குறுகிய நேரத்திற்குள் 35,000 அடி உயரத்திலிருந்து மிக வேகமாக கீழ்நோக்கி இறங்கியது. அதன் பிறகு ரேடாரில் இருந்து முற்றிலுமாக மறைந்துவிட்டது. இந்த…

Read More

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவின் அழைப்பின் பேரில் ஜூலை 6 முதல் 8 வரை அந்நாட்டுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். ஜகார்த்தாவில் இஸ்தானா மெர்டேகா அரண்மனையில் இரு தலைவர்களும் சந்தித்து இருதரப்பு உரையாடல்களை நடத்தினர். இந்த சந்திப்பின்போது பாதுகாப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம், கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பிரதமர் மோடி மற்றும் அதிபர் பிரபோவோ ஆகியோர் பல்வேறு துறைகளில் 14 ஒப்பந்தங்கள் மற்றும் 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டனர். பிரம்மோஸ் ஏவுகணை ஒத்துழைப்பு, கிரிட்டிக்கல் மினரல்ஸ், ஸ்டீல் சப்ளை சங்கிலி, விண்வெளி, விவசாயம், சுகாதாரம், பேரிடர் மேலாண்மை, டிஜிட்டல் பணம் செலுத்தல் போன்ற துறைகளில் ஒத்துழைப்பு வலுப்பெறும். இந்தியாவின் ஆர்கியாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா (ASI) இந்தோனேசிய அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றும். இரு நாடுகளும் விரிவான உத்திசார் கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்தின. இந்நிலையில், பிரதமர் மோடி ஜாவா தீவில் உள்ள…

Read More

தமிழ்நாட்டில் மாநில அரசின் மது விற்பனை நிறுவனமான டாஸ்மாக் (TASMAC) தற்போது 4,048 கடைகள் மூலம் மது விற்பனையை மேற்கொண்டு வருகிறது. இந்தக் கடைகளில் தினசரி சராசரியாக ரூ.150 கோடிக்கு மேல் மது விற்பனை நடைபெறுவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. விஸ்கி, பிராந்தி, வோட்கா, ரம் உள்ளிட்ட இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபானங்கள் (IMFL), பீர், ஒயின் போன்ற பல்வேறு வகை மதுபானங்கள் இங்கு விற்கப்படுகின்றன. இந்நிலையில், சாதாரண மற்றும் நடுத்தர வகை வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் பீர் ஆகியவற்றின் விலையை ரூ.10 முதல் ரூ.50 வரை உயர்த்த டாஸ்மாக் நிர்வாகம் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. இந்த முடிவு சமீபத்தில் நடைபெற்ற டாஸ்மாக் வாரியக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. என்றாலும், இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. விலை உயர்வின் அளவு குறித்த தெளிவான திட்டமும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்த விலை உயர்வு யோசனைக்கு முக்கிய காரணம், தவெக அரசு பொறுப்பேற்ற…

Read More

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரி தஞ்சம் புகுந்த காதல் ஜோடியின் பெற்றோர், போலீசார் முன்னிலையில் காலில் விழுந்து கண்ணீர் மல்க சமாதானம் கேட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள கெரகோடஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் பாஷாவும், அதே பகுதியைச் சேர்ந்த காவியா என்ற இளம்பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டு, பாதுகாப்பு கோரி காரிமங்கலம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். தகவலறிந்த போலீசார், இரு குடும்பத்தினரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின்போது, மகளும் மருமகனும் தங்களுடன் வீட்டிற்கு வர வேண்டும் என்று பெண்ணின் பெற்றோர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் மல்க வேண்டுகோள்…

Read More

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது அரசு முறைப் பயணத்தின் ஒரு பகுதியாக இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த முக்கிய பயணத்தின் முதல் கட்டமாக நேற்று இந்தோனேசியா சென்ற பிரதமரை அந்நாட்டின் அதிபர் பிரபோவோ சுபியாந்தோ விமான நிலையத்திலேயே நேரில் வரவேற்று உறவுகளின் வலிமையை வெளிப்படுத்தினார். இன்று இரு தலைவர்களின் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு மற்றும் வர்த்தகத் துறையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குறிப்பாக, இந்தியாவின் அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணைகளை இந்தோனேசியா கொள்முதல் செய்யும் ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகள் கடல், நிலம் மற்றும் வான் இலக்குகளை அழிக்கும் திறன் கொண்டவை. இந்த ஒப்பந்தம் இந்திய-இந்தோனேசிய பாதுகாப்பு ஒத்துழைப்பை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், அஸ்திரா ஏவுகணைகளை வாங்குவதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது. வான் போரில் எதிரி ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் திறன் கொண்ட…

Read More

இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் பிற மனிதர்களுடன் உரையாடுவதை தாண்டி செயற்கை நுண்ணறிவுடன் தான் அதிகம் உரையாடி வருகின்றனர். தங்களுக்கு இருக்கக் கூடிய அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் இன்றைக்கு செயற்கை நுண்ணறிவு பதில் கூறி வருகிறது. இந்த செயற்கை நுண்ணறிவு மனித குலத்திற்கு வளர்ச்சி என்றாலுமே, எதிர்காலத்தில் அதே மனித குலத்திற்கு பாதிப்பையும் ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து நடிகரும், எம்.பியுமான கமல்ஹாசன் எச்சரிக்கை ஒன்றை கல்லூரி நிகழ்ச்சியின் போது பேசியிருந்தார். அதாவது, “ தமிழகத்தில் உள்ள ஒரு கல்லூரி விழாவில் கலந்துகொண்டு பேசிய கமல்ஹாசன், சாட்ஜிபிடி போன்ற ஏஐ கருவிகளைப் பயன்படுத்துவதில் மாணவர்கள் காட்டும் அதிகப்படியான ஆர்வத்தைக் குறித்து எச்சரித்தார். சுற்றுச்சூழல் பாதிப்பு: ஏஐ தளங்களில் நாம் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பின்னால் பெரும் அளவிலான மின்சாரமும், கணினிகளை குளிர்விக்க அதிகப்படியான தண்ணீரும் வீணாக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். “சாட்ஜிபிடியிடம் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்வியும், ஒரு டம்ளர் தண்ணீரை நுகர்வதற்குச் சமம்”…

Read More

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பணிக்கன் குப்பம் பகுதியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் விஜய் நிவாரணம் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், பணிக்கன்குப்பம் கிராமம் அருகே கும்பகோணம் சாலையில் கடந்த 5.7.2026 அன்று காலை பண்ருட்டி வட்டம் மருங்கூர் கிராமத்திலிருந்து பண்ருட்டி நோக்கி முந்திரிக் கட்டைகளை ஏற்றி வந்த டிராக்டரை, பின்னால் தொடர்ந்து வந்த டாடா ஏஸ் வாகனம் பின்புறமாக மோதிய விபத்தில் டாடா ஏஸ் வாகனத்தில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த குறிஞ்சிப்பாடி வட்டம், வெங்கடாம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் மனைவி சத்யா (வயது 31), சாமிநாதன் மனைவி செல்வராணி(58) மற்றும் கீழுர் மதுரா, ஆயிப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த கோதண்டபாணி மனைவி காந்திமதி(60), ராசாக்கண்ணு மகன் ரவிச்சந்திரன்(58) ஆகிய 4 பேர் பலத்த காயமடைந்து உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையுமடைந்தேன்.…

Read More