Author: editor5
புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக) ஆட்சி அமைந்து சில மாதங்கள் ஆன நிலையில், அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யும் விவகாரம் இன்னும் தீர்வு காணாமல் நீண்டு வருகிறது. முதல்வர் என். ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் பதவியேற்று விட்டாலும், துறை ஒதுக்கீடு தாமதமாகி வருவது அரசின் இயல்பான செயல்பாட்டை பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் 12 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும், அதிமுக மற்றும் லோக் ஜனசக்தி கட்சி தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. இந்த வெற்றியின் அடிப்படையில் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டது. பதவியேற்பு விழாவில் மே 13-ம் தேதி முதல்வர் ரங்கசாமியுடன், நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். பின்னர், ஜூன் 17-ம் தேதி என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் ராஜவேல், சிவக்கொழுந்து மற்றும் பாஜக சார்பில் ராஜசேகர் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இருப்பினும், இதுவரை எந்த அமைச்சருக்கும் துறைகள் ஒதுக்கப்படவில்லை.…
சென்னை: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் அனைத்து ஆசிரியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இந்தக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் தங்கள் நீண்ட நாள் கோரிக்கைகளை முன்வைத்தனர். மாணவர்களின் ஊட்டச்சத்து மற்றும் நலன் சார்ந்த பல முக்கிய பரிந்துரைகளும் விவாதிக்கப்பட்டன. குறிப்பாக, சில சங்கங்கள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு திட்டத்தில் வாரத்திற்கு ஒரு முறையாவது சிக்கன் பிரியாணி சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த புதிய கோரிக்கை குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். முதலமைச்சருடன் விரைவில் ஆலோசித்து, நிதி ஒதுக்கீடு, சாத்தியக்கூறுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, சத்துணவு பட்டியலில் சிக்கன் பிரியாணியை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். இது மாணவர்களிடையே வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர,…
தமிழக அரசியலில் நடிகர்களின் பங்கு குறித்து தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், நடிகர் தனுஷின் அரசியல் எதிர்காலம் தொடர்பாக பிரபல ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் வெளியிட்டுள்ள கருத்துகள் கவனத்தை ஈர்த்துள்ளன. நடிகர் விஜய் அரசியல் கட்சியைத் தொடங்கி தேர்தல் அரசியலில் களமிறங்கியுள்ள சூழலில், தனுஷும் அரசியலில் இணைந்தால் தமிழக அரசியல் களத்தில் புதிய மாற்றங்கள் உருவாகும் என்று அவர் கணித்துள்ளார். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல், நடிகர் தனுஷ் அரசியலுக்கு வர முடிவு செய்தால், குறுகிய காலத்திலேயே தமிழகத்தின் முக்கிய அரசியல் சக்திகளில் ஒருவராக உருவெடுக்கும் வாய்ப்பு இருப்பதாகக் கூறினார். தற்போது திமுக மற்றும் அதிமுக வகித்து வரும் அரசியல் இடத்தில் மாற்றம் ஏற்பட்டு, தனுஷ் எளிதாக பிரதான எதிர்க்கட்சித் தகுதியை அடையக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், எதிர்காலத்தில் தமிழக அரசியல் போட்டி என்பது நடிகர் விஜய்யும் தனுஷும் இடையேயான…
ஜூலை 29 ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச புலிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. புலிகளின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையைத் தடுக்கவும், அவற்றின் வாழிடங்களைப் பாதுகாக்கவும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நாள் உருவாக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டு ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற சர்வதேச புலிகள் உச்சி மாநாட்டில் இந்த தினம் அறிவிக்கப்பட்டது. அப்போது 13 புலிகள் வாழும் நாடுகள் ஒன்றிணைந்து, 2022 ஆம் ஆண்டுக்குள் உலகப் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் இலக்கை நிர்ணயித்தன. இந்த இலக்கை இந்தியா காலக்கெடுவிற்கு முன்பே சாதித்துக் காட்டியது. 2006 ஆம் ஆண்டு வெறும் 1,411 ஆக இருந்த இந்தியாவின் காட்டுப் புலிகளின் எண்ணிக்கை, 2022 ஆம் ஆண்டின் அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பின்படி 3,682 ஆக உயர்ந்துள்ளது. உலகில் உள்ள காட்டுப் புலிகளில் ஏறக்குறைய 70 சதவீதம் இந்தியாவில்தான் வாழ்கின்றன. இது உலகளாவிய பாதுகாப்பு முயற்சிகளில் இந்தியாவை முன்னணியில் நிறுத்தியுள்ளது. தற்போது…
தமிழ்நாட்டில் தற்போது 4,048 பதிவுசெய்யப்பட்ட டாஸ்மாக் சில்லறை மற்றும் மொத்த விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்த அமைப்பில் நீண்டகாலமாக நடைபெற்று வந்த முறைசாரா பணவசூல் நடைமுறைகளால் ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.102 கோடி அளவிலான வருவாய் ‘கட்சி நிதி’ என்ற பெயரில் திசைதிருப்பப்பட்டு வந்ததாக மூத்த அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் இதன் காரணமாக மாநில அரசுக்கு ஏற்பட்ட மொத்த இழப்பு ரூ.3,600 கோடியைத் தொட்டிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தகவல்களை தமிழக முதல்-அமைச்சர் சி.ஜோசப் விஜய்யிடம் அதிகாரிகள் விரிவாக எடுத்துரைத்ததைத் தொடர்ந்து, டாஸ்மாக் வருவாயில் முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யும் நோக்கில் புதிய அரசு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. ஒவ்வொரு ரூபாய் வருவாயும் அரசின் கருவூலத்திற்குச் சென்றடைய வேண்டும் என முதல்-அமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு தெளிவான அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அத்துடன், காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் தற்போதைய முறையை மறுஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், பள்ளிகள்,…
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) சமீபத்திய தரவுகளின்படி, ஜூன் 1 முதல் ஜூலை 26 வரை நாடு முழுவதும் 337.2 மி.மீ. (33.72 செ.மீ.) மழை பதிவாகியுள்ளது. இயல்பான அளவு 399.2 மி.மீ. என்பதால் ஒட்டுமொத்த பற்றாக்குறை 15.5 சதவீதமாக உள்ளது. ஜூன் மாதத்தில் கிட்டத்தட்ட 40 சதவீதம் வரை பற்றாக்குறை இருந்த நிலையில், ஜூலை மாதத்தில் பருவமழை தீவிரமடைந்ததால் நிலைமை கணிசமாக மேம்பட்டுள்ளது. இந்த மாத மழை இயல்பை விட வெறும் 1 சதவீதம் மட்டுமே குறைவாக உள்ளது. தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 16 சதவீத பற்றாக்குறையுடன் தொடர்கிறது. ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளாவில் 37 சதவீதம், பீகாரில் 39 சதவீதம், ஜார்கண்டில் 34 சதவீதம், கர்நாடகாவில் 25 சதவீதம், கோவாவில் 37 சதவீதம், அசாமில் 29 சதவீதம், அருணாசலப் பிரதேசத்தில் 39 சதவீதம், மேகாலயாவில் 56 சதவீதம் வரை பற்றாக்குறை நீடிக்கிறது. மாறாக, லடாக்கில் 199 சதவீதம்…
அரசு வாகனங்களின் தவறான பயன்பாட்டைக் கட்டுப்படுத்தி, பொது நிதியைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் நோக்கில், மத்திய அரசு முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை வெளியிட்ட அலுவலகக் குறிப்பாணையின்படி, தகுதியுள்ள ஒரு அதிகாரிக்கு ஒரே ஒரு அரசுப் பணியாளர் வாகனம் மட்டுமே ஒதுக்கப்படும். கூடுதல் பொறுப்பு வகித்தாலும் இரண்டாவது வாகனம் வழங்கப்படாது. இந்த உத்தரவு, 2022 செப்டம்பர் 1ஆம் தேதி வெளியிடப்பட்ட விரிவான வழிகாட்டுதல்களை வலுப்படுத்துகிறது. அதில் தகுதியுள்ள அதிகாரிகள் மாதந்தோறும் ரூ.3,000 கட்டணம் செலுத்தி, போக்குவரத்துப் படியைத் தவிர்த்து, அரசு வாகனத்தை மாதம் 500 கி.மீ. வரை தனிப்பட்ட பயணங்களுக்குப் பயன்படுத்தலாம் என அனுமதிக்கப்பட்டிருந்தது. புதிய விதிகளின்படி, ஏற்கனவே ஒரு அமைச்சகம் அல்லது துறையில் பணியாளர் வாகனம் பெற்ற அதிகாரிக்கு, வேறொரு அமைச்சகம், துறை, பொதுத்துறை நிறுவனம் அல்லது தன்னாட்சி அமைப்பின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டாலும், அதற்காகத் தனியாக வாகனம் ஒதுக்கப்பட மாட்டாது. அவர் ஏற்கனவே உள்ள…
இந்திய அஞ்சல் துறை, விரைவு தபால் சேவைகளில் பெரிய மாற்றங்களை அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 1, 2026 முதல் அமலுக்கு வரும் இந்த புதிய விதிகளில், முதன்முறையாக ‘ஆவணம்’ மற்றும் ‘பார்சல்’ ஆகியவற்றுக்கு தெளிவான வரையறைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் தங்கள் பொருட்களை சரியாக வகைப்படுத்தி, குறைந்த கட்டணத்தில் அனுப்பும் வாய்ப்பு கிடைக்கும். மறுவிற்பனை மதிப்பு இல்லாத கடிதங்கள், அச்சிடப்பட்ட ஆவணங்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் ஆவணப் பிரிவில் சேர்க்கப்படும். வங்கி பாஸ்புத்தகம், காசோலை புத்தகம், கணக்கு அறிக்கை, டெபிட்-கிரெடிட் கார்டுகள், பான் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் போன்றவை இந்தப் பிரிவில் இடம்பெறும். ரக்ஷாபந்தன் காலத்தை முன்னிட்டு, 500 கிராம் வரை எடையுள்ள ராக்கி உறைகள், வாழ்த்து அட்டைகள் மற்றும் வணிக மதிப்பு இல்லாத அச்சிடப்பட்ட பொருட்களும் ஆவணமாகக் கருதப்படும். இவற்றைத் தவிர வணிகப் பொருட்கள், மறுவிற்பனை செய்யக்கூடிய பொருட்கள் அனைத்தும் பார்சல் பிரிவில்…
தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் கட்சி மாறி வாக்களிக்க ரூ.35 கோடி பேரம் பேசியதாக தொடரப்பட்ட வழக்கின் பின்னணியில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக சட்டப்பேரவை உறுப்பினர் இளையராஜா, சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ஆதரவாக வாக்களிக்க அல்லது கட்சி மாற ரூ.35 கோடி வழங்கப்படும் என தொலைபேசி மூலம் பேரம் நடந்ததாகவும், மறுத்ததால் மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றதாக தகவல் வெளியானது. இருவரும் முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நீதிமன்றம் நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கியது. உத்தரவு நகல் கிடைத்த…
தமிழக அரசு இளம்பெண்கள் மற்றும் நலிவடைந்த சமூகப் பிரிவினரின் பொருளாதார மேம்பாட்டிற்காக முக்கிய முடிவு எடுத்துள்ளது. முதலமைச்சர் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டுறவுத் துறை ஆய்வுக் கூட்டத்தில், ‘சிங்கப்பெண்கள் மேம்பாட்டுத் திட்டம்’ என்ற பெயரில் புதிய தொழில்முனைவோர் கடன் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழுக்கள் மூலம் இளம்பெண்கள் மற்றும் பின்தங்கிய பிரிவினர் தொழில் தொடங்கவும், ஏற்கனவே உள்ள தொழிலை விரிவுபடுத்தவும் கடன் வழங்கப்படும். இந்தாண்டில் மட்டும் சுய உதவிக் குழுக்களுக்கு மொத்தம் ரூ.7,000 கோடி கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்கள் மூலம் இக்கடன்கள் வழங்கப்படும். மேலும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் ரேஷன் கடைகள் மேம்பாடு மற்றும் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டுறவுத் துறை ஏற்கனவே பயிர் கடன், நகைக் கடன், சுய உதவிக் குழுக் கடன், சிறு…