Author: editor5

மரகதம் குமரவேலுக்கு எதிராக தொகுதிக்குள் பல்வேறு போராட்டங்கள் மற்றும் போஸ்டர் ஒட்டி எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், கட்சியில் ஏற்பட்ட உட்கட்சிப் பிளவு காரணமாக அவர் எடுத்த முடிவு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி இடையே நீண்டகாலமாக நிலவும் மோதல் மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்புடன் இணைந்திருந்த மரகதம் குமரவேல், கடந்த 25-ம் தேதி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து, தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) கட்சியில் இணைந்தார். இந்த முடிவு அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ராஜினாமா செய்த உடனேயே மதுராந்தகம் தொகுதி முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் தீவிரமான எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்தனர். பல இடங்களில் மரகதம்…

Read More

மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் தகராறுகளைத் தீர்க்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். உள்கட்டமைப்பு திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவதன் மூலம் நாட்டின் வளர்ச்சியை துரிதப்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். அதோடு, மாநிலங்களுக்கு இடையிலான நீண்டகால தண்ணீர் பிரச்னைகளை உடனடியாகத் தீர்க்க மாநிலங்கள் இணைந்து செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். 2015-ம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்ட ‘பிரகதி’ (Pro-Active Governance and Timely Implementation) திட்டத்தின் கீழ் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார். வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மத்திய அரசின் உயர் அதிகாரிகள், பல்வேறு மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் தொடர்புடைய துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ரூ.30,000 கோடி மதிப்பிலான ஏழு முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. ரயில்வே, மின்சாரம் மற்றும் சாலைத் துறைகளைச் சேர்ந்த இந்தத் திட்டங்கள்…

Read More

விராலிமலை தொகுதி மக்களுக்கு நன்றி உடையவனாக நான் எப்போதும் இருப்பேன் என்று சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சி.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் இன்று மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விஜயபாஸ்கர், தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, அவர்களின் கருத்துகளுக்கு முழு மதிப்பளிப்பதாகவும் உறுதியளித்தார். “2001ஆம் ஆண்டு முதல் பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளேன். கொரோனா காலத்தில் உயிரைத் துச்சமென நினைத்து மக்களுக்காகப் பணியாற்றினேன். தொகுதி மக்களின் நலனே எனக்கு முக்கியம். அவர்கள் என்னை நம்பி தேர்ந்தெடுத்துள்ளனர். எனவே மக்களின் முடிவே எனது முடிவு” என்று உணர்ச்சி பொங்கக் கூறினார். தான் நிதானமாகவும் அமைதியாகவும் இருப்பதாகவும், எந்தவித அதிரடி அல்லது பரபரப்பும் இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார். இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளைப்…

Read More

கர்நாடக மாநில முதல்வரும் சரி, துணை முதல்வரும் சரி அவர்களது மாநிலத்திற்கு உண்மையாக இருக்கிறார்கள் என்று சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், காவிரி நீர் பிரச்னையில் தமிழகத்தின் நிலைப்பாட்டை வலியுறுத்தி, மேகதாது அணை திட்டத்துக்கு தீவிர எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தின் சொந்த நீர் வளத்தை முழுமையாகப் பயன்படுத்தி தன்னிறைவு பெற வேண்டும் என்று வலியுறுத்திய அவர், மாநிலத்தின் இயற்கை வளங்களிலும் உரிமை கொண்டாட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த சீமான், “தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக 950 டிஎம்சி மழை பெய்கிறது. மொத்த நீர் வளம் சுமார் 4,000 டிஎம்சியாக உள்ள நிலையில், தற்போது வெறும் 1,500 டிஎம்சி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள 2,500 டிஎம்சி நீர் வீணாக கடலில் கலக்கிறது. இந்த நிலை பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. இந்த 2,500 டிஎம்சியில் மேலும் 1,500 டிஎம்சியைச் சேமித்தால், கர்நாடகாவிடம் 150 டிஎம்சிக்காக கெஞ்ச…

Read More

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்தார். கர்நாடக அரசியலில் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்பம் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியிலிருந்து விலக முடிவு செய்து ராஜினாமா கடிதத்தை ஆளுநர் அலுவலகத்தில் ஒப்படைத்தார். காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டத் தலைமையின் உத்தரவின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம், கட்சியின் உள்ளார்ந்த பதவிப் போட்டிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை தனது அதிகாரபூர்வ இல்லத்தில் அமைச்சர்களுடன் நடைபெற்ற காலை உணவு கூட்டத்தில் சித்தராமையா தனது ராஜினாமா முடிவை அறிவித்தார். அப்போது, துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமாரை அடுத்த முதலமைச்சராக பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்று வெளிப்படையாகப் பரிந்துரைத்தார். அமைச்சர்களிடையே ஒற்றுமையுடன் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தினார். கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள் இந்த முடிவை வரவேற்றனர். சிவகுமார் சித்தராமையாவின் காலைத் தொட்டு வணங்கிய காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றது. மாலை 3 மணியளவில் பெங்களூரில் உள்ள ஆளுநர்…

Read More

நிலவின் தென்துருவத்தில் சூரிய ஒளி எப்போதுமே படாத, கடுமையான குளிர்கொண்ட நிரந்தர நிழல் பிரதேசங்கள் உள்ளன. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ 2019-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி சந்திரயான்-2 விண்கலத்தை ஏவியது. நிலவின் தென்துருவப் பகுதியில் முதன்முறையாக மென்மையான தரையிறக்கத்தை நிகழ்த்தும் நோக்கில் அனுப்பப்பட்ட இந்தப் பணியில், விக்ரம் லேண்டர் கடைசி நிமிடத்தில் தொடர்பு இழந்து செயலிழந்தது. எனினும், அதன் ஆர்பிட்டர் இன்றும் நிலவைச் சுற்றி வருகிறது மற்றும் தொடர்ந்து மதிப்புமிக்க தரவுகளைப் பூமிக்கு அனுப்பி வருகிறது. இந்த ஆர்பிட்டர் அனுப்பிய தரவுகளை அகமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் (Physical Research Laboratory – PRL) விஞ்ஞானிகள் விரிவாக ஆய்வு செய்தனர். அவர்களின் ஆய்வில், நிலவின் தென்துருவத்தில் சூரிய ஒளி ஒருபோதும் படாத நிரந்தர நிழல் பிரதேசங்களில் (Permanently Shadowed Regions – PSRs) மேற்பரப்புக்குக் கீழே அதிக அளவில் உறைந்த பனிப்பாறை வடிவ நீர் மூலக்கூறுகள்…

Read More

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை பிரதமர் நரேந்திர மோடி ஹிட் கொண்டு அடித்துவிடுவார் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், வேலைவாய்ப்பின்றி தவிக்கும் இளைஞர்களை ‘கரப்பான் பூச்சிகள்’ என்று ஒப்பிட்டுப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு எதிரான நையாண்டியாக உருவான ‘கரப்பான் ஜனதா கட்சி’ (Cockroach Janta Party – CJP) இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த சமூக ஊடக இயக்கம் வெறும் சில நாட்களில் கோடிக்கணக்கான பின்தொடர்பாளர்களை ஈர்த்துள்ளது. மே 15 அன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது தலைமை நீதிபதி சூர்யகாந்த், வேலையில்லாத இளைஞர்கள் சிலர் ஊடகம், சமூக ஊடகங்கள், ஆர்டிஐ செயற்பாட்டாளர்கள் என பல துறைகளுக்குச் சென்று அமைப்பைத் தாக்குவதாகக் கூறினார். இந்தக் கருத்து ‘கரப்பான் பூச்சிகள்’ என்ற உவமையுடன் இணைக்கப்பட்டு பெரும் எதிர்ப்பை சந்தித்தது. பின்னர் தலைமை நீதிபதி தனது கருத்து தவறாக…

Read More

காங்கோவில் தீவிரமடைந்து வரும் எபோலா நோய்க்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், இந்தியா அவசரகால மருந்துப் பொருட்களை இந்தியா அனுப்பி உதவிக்கரம் நீட்டியுள்ளது. காங்கோ ஜனநாயகக் குடியரசு (டிஆர்சி) மற்றும் உகாண்டா உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவது உலக அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. உலக சுகாதார அமைப்பு (WHO) இதை உலகளாவிய பொது சுகாதார அவசரநிலை (PHEIC) என அறிவித்துள்ளது. இந்த நோய் மற்ற நாடுகளுக்கும் பரவும் அபாயம் இருப்பதால் அனைத்து நாடுகளும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு WHO அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியா உடனடியாக உதவி கரம் நீட்டியுள்ளது. ஆப்ரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையத்துக்கு (Africa CDC) நோய் கண்டறியும் கருவிகள், சிகிச்சைப் பொருட்கள், தொற்றுக் கட்டுப்பாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட அவசர மருத்துவப் பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது. இந்த உதவிப் பொருட்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைவாக விநியோகிக்கப்படும் என ஆப்ரிக்க மையம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்திய…

Read More

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு இன்று அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டது என்று நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், மாநிலத்தில் தொடர்ந்து நடைபெறும் கொடூர சம்பவங்களுக்கு ஆளும் தவெக அரசின் மெத்தனப் போக்கையும், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆதரவாளர்களின் அராஜகச் செயல்களையும் வன்மையாகக் கண்டித்துள்ளார். நிர்வாகத் தோல்வி மற்றும் காவல்துறையின் அலட்சியம் காரணமாக சட்டம் ஒழுங்கு முற்றிலும் பாதாளத்தில் விழுந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். தூத்துக்குடி அருகில் நடைபெற்ற வேன் ஓட்டுநர் படுகொலை வழக்கு இதற்கு சாட்சியம் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இந்தக் கொலை வழக்கில் தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பலியானவரின் உறவினர்கள் போராட்டம் நடத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கட்சியினரின் இத்தகைய அராஜகப் போக்கு ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் பிஞ்சுக் குழந்தைகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தமிழகத்தில் தொடர்கதையாகிவிட்டன என்று நயினார் நாகேந்திரன்…

Read More

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் பணிகளை, தமிழக அரசு நிறுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்கும் திட்டப் பணிகளை தமிழக அரசு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. முந்தைய அரசு முன்னெடுத்த இந்த பெரிய அளவிலான உள்கட்டமைப்பு திட்டத்துக்கு பதிலாக, ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களைப் பயன்படுத்தி தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க உயர்மட்ட ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. 2023 அக்டோபரில் நிர்வாக அனுமதி பெற்ற இத்திட்டம் 5,600 ஏக்கர் பரப்பளவில் பொது-தனியார் கூட்டு முயற்சியில் (PPP) செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. TIDCO நிறுவனம் இதை நடைமுறைப்படுத்தி வந்த நிலையில், மீனம்பாக்கம் விமான நிலையத்தின் அதிகரித்து வரும் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தைச் சமாளிக்க இது முன்னெடுக்கப்பட்டது. 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய இந்தத் திட்டத்துக்கு சுமார் 3,700 ஏக்கர் நிலம் கையகப்படுத்த திட்டம் இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நில எடுப்புப் பணிகள்…

Read More