Author: editor5

இன்ஸ்டாகிராம் காதலை கைவிட மறுத்த இளம் பெண்ணை அவரது சகோதார் கொலை செய்ததும், அதற்கு அவரது தாய் உடந்தையாக இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகிலுள்ள கயத்தார் தாலுகாவில் உள்ள தெற்குமயிலோடை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் அபிசெல்வி மர்மமான சூழலில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் அவரது சகோதரர் சிவஞானம் கொலை செய்ததாகவும், தாய் எஸ்தர் பாலின் உடந்தையுடன் நடந்ததாகவும் போலீசார் விசாரணையில் கண்டறிந்து இருவரையும் கைது செய்துள்ளனர். அபிசெல்வி கடந்த மூன்று ஆண்டுகளாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரி பிரசாத் என்ற இளைஞருடன் இன்ஸ்டாகிராம் சமூக ஊடகம் வாயிலாக தீவிர காதல் உறவில் இருந்து வந்துள்ளார். இந்த உறவு குடும்பத்தினருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தெரியவந்தது. அபிசெல்வியின் அண்ணன் சிவஞானம் மற்றும் பெற்றோர் இக்காதலை கடுமையாக எதிர்த்தனர். குடும்ப அழுத்தத்தால் மனமுடைந்த அபிசெல்வி, அப்போது…

Read More

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து மேலும் ஒரு எம்.பி. விலகியதால், மம்தா பானர்ஜிக்கு தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்காள சட்டசபைத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) கட்சியில் உள் கலகம் தீவிரமடைந்துள்ளது. கட்சியின் அடித்தளமே ஆட்டம் காணும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் இந்த சூழலில், சட்டமன்ற உறுப்பினர்கள் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை பலர் கட்சியை விட்டு விலகும் போக்கு அதிகரித்து வருகிறது. இது மம்தா பானர்ஜியின் தலைமைக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. கட்சியின் 80 சட்டமன்ற உறுப்பினர்களில் 58 பேர் தனி அணியாக இயங்கத் தொடங்கியுள்ளனர். இவர்கள் தங்களுக்கென தனியான அடையாளத்துடன் செயல்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், கட்சியின் மக்களவை உறுப்பினர்களில் சுமார் 20 பேர் தேசிய ஜனநாயகக் கூட்டணியை (என்டிஏ) ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பிளவு கட்சியின் உள்கட்டமைப்பை பலவீனப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான…

Read More

இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு கூடும் என்று மு.வீரபாண்டியன் கூறினார். சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அமோக வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் புதிய அரசியல் சமன்பாடு உருவாகியுள்ளது. 75 ஆண்டுகால திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவை பின்னுக்கு தள்ளி 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக, பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை எட்டாததால் ஆட்சி அமைப்பதில் சிரமத்தை எதிர்கொண்டது. இந்நிலையில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி முதலில் விலகி தவெகவுக்கு ஆதரவு அளித்தது. அதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.எம்), இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (ஐ.யூ.எம்.எல்) உள்ளிட்ட கட்சிகள் தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்தன. இந்த ஆதரவுடன் பெரும்பான்மை எண்ணிக்கையைத் தாண்டியதை அடுத்து, தவெக தலைவர் விஜய் தமிழ்நாட்டின் புதிய…

Read More

தமிழக முதல்வர் விஜய், முக்கிய அலுவல் பணிகளுக்காக 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள நிலையில், அவர் தங்கியிருக்கும் தமிழ்நாடு இல்லத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாணக்யபுரி பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த முதல்வர், இன்று காலை நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக காரில் புறப்பட்டுச் சென்ற சில நிமிடங்களில் கேண்டீனில் தீ பிடித்தது. காலை 10 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்து உடனடியாகக் கண்டறியப்பட்டு, டெல்லி தீயணைப்புத் துறையினர் துரிதமாகச் செயல்பட்டு தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை. பெரிய அளவிலான சேதமும் தவிர்க்கப்பட்டது. தீயணைப்பு வீரர்களின் விரைவான நடவடிக்கை காரணமாக இல்லத்தின் பிற பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. ஆரம்பக் கட்ட விசாரணையில், கேண்டீனில் நிறுவப்பட்டிருந்த ஏர் கண்டிஷனர் எந்திரத்தில் மின் கசிவு ஏற்பட்டு தீ உருவானதாக சந்தேகிக்கப்படுகிறது. டெல்லி போலீசார் மற்றும்…

Read More

கோவையில் பொது இடங்களில் நேரடியாகக் களமிறங்கிப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் அறிவுரைகளை வழங்கி அதிரடி ஆக்‌ஷனில் ஈடுபட்டு உள்ளனர் சிங்கப்பெண்கள். கோவையில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், மாநகரக் காவல் ஆணையரின் உத்தரவின்படி பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ‘சிங்கப்பெண்கள்’ சிறப்புப் படை தீவிரமாகக் களமிறங்கியுள்ளது. பெண் போலீசாரைக் கொண்ட இந்தப் படை, நகரின் பரபரப்பான இடங்களில் நேரடியாகப் பொதுமக்களுடன் தொடர்புகொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்த நடவடிக்கைக்கு முக்கியக் காரணம், சமீபகாலமாக எதிர்க்கட்சியினர் கோவையின் சட்டம்-ஒழுங்கு நிலை மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து எழுப்பி வரும் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவும், நகரின் பாதுகாப்புச் சூழலை மேம்படுத்தும் நோக்கத்திலும் இந்தச் சிறப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் காவல் துறை செயல்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம், உக்கடம், சிங்காநல்லூர், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் ‘சிங்கப்பெண்கள்’…

Read More

தமிழக அரசின் மது விற்பனையை தனியாரிடம் வழங்குவது குறித்து, அதிகாரிகள் தரப்பில் முதல்கட்ட பேச்சு தொடங்கி உள்ளது. தமிழக அரசு மது விற்பனையை முழுமையாக தனியாருக்கு வழங்கும் முக்கிய முடிவை நோக்கி முதல் கட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்ற உடனேயே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 717 மதுக் கடைகளை மூட உத்தரவிட்டார். இந்த உத்தரவு உடனடியாக நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது டாஸ்மாக் முறையை முழுமையாக மாற்றி தனியார்மயமாக்கும் யோசனை தீவிரமாக ஆலோசிக்கப்படுகிறது. தலைமைச் செயலக உயர் அதிகாரிகள் தெரிவித்தபடி, தமிழகத்தில் தற்போது டாஸ்மாக் மூலமே முழு மது விற்பனையும் கட்டுப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் சராசரியாக 50 லட்சம் பெட்டி மது வகைகளும், 35 லட்சம் பெட்டி பீர் வகைகளும் விற்பனையாகின்றன. எந்த பிராண்ட் அதிகம் விற்பனையாகிறதோ அதை அதிக அளவில் கொள்முதல் செய்யும் நடைமுறை காரணமாக, உற்பத்தியாளர்கள் டாஸ்மாக் ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்து தங்கள் பொருட்களை ஊக்குவிக்கும் ‘கவுன்டர்…

Read More

பெர்சிய வளைகுடா பகுதியில் ஏற்கனவே தீவிரமடைந்துள்ள பதற்றத்துக்கு மத்தியில், ஈரான் தனது ராணுவ நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் தொடர் தாக்குதல்களுக்கு பதிலடியாக ஹார்முஸ் நீரிணையை முழுமையாக மூடுவதாக ஈரான் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையான இந்த நீரிணை மூடப்படும் அபாயம் உலகப் பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கும் என்ற அச்சம் சர்வதேச அரங்கில் பரவலாக எழுந்துள்ளது. ஈரான் ராணுவ அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், வணிகக் கப்பல்கள், எண்ணெய் டேங்கர்கள் உள்ளிட்ட எந்தவிதமான கப்பல்களும் இந்த வழியில் செல்ல அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீறி கடக்க முயலும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, சட்டவிரோதமாக நீரிணையைக் கடக்க முயன்ற இரு வணிகக் கப்பல்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான கப்பல்களின் பெயர், கொடி நாடு மற்றும் மாலுமிகளின் நிலை குறித்த தகவல்கள் இதுவரை…

Read More

தேனி பண்ணை வீட்டிற்கு பாரதிராஜாவின் உடல் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குநர் பாரதிராஜா, வயது முதிர்வு மற்றும் நீண்டகால உடல் நலக்குறைவு காரணமாக நேற்று சென்னையில் உயிரிழந்தார். அவரது மரணம் திரையுலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 1942-ல் தேனி மாவட்டத்தில் பிறந்த அவர், 1977-ல் ‘16 வயதினிலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் புரட்சியை ஏற்படுத்தினார். ஸ்டூடியோக்களுக்கு அப்பாற்பட்டு கிராமப்புற வாழ்க்கையை, உண்மையான இயற்கை அமைப்புகளுடன் திரைக்கு கொண்டுவந்த முன்னோடி இயக்குநர் என்று அழைக்கப்படும் அவரது பங்களிப்பு தமிழ் சினிமாவை மாற்றியமைத்தது. ஆறு தேசிய விருதுகள், பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு கௌரவங்களைப் பெற்ற அவர், ஏராளமான வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். அவரது உடல், சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்திலிருந்து நேற்று இரவு சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று காலை 6.30 மணியளவில் தேவதானப்பட்டி அருகே காட் ரோடு பகுதியில் அமைந்துள்ள அவரது பண்ணை…

Read More

மீஞ்சூர் அருகே தொடர் மின்வெட்டை கண்டித்து நள்ளிரவில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகிலுள்ள மேலூர் பகுதியில் இரவு நேரங்களில் நீடித்த மின்வெட்டு ஏற்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் அத்திப்பட்டு ஸ்ரீதேவி நகரிலும் மின்சாரப் பிரச்சினை தீவிரமடைந்துள்ள நிலையில், பொன்னேரி – திருவொற்றியூர் சாலையில் நடைபெற்ற போராட்டம் சிறிது நேரம் போக்குவரத்தை பாதித்தது. இரவு 8 மணி முதல் அதிகாலை வரை மணிக்கணக்கில் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் பகுதி மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர். குறிப்பாக ஸ்ரீதேவி நகரில் வசிக்கும் குடும்பங்கள், குழந்தைகள் மற்றும் முதியோரின் உடல்நலம் பாதிக்கப்படுவதாகக் கூறுகின்றனர். வெப்பம் அதிகரித்துள்ள இந்தக் காலகட்டத்தில் மின்வெட்டு காரணமாக வீடுகளில் பயன்படுத்தும் மின்னணுப் பொருட்கள் செயலிழந்து, தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகளும் எழுந்துள்ளன. மேலும், இரவு நேரங்களில் தெரு விளக்குகள் அணைந்து கிடப்பதால் பாதுகாப்புப்…

Read More

டீசல் விலை உயர்வு, உதிரி பாகங்கள் மற்றும் சுங்கக் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழ்நாடு முழுவதும் இயங்கும் லாரிகளின் வாடகை கட்டணத்தை 25 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளனர் லாரி உரிமையாளர்கள். வருகிற 15-ம் தேதி முதல் இந்த உயர்வு அமலுக்கு வருகிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று அச்சம் எழுந்துள்ளது. தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயற்குழு கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடைபெற்றது. சம்மேளனத் தலைவர் தனராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தொழில் துறையின் தற்போதைய நெருக்கடிகள் விரிவாக விவாதிக்கப்பட்டன. கூட்டத்தில் டீசல் விலையை உடனடியாகக் குறைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய தலைவர் தனராஜ், “சமீபகாலமாக டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சமீபத்தில் மட்டும் லிட்டருக்கு 8 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் லாரி தொழில்…

Read More