Close Menu
    What's Hot

    பாலத்தில் தடம் புரண்ட ரயில்!. ஆற்றில் கவிழ்ந்த 10 பெட்டிகள்!. பீகாரில் பரபரப்பு!

    “முதல்வருக்கு பழனிசாமியுடன் விவாதிக்க நேரமில்லை” – கனிமொழி பதில்

    “முஸ்லிம்களுக்கு 16 தொகுதி வேண்டும்” – திமுகவிடம் கேட்கிறது முஸ்லிம் லீக்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»சட்டக்கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை
    இந்தியா

    சட்டக்கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை

    Editor TN TalksBy Editor TN TalksJune 27, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    123835637 7390e883 252a 4b85 bf64 73e3274f1039
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கத்தாவின் கஸ்பா பகுதியில் சட்டக்கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் தானாக முன்வந்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்த தொடங்கி உள்ளது.

    கொல்கத்தாவின் கஸ்பா பகுதியில் உள்ள சட்டக்கல்லூரியில் புதன்கிழமை இரவு 7.30 மணி முதல் 8.50 மணிக்குள் கல்லூரி வளாகத்தில் இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறையினரிடம் பாதிக்கப்பட்ட மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார்.

    மாணவியின் புகாரின் அடிப்படையில் இரண்டு பேரை கைது செய்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் மூலம் அதே கல்லூரியின் முன்னாள் மாணவர் மறறும் அக்கல்லூரியின் ஊழியர் ஒருவரையும் காவல்துறை கைது செய்துள்ளது.

    இந்த நிலையில் இவ்விவகாரத்தை கையில் எடுத்துள்ளது தேசிய மகளிர் ஆணையம். இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் கவலை அளிப்பதாகவும், இது தொடர்பாக உரிய விசாரணையை நடத்த கொல்கத்தா காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவருக்கு முழு மருத்துவ, உளவியல் மற்றும் சட்ட உதவியை வழங்க அறிவுறுத்தி உள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து 3 நாட்களுக்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க மேற்கு வங்க காவல்துறை இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளது.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு ஒட்டுமொத்த நாட்டையை உலுக்கியது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகர்நாடகத்திற்கு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு.. தமிழகத்திற்கு ஜுலைக்கு உரிய நீரை திறந்து விட வேண்டும்..
    Next Article புதுச்சேரி 3 நியமன எம்எல்ஏக்கள் திடீர் ராஜினாமா…
    Editor TN Talks

    Related Posts

    பாலத்தில் தடம் புரண்ட ரயில்!. ஆற்றில் கவிழ்ந்த 10 பெட்டிகள்!. பீகாரில் பரபரப்பு!

    December 28, 2025

    24,600 இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்! அதிர்ச்சியளித்த சவுதி அரேபியா

    December 27, 2025

    ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. நாடு முழுவதும் 123 ரயில்களில் வேகம் அதிகரிப்பு

    December 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பாலத்தில் தடம் புரண்ட ரயில்!. ஆற்றில் கவிழ்ந்த 10 பெட்டிகள்!. பீகாரில் பரபரப்பு!

    “முதல்வருக்கு பழனிசாமியுடன் விவாதிக்க நேரமில்லை” – கனிமொழி பதில்

    “முஸ்லிம்களுக்கு 16 தொகுதி வேண்டும்” – திமுகவிடம் கேட்கிறது முஸ்லிம் லீக்

    “ஆட்சியில் பங்கு என்பதே காங்கிரஸின் கருத்து” – செல்வப்பெருந்தகை உறுதி

    “இரட்டை வேடம் போடும் விஜய்” – வேல்முருகன் கேள்வி

    Trending Posts

    பாலத்தில் தடம் புரண்ட ரயில்!. ஆற்றில் கவிழ்ந்த 10 பெட்டிகள்!. பீகாரில் பரபரப்பு!

    December 28, 2025

    “முதல்வருக்கு பழனிசாமியுடன் விவாதிக்க நேரமில்லை” – கனிமொழி பதில்

    December 28, 2025

    “முஸ்லிம்களுக்கு 16 தொகுதி வேண்டும்” – திமுகவிடம் கேட்கிறது முஸ்லிம் லீக்

    December 28, 2025

    “ஆட்சியில் பங்கு என்பதே காங்கிரஸின் கருத்து” – செல்வப்பெருந்தகை உறுதி

    December 28, 2025

    “இரட்டை வேடம் போடும் விஜய்” – வேல்முருகன் கேள்வி

    December 28, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.