Close Menu
    What's Hot

    செயல்படாத அதிமுக்கிய ‘ஆதார்’ சேவை மையம்! விழிபிதுங்கும் மக்கள்!

    முதல்வர் ஸ்டாலினுக்கு இ.பி.எஸ் ஓபன் சேலஞ்ச்! அப்படி என்ன பேசினார்கள் தெரியுமா?

    கேப்டன் அமெரிக்கா ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்! மீண்டும் வரும் கிறிஸ் இவான்ஸ்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»திருப்பதி: தேவஸ்தான ஒப்பந்த ஊழியர்கள் 2 பேர் உயிரிழப்பு… காரில் பெட்ரோல் தீர்ந்ததால் நேர்ந்த சோகம்…
    இந்தியா

    திருப்பதி: தேவஸ்தான ஒப்பந்த ஊழியர்கள் 2 பேர் உயிரிழப்பு… காரில் பெட்ரோல் தீர்ந்ததால் நேர்ந்த சோகம்…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 1, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    5
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்பதி திருச்சானூரை சேர்ந்த திலீப், அவருடைய சித்தப்பா மகன் வினய் ஆகிய இரண்டு பேரும் திருப்பதி தேவஸ்தானத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வந்தனர். நேற்று(01.07.2025) மாலை மது அருந்த முடிவு செய்த அவர்கள் தங்கள் குடும்பத்திற்கு சொந்தமான கார் ஒன்றை பாராக மாற்றி மது அருந்த திட்டமிட்டனர். இதற்காக அந்த காரை திருச்சானூரில் உள்ள ரங்கநாதா வீதியில் ஓரமான இடத்திற்கு எடுத்துச் சென்ற இரண்டு பேரும் மது அருந்தும் போது தங்களை யாரும் பார்க்க கூடாது என்பதற்காக முதலில் அந்த கார் மீது தார்ப்பாய் போட்டு மூடிவிட்டனர்.

    அதனை தொடர்ந்து காருக்குள் மது பாட்டில்களுடன் சென்ற அவர்கள் காரின் ஏசியை ஆன் செய்து குளுகுளு சூழலில் உட்கார்ந்து மது குடித்தனர். அதன் பின் அப்படியே அவர்கள் காருக்குள் தூங்கிவிட்டனர். காரின் பெட்ரோல் தீர்ந்து ஏசி நின்று போய்விட்டது.

    இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு போதையிலேயே அவர்கள் இரண்டு பேரும் உயிரிழந்தனர். இரண்டு பேரையும் காணாமல் தேடிய குடும்பத்தார் போன் செய்து பார்த்தபோது காரில் இருந்து ரிங்டோன் கேட்டது. கார் மீது போர்த்தப்பட்டிருந்த தார்ப்பாயை விலக்கி பார்த்தபோது அவர்கள் காருக்குள் படுத்திருப்பது போல் தோன்றியது. ஆனால் அவர்களிடமிருந்து எந்தவிதமான பதிலும் இல்லை.

    எனவே உடனடியாக கார் கதவை திறந்து பார்த்தபோது அவர்கள் இரண்டு பேரும் உயிரிழந்தது தெரிய வந்தது. இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த திருச்சானூர் போலீசார் இரண்டு பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பதியில் உள்ள அரசு ரூயா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிகாரிகள் கொடுத்த தொல்லை… மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட 8 வயது சிறுவன்…
    Next Article நாளை முதல் வீடு தேடி ரேஷன் பொருட்கள்… சோதனை முறையில் தொடக்கம்…
    Editor TN Talks

    Related Posts

    செயல்படாத அதிமுக்கிய ‘ஆதார்’ சேவை மையம்! விழிபிதுங்கும் மக்கள்!

    December 27, 2025

    100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் ரத்து!. நாடு தழுவிய பிரசாரத்திற்கு கார்கே அழைப்பு!

    December 27, 2025

    மகளிர் உரிமைத் தொகை இனி ரூ.2,500!. முதல்வர் அதிரடி அறிவிப்பு!

    December 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    செயல்படாத அதிமுக்கிய ‘ஆதார்’ சேவை மையம்! விழிபிதுங்கும் மக்கள்!

    முதல்வர் ஸ்டாலினுக்கு இ.பி.எஸ் ஓபன் சேலஞ்ச்! அப்படி என்ன பேசினார்கள் தெரியுமா?

    கேப்டன் அமெரிக்கா ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்! மீண்டும் வரும் கிறிஸ் இவான்ஸ்!

    ஜனநாயகன் Ramp Walk… நடனமாடிய விஜய்- பூஜா ஹெக்டே: வைரலாகும் புகைப்படங்கள்

    சூப்பர் டூப்பர் ஹிட்! ரூ.1,000 கோடியை தாண்டியது துரந்தர் வசூல்!

    Trending Posts

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    December 27, 2025

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    December 27, 2025

    சூப்பர் டூப்பர் ஹிட்! ரூ.1,000 கோடியை தாண்டியது துரந்தர் வசூல்!

    December 27, 2025

    ஆலியா பட்டின் “ஆல்பா” ரிலீஸ் மீண்டும் ஒத்திவைப்பு

    December 27, 2025

    தங்கம் விலை மீண்டும் உயர்வு… எவ்வளவு தெரியுமா?

    December 20, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.