Close Menu
    What's Hot

    திருச்சி செல்லும் முதலமைச்சர் விஜய்..! வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்..!

    IPL 2026 சாதனை பட்டியல்!. CSK அணிக்கு பெருமை சேர்த்த சஞ்சு சாம்சன்!

    ஐபிஎல் : “ஈசாலா கப் நம்தே”..! 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»காதலை ஏற்க மறுத்த ஆசிரியை… கத்தியால் குத்தி தாலி கட்டிய இளைஞர்…
    இந்தியா

    காதலை ஏற்க மறுத்த ஆசிரியை… கத்தியால் குத்தி தாலி கட்டிய இளைஞர்…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 6, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 4
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கர்நாடகாவில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ஆசிரியை காதலித்த இளைஞர், ஆசிரியை காதலை ஏற்றுக் கொள்ளாததால் கத்தியால் குத்தி தாலி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம், எலிகெரேயை சேர்ந்தவர் பூர்ணிமா. திருமணமான இவர், கணவரை பிரிந்து மைசூரில் தங்கி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அதேப் போல் கியதனஹள்ளி கிராமத்தை சேர்ந்த அபிஷேக் என்பவர், பூர்ணிமாவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்துள்ளார். அன்று முதல் பூர்ணிமாவை காதலிப்பதாக கூறி வந்துள்ளார்.

    அதற்கு பூர்ணிமா மறுப்பு தெரிவித்தும், பின்தொடர்ந்து வந்த அபிஷேக், தனது காதலை ஏற்றுக் கொள்ளும் படி வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் தன்னை விட வயது குறைவு என்பதால், அபிஷேக்கின் காதலை ஏற்க முடியாது என பூர்ணிமா தொடர்ந்து கூறி வந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த 4-ம் தேதி பூர்ணிமாவை சந்தித்த அபிஷேக், பூர்ணிமாவை, லட்சுமிபுரம் பகுதியில் உள்ள அம்பேத்கர் பூங்காவிற்கு அழைத்து சென்று, தன்னை காதலிக்கும் படி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அப்போதும் பூர்ணிமா அதனை மறுக்க, இதனால் ஆத்திரமடைந்த அபிஷேக், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பூர்ணிமாவின் வயிற்றில் சரமாரியாக குத்தியுள்ளார்.

    இதில் நிலைக்குலைந்த பூர்ணிமா ரத்த வெள்ளத்தில் கீழே சரிய, அதிர்ச்சியடைந்த அபிஷேக், பூர்ணிமாவை தனியார் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, அங்கிருந்து தப்பியோடினார். தகவல் அறிந்த லட்சுமிபுரம் போலீசார், மருத்துவமனை சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். அபிஷேக் கத்தியால் குத்தியதும், கீழே சரிந்து விழுந்த பூர்ணிமாவின் கழுத்தில் தாலி கட்டியுள்ளார் அபிஷேக். அதனை புகைப்படம் எடுத்து தனது வாட்ஸ் அப் மற்றும், பூர்ணிமாவின் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் ஆக வைத்தது தெரியவந்தது.

    இதனையடுத்து நேற்று காலை அபிஷேக்கை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பூர்ணிமா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கைதான அபிஷேக்கிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇஸ்ரோ மையத்தில் ககன்யான் திட்ட ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி!
    Next Article கலைக்கப்பட்ட பா.ம.க. நிர்வாக குழு.. ராமதாஸ் அதிரடி!
    Editor TN Talks

    Related Posts

    ஐபிஎல் இறுதிப் போட்டி – கோப்பையை வென்றது பெங்களூரு அணி

    June 1, 2026

    புதிய படைத் தளபதியாக பொறுப்பேற்ற ஜெனரல் ராஜா சுப்பிரமணி… பின்னணி என்ன?

    May 31, 2026

    சோழர் கடல் ராஜ்ஜியம் பெருமை அளிக்கிறது: பிரதமர் மோடி

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருச்சி செல்லும் முதலமைச்சர் விஜய்..! வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்..!

    IPL 2026 சாதனை பட்டியல்!. CSK அணிக்கு பெருமை சேர்த்த சஞ்சு சாம்சன்!

    ஐபிஎல் : “ஈசாலா கப் நம்தே”..! 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு..!

    நிர்வாக சுத்தமாகும் திருச்செந்தூர் கோயில் ; அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவு அதிகாரிகள் விரைவில் மாற்றம்?

    ஐபிஎல் இறுதிப் போட்டி – கோப்பையை வென்றது பெங்களூரு அணி

    Trending Posts

    ஐபிஎல் இறுதிப் போட்டி – கோப்பையை வென்றது பெங்களூரு அணி

    June 1, 2026

    மீண்டும் உயர்ந்தது சிலிண்டர் விலை; ரூ.3,283க்கு வணிக பயன்பாட்டு சிலிண்டர் விற்பனை

    June 1, 2026

    திருச்சி செல்லும் முதலமைச்சர் விஜய்..! வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்..!

    June 1, 2026

    IPL 2026 சாதனை பட்டியல்!. CSK அணிக்கு பெருமை சேர்த்த சஞ்சு சாம்சன்!

    June 1, 2026

    ஐபிஎல் : “ஈசாலா கப் நம்தே”..! 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு..!

    June 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.