Close Menu
    What's Hot

    ‘சிங்கத் தமிழர் vs குள்ள நரிகள்’! அதிமுகவில் மீண்டும் வெடித்த உட்கட்சி பூசல்?

    FIH மகளிர் நேஷன்ஸ் கப் போட்டி’ நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் –  வீராங்கனைகளுக்கு தலா ரூ.3 லட்சம் பரிசு

    நீட் தேர்வே தேவையில்லை; மாப்பிள்ளையும், மகனும்தான் அதிகார மையம் – அமைச்சர் நிர்மல்குமார் பளீச்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் Vs நடிகர் ரவி மோகன் வழக்கு.. நீதிமன்றம் கூறியதென்ன?
    சினிமா

    பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் Vs நடிகர் ரவி மோகன் வழக்கு.. நீதிமன்றம் கூறியதென்ன?

    Editor TN TalksBy Editor TN TalksJuly 15, 2025Updated:July 15, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250715 WA0002
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை உயர் நீதிமன்றம், பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தாக்கல் செய்த மனு குறித்து நடிகர் ரவி மோகன் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. இந்த மனுவில், ரவி மோகனுக்கு வழங்கப்பட்ட ஆறு கோடி ரூபாய் முன்பணத்தைத் திரும்பப் பெறக் கோரப்பட்டுள்ளது.

    வழக்கின் பின்னணி:

    பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் பாலசந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 2024 செப்டம்பரில் நடிகர் ரவி மோகனுடன் இரண்டு படங்களில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டதாகக் கூறியுள்ளார். முதல் படத்திற்கான ஊதியமாகப் பதினைந்து கோடி ரூபாய் பேசப்பட்டு, அதில் ஆறு கோடி ரூபாய் முன்பணமாக வழங்கப்பட்டது.

    ஒப்பந்தப்படி தங்கள் நிறுவனப் படங்களில் நடிக்காமல், ரவி மோகன் மற்ற நிறுவனப் படங்களில் நடித்ததாகவும், இதனால் முன்பணத்தைத் திரும்பக் கேட்டபோது, ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொண்டு பணத்தைத் திருப்பித் தருவதாக ரவி மோகன் கூறியதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால், பணத்தைத் திரும்பக் கொடுக்காமல், ரவி மோகன் தனது சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, “ப்ரோ கோட்” என்ற படத்தைத் தயாரிக்க உள்ளதாக வெளியிட்ட அறிவிப்பு தங்களுக்கு அதிர்ச்சியை அளித்ததாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

    நீதிமன்ற விசாரணை:

    நீதிபதி அப்தூல் குத்தூஸ் முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், தங்கள் நிறுவனம் அளித்த முன்பணத்தை ரவி மோகன் தனது சொந்தப் படத் தயாரிப்புக்கோ அல்லது தனிப்பட்ட செலவுகளுக்கோ பயன்படுத்த வாய்ப்புள்ளதாக வாதிட்டார்.

    ஆகவே, “ப்ரோ கோட்” படத்தைத் தயாரிக்கத் தடை விதிக்க வேண்டும் என்றும், ரவி மோகன் வேறு நிறுவனங்களின் தயாரிப்பிலும் நடிக்கத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரினார். மேலும், ஆறு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய ரவி மோகனுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    ரவி மோகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆறு கோடி ரூபாய் பெற்றுக்கொண்டது உண்மைதான் என்றும், ஆனால் தங்களுக்கு கால்ஷீட் கொடுத்தும் பணிகளைத் தொடங்காததால் ஏற்பட்ட நஷ்டத்துக்கு ஈடாக கூடுதலாகப் பத்து கோடி ரூபாயை பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் வழங்க வேண்டும் என்றும் வாதிட்டார்.

    நீதிமன்ற உத்தரவு:

    இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, மனு குறித்து நடிகர் ரவி மோகன் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    Abdul Quddhose Actor Advance Payment Balachandran Bobby Touch Gold Universal Private Limited Chennai High Court Civil Case Contract Dispute Director Film Industry Legal Dispute Pro Code Production House Ravi Mohan Vijayan Subramanian அப்தூல் குத்தூஸ் இயக்குனர் ஒப்பந்தப் பிரச்சனை சட்டப் பிரச்சனை சிவில் வழக்கு சென்னை உயர் நீதிமன்றம் தயாரிப்பு நிறுவனம் திரைப்படத் துறை நடிகர் பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் பாலசந்திரன் ப்ரோ கோட் முன்பணம் ரவி மோகன் விஜயன் சுப்ரமணியன்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅனுமதி கேட்பதில் ஒரு லாஜிக் வேண்டாமா?
    Next Article “வேட்டுவம்” படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மோகன் ராஜ் மரணம் – படக்குழு ஆழ்ந்த இரங்கல்
    Editor TN Talks

    Related Posts

    ‘சிங்கத் தமிழர் vs குள்ள நரிகள்’! அதிமுகவில் மீண்டும் வெடித்த உட்கட்சி பூசல்?

    June 21, 2026

    FIH மகளிர் நேஷன்ஸ் கப் போட்டி’ நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் –  வீராங்கனைகளுக்கு தலா ரூ.3 லட்சம் பரிசு

    June 21, 2026

    நீட் தேர்வே தேவையில்லை; மாப்பிள்ளையும், மகனும்தான் அதிகார மையம் – அமைச்சர் நிர்மல்குமார் பளீச்

    June 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘சிங்கத் தமிழர் vs குள்ள நரிகள்’! அதிமுகவில் மீண்டும் வெடித்த உட்கட்சி பூசல்?

    FIH மகளிர் நேஷன்ஸ் கப் போட்டி’ நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் –  வீராங்கனைகளுக்கு தலா ரூ.3 லட்சம் பரிசு

    நீட் தேர்வே தேவையில்லை; மாப்பிள்ளையும், மகனும்தான் அதிகார மையம் – அமைச்சர் நிர்மல்குமார் பளீச்

    அம்மோனியா கசிவு சம்பவம்: 3 நாளில் முழு அறிக்கை சமர்ப்பிக்க முதல்வர் உத்தரவு

    திருவள்ளூர் அருகே சோகம்: தொழிற்சாலையில் வாயுக் கசிவு… 2  பேர் பலி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.