Close Menu
    What's Hot

    பாமகவின் புதிய தலைவராக ராமதாஸ் தேர்வு!. அவருக்கே முழு அதிகாரம்!. பொதுக்குழுவில் தீர்மானம்!.

    போரா அல்லது சமரசமா?. 3 மணி நேர டிரம்ப்-ஜெலென்ஸ்கி சந்திப்பில் என்ன நடந்தது?

    மெக்சிகோவில் ரயில் தடம் புரண்டு விபத்து!. 13 பேர் பலி, 98 பேர் காயம்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»இந்தியா என்ன முடிவு எடுக்க வேண்டும் என யாரும் கூற முடியாது… துணை குடியரசுத் தலைவர் ஆவேசம்…
    இந்தியா

    இந்தியா என்ன முடிவு எடுக்க வேண்டும் என யாரும் கூற முடியாது… துணை குடியரசுத் தலைவர் ஆவேசம்…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    3 14
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டெல்லியில் இந்திய பாதுகாப்பு பிரிவை சேர்ந்த பயிற்சி பெறும் அதிகாரிகள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றி துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சியில் பேசிய அவர், ”வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் கூறும் விசயங்களை கேட்டு, அவர்களுடைய வழிகாட்டுதலின்படி நாம் நடக்க வேண்டியதில்லை. இறையாண்மை வாய்ந்த இந்த நாட்டில், அனைத்து முடிவுகளும் அதன் தலைமையால் எடுக்கப்படுகின்றன என்றார்.

    நம்முடைய உள்நாட்டு விவகாரங்களை எப்படி கையாள வேண்டும் என இந்தியாவுக்கு அறிவுரை கூற பூமியில் வேறு எந்த சக்தியும் இல்லை. பிற நாடுகளுடன் இணக்கத்துடன் உள்ள நாட்டில் நாம் வாழ்கிறோம். ஒன்றாக வேலை செய்கிறோம். பரஸ்பர மதிப்பு மற்றும் தூதரக பேச்சுகளில் ஈடுபடுகிறோம்.

    அமித்ஷாவுக்கு ஜார்கண்ட் முதலமைச்சர் கடிதம் ஆனால், நாம் இறையாண்மை கொண்டவர்கள். நம்முடைய சொந்த முடிவுகளை நாமே எடுப்பவர்கள் என்று பேசியுள்ளார். பஹல்காமில் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்திய ராணுவம், பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து தாக்குதலை நடத்தியது.

    9 பயங்கரவாத உட்கட்டமைப்புகளை இலக்காக கொண்டு இந்திய ஆயுத படைகள் சார்பில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் உருவானது. எனினும், 4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவுக்கு வந்தன. பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவது இந்தியாவின் நோக்கமல்ல என மத்திய அரசு கூறியது. பயங்கரவாதிகளுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரிவித்தது.

    ஆனால், அமெரிக்காவின் தலையீட்டாலேயே இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நடைபெறாமல் முடிவுக்கு வந்தது என அந்நாட்டு அதிபர் டிரம்ப் கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தையின் முடிவாகவே போர் நிறுத்தம் ஏற்பட்டது என இந்தியா கூறியது.

    3-ம் நாட்டின் தலையீடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் மத்திய அரசு கூறி வருகிறது. இந்நிலையில், டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசும்போது, வான்வெளியில் 5 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என நினைக்கிறேன்” என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகரூர்: மருத்துவமனையில் மனைவி குத்திக் கொலை… கணவருக்கு வலைவீச்சு…
    Next Article திருப்பதி : வேற்று மதத்தை சேர்ந்த 4 பேர் பணியிடை நீக்கம்… தேவஸ்தானத்தின் விளக்கம்…
    Editor TN Talks

    Related Posts

    காங்கிரஸ் வெறும் கட்சியல்ல ; ஆன்மாவின் குரல் : சொல்கிறார் ராகுல்

    December 28, 2025

    உலக அளவில் இந்தியா 3வது இடம்! எதில் தெரியுமா?

    December 28, 2025

    இனி ஒரு சிகரெட் விலை ரூ.72?. மசோதா கொண்டுவர திட்டம்!.

    December 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பாமகவின் புதிய தலைவராக ராமதாஸ் தேர்வு!. அவருக்கே முழு அதிகாரம்!. பொதுக்குழுவில் தீர்மானம்!.

    போரா அல்லது சமரசமா?. 3 மணி நேர டிரம்ப்-ஜெலென்ஸ்கி சந்திப்பில் என்ன நடந்தது?

    மெக்சிகோவில் ரயில் தடம் புரண்டு விபத்து!. 13 பேர் பலி, 98 பேர் காயம்!.

    சார்ஜர்கள் ஏன் கருப்பு வெள்ளை நிறத்தில் மட்டும் இருக்கின்றன?. ஆச்சரிய தகவல்!.

    கிறிஸ்துமஸ் விழாவுக்கு யார் முதலில் செல்வது என்பதில் தான் திமுக – தவெக இடையே போட்டி!. அண்ணாமலை விமர்சனம்

    Trending Posts

    விரைவு ரயில்களின் நேர மாற்றம்: பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! உங்கள் பயண நேரம் மாறுமா?

    December 29, 2025

    இன்றைய ராசிபலன் 29.12.2025: இவர்களுக்கு நினைத்தது நிறைவேறும்

    December 29, 2025

    பாமகவின் புதிய தலைவராக ராமதாஸ் தேர்வு!. அவருக்கே முழு அதிகாரம்!. பொதுக்குழுவில் தீர்மானம்!.

    December 29, 2025

    போரா அல்லது சமரசமா?. 3 மணி நேர டிரம்ப்-ஜெலென்ஸ்கி சந்திப்பில் என்ன நடந்தது?

    December 29, 2025

    மெக்சிகோவில் ரயில் தடம் புரண்டு விபத்து!. 13 பேர் பலி, 98 பேர் காயம்!.

    December 29, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.