Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»6 வயது மகளுடன் தீக்குளிக்க முயன்ற தாய்…
    தமிழ்நாடு

    6 வயது மகளுடன் தீக்குளிக்க முயன்ற தாய்…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    images
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தேனியில் தனது கணவர் மற்றும் மாமனாரிடம் இருந்து தனது 15 பவுன் நகையை மீட்டு தர கோரி,தனது ஆறு வயது மகளுடன் பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் குருதேவி (26) இவருக்கும் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே கீழபூலானந்தபுரத்தை சேர்ந்த பிரபு என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆறு வயதில் பெண் குழந்தை இருக்கின்றது.

    திருமணத்திற்கு பிறகு சின்னமனூரில் உள்ள தனது கணவர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவியிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.இதனால் குருதேவி தனது ஆறு வயது மகளுடன் தனது தந்தை வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கணவர் வீட்டில் இருந்த தனது 15 பவுன் நகையை கேட்டபோது தனது மாமனார் செல்லக்கண்ணு மற்றும் கணவர் தன்னை மிரட்டி தனது நகையை கொடுக்காமல் அபகரித்ததாக குற்றச்சாட்டு தெரிவித்து பாதிக்கப்பட்ட பெண் தனது ஆறு வயது குழந்தையுடன் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பெண்ணை தடுத்து,தாய் மற்றும் மகள் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.மேலும் ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தனது 15 பவுன் நகையை மீட்டு தரக்கோரி சின்னமனூர் காவல் நிலையத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு புகார் தெரிவித்த நிலையில், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலைக்கழித்து வருவதாக புகார் தெரிவித்த பெண் தனது கணவரிடம் இருந்து தனது நகையை மீட்டு தர வலியுறுத்தி கோரிக்கை வைத்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதொகுதி மறுசீரமைப்பு – மத்திய அரசு பதில்
    Next Article இங்,-இந்தியா இடையேயான டெஸ்ட் தொடர்… உலக சாதனை படைத்த இந்திய அணி…
    Editor TN Talks

    Related Posts

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    August 9, 2026

    கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!. ஆகஸ்ட் 16-க்குள் இதை கட்டாயம் முடிக்க வேண்டும்!

    August 9, 2026

    “தமிழ்நாட்டின் 39 சீட்டில் கைவைத்தால் அவ்ளோதான்!”. டெல்லிக்கு முதல்வர் விஜய் போட்ட மெகா ஸ்கெட்ச்!. அதிர்ச்சியில் பாஜக!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.