Close Menu
    What's Hot

    பல்மருத்துவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் திமுக அரசு! நயினார் நாகேந்திரன் தாக்கு

    மீண்டும் இணையும் ‘சூப்பர் டீலக்ஸ்’ கூட்டணி?

    “வெறுப்பை இயல்பாக்குகிறது பாஜக… நாம் செயலிழந்த சமூகமாக மாறிவிடக் கூடாது” – ராகுல் காந்தி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»புதிய டிஜிபி நியமனம் தொடர்பான வழக்கு தள்ளுபடி
    தமிழ்நாடு

    புதிய டிஜிபி நியமனம் தொடர்பான வழக்கு தள்ளுபடி

    Editor TN TalksBy Editor TN TalksAugust 4, 2025Updated:August 4, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG Madras High Court Bu 2 1 HEDS3NUB
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்துக்கு டிஜிபி நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்ற விதிமுறைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழக டிஜிபி-யாக பதவி வகிக்கும் சங்கர் ஜிவால், ஆகஸ்ட் 31 ஆம் தேதி பணி ஓய்வுபெறுகிறார். இந்நிலையில், புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக, உச்ச நீதிமன்ற விதிகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் தாமோதரன், உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவில், டிஜிபி நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, 30 ஆண்டுகள் பணியில் உள்ள அதிகாரிகளின் பட்டியலை, டிஜிபி ஓய்வுபெறுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்ப வேண்டும். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குழு, இந்த பட்டியலை ஆய்வு செய்து, தகுதியான மூன்று பேரின் பெயர்களை மாநில அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். அந்த மூன்று அதிகாரிகளில் ஒருவரை அரசு நியமிக்கவேண்டும். ஆனால், தகுதி வாய்ந்த எட்டு அதிகாரிகள் உள்ள நிலையில், மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

    அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், டிஜிபி நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது. அதனால் உச்ச நீதிமன்ற விதிமுறைகளின் அடிப்படையில் டிஜிபி நியமன நடைமுறைகளை மேற்கொள்ளக் கோரி அளித்த மனு மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அமர்வு, தற்போதைய டிஜிபி ஆகஸ்ட் 31 ல் தான் ஓய்வுபெற உள்ளார். நிர்வாக ரீதியிலான இந்த விவகாரத்தில், எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. மேலும், புதிய டிஜிபி நியமனம், உச்ச நீதிமன்ற விதிகளுக்கு முரணாக இருந்தால், அதை எதிர்த்து வழக்கு தொடரலாம். தற்போது இந்த வழக்கு முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதனியார் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்த அரசு அனுமதிக்கக்கூடாது..
    Next Article ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கு – சிபிஐக்கு மாற்றக்கோரிய மனு மீது பதில் தருக
    Editor TN Talks

    Related Posts

    பிரவீன் சக்கரவர்த்தி கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்துகிறார்!.  செல்வப்பெருந்தகை கண்டனம்!,

    December 29, 2025

    மகனை சரியா வளர்க்கல; கனவில் சொன்ன தாய்!. கண்ணீர் சிந்திய ராமதாஸ்!.

    December 29, 2025

    விஜய் நாவை அடக்கி பேசவேண்டும்!. செல்லூர் ராஜு கொந்தளிப்பு!

    December 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பல்மருத்துவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் திமுக அரசு! நயினார் நாகேந்திரன் தாக்கு

    மீண்டும் இணையும் ‘சூப்பர் டீலக்ஸ்’ கூட்டணி?

    “வெறுப்பை இயல்பாக்குகிறது பாஜக… நாம் செயலிழந்த சமூகமாக மாறிவிடக் கூடாது” – ராகுல் காந்தி

    மகரவிளக்கு வழிபாடு: சபரிமலை ஐயப்பன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடை திறப்பு

    பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணிதான்! காந்திமதியை விமர்சித்து போட்டி அறிக்கை

    Trending Posts

    மகனை சரியா வளர்க்கல; கனவில் சொன்ன தாய்!. கண்ணீர் சிந்திய ராமதாஸ்!.

    December 29, 2025

    விஜய் நாவை அடக்கி பேசவேண்டும்!. செல்லூர் ராஜு கொந்தளிப்பு!

    December 29, 2025

    ‘‘திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் கஞ்சா கலாச்சாரம் உச்சத்தை அடைந்துள்ளது’’ – அன்புமணி

    December 29, 2025

    உன்னாவ் வன்கொடுமை வழக்கு!. எந்த சூழ்நிலையிலும் குல்தீப் செங்காரை விடுவிக்க முடியாது!. ஜாமீனை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம்!

    December 29, 2025

    பிரவீன் சக்கரவர்த்தி கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்துகிறார்!.  செல்வப்பெருந்தகை கண்டனம்!,

    December 29, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.