Close Menu
    What's Hot

    இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 16 பேர் பலி! அமைதி ஒப்பந்தத்தை பாதிக்குமா என மீண்டும் கவலை!

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»ஆளில்லாத ஆம்புலன்ஸ்.. எச்சரிக்கை விடுத்த இபிஎஸ்..
    அரசியல்

    ஆளில்லாத ஆம்புலன்ஸ்.. எச்சரிக்கை விடுத்த இபிஎஸ்..

    Editor TN TalksBy Editor TN TalksAugust 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    eps ambulance issue
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வரும் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சாரங்களில் வேண்டுமென்றே கவனத்தை திசைதிருப்பும் வகையில் நோயாளிகள் இல்லாத ஆம்புலன்ஸ் வாகனங்களை கூட்டத்திற்குள் அனுப்பி வைக்கப்படுவதாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது. அடுத்தமுறை ஆளில்லாத ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்தால், அதில் ஓட்டுநரே நோயாளியாக மாற்றி அனுப்பி வைக்கப்படுவார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

     

     

    View this post on Instagram

     

    A post shared by TNtalks (@tntalksofficial)


    2026 சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதையொட்டி 10 மாதங்களுக்கு முன்னதாகவே பிரசார பயணத்தை பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தொடங்கி உள்ளது. கடந்த மாதம் கோவையில் இந்த பயணத்தை தொடங்கிய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு மாவட்டங்களில் மக்களை சந்தித்து ஆளும் திமுக அரசின் அவலங்களை பேசி வருகிறார்.

    அந்தவகையில் திருவண்ணாமலை மாவட்டம் அணைகட்டு பகுதியில் நேற்று அவர் பேசிக்கொண்டிருந்தார். ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டிருந்த அந்த வேளையில், ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று கூட்டத்திற்கு இடையே புகுந்தது. சைரன் ஒலியோடு அந்த வாகனம் வந்தபோது அதிமுக தொண்டர்கள் வழிவிட்டனர்.

    அப்போது பிரசார வாகனத்தின் மீது நின்று கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு சந்தேகம் வரவே, அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தின் உள்ளே நோயாளி இருக்கிறாரா என்ற கேள்வியை எழுப்பினார். ஆம்புலன்ஸ் வாகனத்தை அதிமுக தொண்டர்கள் சூழ்ந்து கொண்டு சோதனையிட்டு பார்த்தபோது உள்ளே நோயாளி என யாருமில்லாதது தெரியவந்தது.

    இதனால் கோவத்தின் உச்சிக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி, ஆளில்லாத ஆம்புலன்சை அனுப்பி அதிமுக பிரசாரத்தை இடையூறு விளைவிக்க ஆளுங்கட்சி முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டினார். எவ்வளவு கேவலமான அரசியல் செய்றாங்க என்று ஆதங்கப்பட்டார். அடுத்தமுறை ஆளில்லாத ஆம்புலன்ஸ் வந்தால், அதன் ஓட்டுநரே நோயாளியாக மாற்றப்பட்டு அனுப்பி வைக்கப்படுவார் என எச்சரிக்கையும் விடுத்தார்.

    நோயாளி என்றால் அவர்களுக்கு இரக்கப்பட்டு உதவுவது தமிழர்களின் பண்பு. அதிமுக தொண்டர்களின் குணமும் அதுதான். இதனை வாய்ப்பாக பயன்படுத்தி எடப்பாடி பழனிசாமி பேசும் எல்லா கூட்டங்களிலும் ஏதேனும் ஒரு ஆம்புலன்ஸ் வாகனத்தை அனுப்பி அவர் பேச்சுக்கு தடைபோடுவதும், மக்களின் கவனத்தை திசைதிருப்புவதும் நடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி காலமானார்… தலைவர்கள் அஞ்சலி…
    Next Article துணை குடியரசுத் தலைவர் தேர்தல்… வேட்பு மனு தாக்கல் செய்த சி.பி.ராதாகிருஷ்ணன்…
    Editor TN Talks

    Related Posts

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    June 19, 2026

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    June 19, 2026

    ” ‘முழு நேரலை’… அத்தனையும் உருட்டுதானா?” – பேரவை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதற்கு அதிமுக கேள்வி

    June 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 16 பேர் பலி! அமைதி ஒப்பந்தத்தை பாதிக்குமா என மீண்டும் கவலை!

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    சாதித்த மாணவர்களுக்காக நேரில் வரப்போகும் முதல்வர் விஜய்..!! விரைவில் தவெக கல்வி விருது விழா..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.