Close Menu
    What's Hot

    முகத்தில் பருக்கள் உள்ளதா? அப்போ உடலில் இந்த பிரச்சனை கன்பர்ம்!

    10 வேட்பாளர்கள் கூட தவெகவில் கிடையாது! நயினார் நாகேந்திரன் கிண்டல்

    அதிமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்க 10 பேர் குழு! விரைவில் தமிழகம் முழுவதும் பயணம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»ஆளில்லாத ஆம்புலன்ஸ்.. எச்சரிக்கை விடுத்த இபிஎஸ்..
    அரசியல்

    ஆளில்லாத ஆம்புலன்ஸ்.. எச்சரிக்கை விடுத்த இபிஎஸ்..

    Editor TN TalksBy Editor TN TalksAugust 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    eps ambulance issue
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வரும் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சாரங்களில் வேண்டுமென்றே கவனத்தை திசைதிருப்பும் வகையில் நோயாளிகள் இல்லாத ஆம்புலன்ஸ் வாகனங்களை கூட்டத்திற்குள் அனுப்பி வைக்கப்படுவதாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது. அடுத்தமுறை ஆளில்லாத ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்தால், அதில் ஓட்டுநரே நோயாளியாக மாற்றி அனுப்பி வைக்கப்படுவார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

     

     

    View this post on Instagram

     

    A post shared by TNtalks (@tntalksofficial)


    2026 சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதையொட்டி 10 மாதங்களுக்கு முன்னதாகவே பிரசார பயணத்தை பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தொடங்கி உள்ளது. கடந்த மாதம் கோவையில் இந்த பயணத்தை தொடங்கிய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு மாவட்டங்களில் மக்களை சந்தித்து ஆளும் திமுக அரசின் அவலங்களை பேசி வருகிறார்.

    அந்தவகையில் திருவண்ணாமலை மாவட்டம் அணைகட்டு பகுதியில் நேற்று அவர் பேசிக்கொண்டிருந்தார். ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டிருந்த அந்த வேளையில், ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று கூட்டத்திற்கு இடையே புகுந்தது. சைரன் ஒலியோடு அந்த வாகனம் வந்தபோது அதிமுக தொண்டர்கள் வழிவிட்டனர்.

    அப்போது பிரசார வாகனத்தின் மீது நின்று கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு சந்தேகம் வரவே, அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தின் உள்ளே நோயாளி இருக்கிறாரா என்ற கேள்வியை எழுப்பினார். ஆம்புலன்ஸ் வாகனத்தை அதிமுக தொண்டர்கள் சூழ்ந்து கொண்டு சோதனையிட்டு பார்த்தபோது உள்ளே நோயாளி என யாருமில்லாதது தெரியவந்தது.

    இதனால் கோவத்தின் உச்சிக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி, ஆளில்லாத ஆம்புலன்சை அனுப்பி அதிமுக பிரசாரத்தை இடையூறு விளைவிக்க ஆளுங்கட்சி முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டினார். எவ்வளவு கேவலமான அரசியல் செய்றாங்க என்று ஆதங்கப்பட்டார். அடுத்தமுறை ஆளில்லாத ஆம்புலன்ஸ் வந்தால், அதன் ஓட்டுநரே நோயாளியாக மாற்றப்பட்டு அனுப்பி வைக்கப்படுவார் என எச்சரிக்கையும் விடுத்தார்.

    நோயாளி என்றால் அவர்களுக்கு இரக்கப்பட்டு உதவுவது தமிழர்களின் பண்பு. அதிமுக தொண்டர்களின் குணமும் அதுதான். இதனை வாய்ப்பாக பயன்படுத்தி எடப்பாடி பழனிசாமி பேசும் எல்லா கூட்டங்களிலும் ஏதேனும் ஒரு ஆம்புலன்ஸ் வாகனத்தை அனுப்பி அவர் பேச்சுக்கு தடைபோடுவதும், மக்களின் கவனத்தை திசைதிருப்புவதும் நடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி காலமானார்… தலைவர்கள் அஞ்சலி…
    Next Article துணை குடியரசுத் தலைவர் தேர்தல்… வேட்பு மனு தாக்கல் செய்த சி.பி.ராதாகிருஷ்ணன்…
    Editor TN Talks

    Related Posts

    இறந்தவர்கள் பட்டியலில் நாதக வேட்பாளர் பெயர்! கொதித்தெழுந்த சீமான்

    December 25, 2025

    திட்டக்குடி விபத்துக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்…. அன்புமணி வலியுறுத்தல்

    December 25, 2025

    இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்! வைகோ கொந்தளிப்பு

    December 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முகத்தில் பருக்கள் உள்ளதா? அப்போ உடலில் இந்த பிரச்சனை கன்பர்ம்!

    10 வேட்பாளர்கள் கூட தவெகவில் கிடையாது! நயினார் நாகேந்திரன் கிண்டல்

    அதிமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்க 10 பேர் குழு! விரைவில் தமிழகம் முழுவதும் பயணம்

    எஸ்ஐஆர் படிவத்தை முறையாக நிரப்பாததால் பெயர் நீக்கம் – 10 லட்சம் பேருக்கு விரைவில் நோட்டீஸ்!

    இறந்தவர்கள் பட்டியலில் நாதக வேட்பாளர் பெயர்! கொதித்தெழுந்த சீமான்

    Trending Posts

    மும்பையில் டிஜிட்டல் அரெஸ்ட்- ரூ.9 கோடியை இழந்து தவிக்கும் 85 வயது முதியவர்

    December 25, 2025

    தேசிய சீனியர் பாட்மிண்டன்: உன்னதி, தன்வி முன்னேற்றம்

    December 25, 2025

    கிரிக்கெட்டில் நான் ஒரு ‘ஆப் ஸ்பின்னர்’ – முதல்வர் ஸ்டாலின் கலகல பேச்சு

    December 25, 2025

    புதுச்சேரியில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து 3 மாணவர்கள் தப்பியோட்டம்

    December 25, 2025

    இஷான் கிஷனின் சாதனை சதம் வீண்: 413 ரன்களை வெற்றிகரமாக துரத்தியது கர்நாடகா அணி

    December 25, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.