Close Menu
    What's Hot

    பிரதமர் மோடிக்கு சிறப்பு கௌரவம்!! எழுந்து நின்று கைத்தட்டி பாராட்டிய மத்திய அமைச்சரவை!!

    மயிலை படைத்தவர், குயிலை அழைத்தவர், சிவப்பு ரோஜாக்களை விதைத்தவர் – பாரதிராஜா மறைவுக்கு, டி.ராஜேந்தர் இரங்கல்!

    2வது முறையாக டெல்லி விசிட்..!! தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»எஸ்ஐஆர் படிவத்தை முறையாக நிரப்பாததால் பெயர் நீக்கம் – 10 லட்சம் பேருக்கு விரைவில் நோட்டீஸ்!
    தமிழ்நாடு

    எஸ்ஐஆர் படிவத்தை முறையாக நிரப்பாததால் பெயர் நீக்கம் – 10 லட்சம் பேருக்கு விரைவில் நோட்டீஸ்!

    Editor TN TalksBy Editor TN TalksDecember 25, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    EC SIR
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    எஸ்ஐஆர் படிவத்தை முறையாக பூர்த்தி செய்யாத 10 லட்சம் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டுள்ளது.

    பிகாரை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கியது. அதன்படி, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுவீடாக சென்று எஸ்ஐஆர் விண்ணப்பங்களை வழங்கினர். நவம்பர் 4ஆம் தேதி தொடங்கிய எஸ்ஐஆர் பணிகள், டிசம்பர் 14 ஆம் தேதியுடன் நிறைவடைந்தன.

    தொடர்ந்து, டிச.19 ஆம் தேதி தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. அதில் இறந்தவர்கள், குறிப்பிட்ட முகவரியில் இல்லாதவர்கள், குடிபெயர்ந்தவர்கள், இரட்டைப் பதிவுகள் என 97 லட்சத்து 37 ஆயிரத்து 832 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு முன்பு, 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த வாக்காளர்கள் எண்ணிக்கை, தற்போது 5.43 கோடியாக குறைந்துள்ளது. அதாவது, மொத்த எண்ணிக்கையில் 15.18% வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

    பிகாரில் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதே பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட ஒரு கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் – இடம் மாறியவர்கள் படிவம் 8-ஐயும், புதிதாக சேருபவர்கள் படிவம் 6-ஐயும் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் வாக்காளர் பட்டியலில் ஜனவரி 18 ஆம் தேதிக்குள் இணைத்து கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்காக, சென்னையில் சிறப்பு முகாம்களும் நடந்தன.

    இதனிடையே, படிவத்தை முறையாக பூர்த்தி செய்யாத வாக்காளர்களின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், எஸ்ஐஆர் படிவத்தை முறையாக பூர்த்தி செய்யாத சுமார் 10 லட்சம் வாக்காளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

    மாவட்ட தேர்தல் அலுவலகத்திலிருந்து வாக்காளர்களுக்கு தபால் மூலம் நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளதாகவும், இந்த நோட்டீஸுக்கு பதிலளிக்கும் வகையில், பிறப்பிட சான்றிதழ், நிரந்தர குடியிருப்பு சான்றிதழ் உள்ளிட்ட 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வாக்காளர்கள் சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் ஆணையம் அளித்த பட்டியலில் Nativity Certificate என்ற பிறப்பிட சான்றிதழும் இருக்கிறது. இச்சான்றிதழை தமிழக அரசு இ-சேவை வழியாக, ஆன்லைன் மூலம் வழங்கி வருகிறது. அதற்கு கட்டணமாக ரூ.60 வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த பிறப்பிட சான்றிதழ் இலவசமாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் இ-சேவை மையங்களை நடத்தி வரும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமைக்கும் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா கடிதம் எழுதியுள்ளார். அதில், “தமிழகத்தில் நடந்து வரும் சிறப்பு தீவிர திருத்தப்பணி காரணமாக பிறப்பிட சான்றிதழ் வழங்குவது அவசியமாகிறது. எனவே, பிறப்பிட சான்றிதழ் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும், ஜனவரி 25 வரை மண்டல துணை தாசில்தார்கள், தாலுகா துணை தாசில்தார்கள் தங்களது கையால் சான்றிதழ் வழங்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇறந்தவர்கள் பட்டியலில் நாதக வேட்பாளர் பெயர்! கொதித்தெழுந்த சீமான்
    Next Article அதிமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்க 10 பேர் குழு! விரைவில் தமிழகம் முழுவதும் பயணம்
    Editor TN Talks

    Related Posts

    மயிலை படைத்தவர், குயிலை அழைத்தவர், சிவப்பு ரோஜாக்களை விதைத்தவர் – பாரதிராஜா மறைவுக்கு, டி.ராஜேந்தர் இரங்கல்!

    June 10, 2026

    பாரதிராஜா உடல் சொந்த ஊரில் அடக்கம்!

    June 10, 2026

    பாரதிராஜா ஒரு திரையுலக வித்தகர்..!! மண் வாசனை மிகுந்த அவரது குரல் என்றும் ஒலிக்கும்..!! உதயநிதி புகழாரம்..!!

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரதமர் மோடிக்கு சிறப்பு கௌரவம்!! எழுந்து நின்று கைத்தட்டி பாராட்டிய மத்திய அமைச்சரவை!!

    மயிலை படைத்தவர், குயிலை அழைத்தவர், சிவப்பு ரோஜாக்களை விதைத்தவர் – பாரதிராஜா மறைவுக்கு, டி.ராஜேந்தர் இரங்கல்!

    2வது முறையாக டெல்லி விசிட்..!! தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு..!!

    அழியாத முத்திரையைப் பதித்தவர் பாரதிராஜா..!! துணை குடியரசுத் தலைவர் இரங்கல்..!!

    கேரளாவை ஆட்டிப்படைக்கும் ஷிகெல்லா தொற்று..!! மருத்துவமனையில் பள்ளி மாணவர்கள் அட்மிட்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.