Close Menu
    What's Hot

    நான் உயிரோடுதான் இருக்கிறேன்… மரணச் சான்றிதழோடு அலையும் இளைஞர்! இது மத்தியப் பிரதேச சோகம்!

    பாலியல் தொல்லை புகாரில் பிரபல தொழிலதிபர் பி.ஆர். சுந்தர் கைது!

    டிரம்ப் பயணித்த ஹெலிகாப்டருக்கு அருகே விமானப் பாதுகாப்பு நடைமுறையில் தவறு; அமெரிக்க அதிகாரிகள் விசாரணை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கவின் தந்தையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த திருமாவளவன்
    Featured

    கவின் தந்தையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த திருமாவளவன்

    Editor TN TalksBy Editor TN TalksAugust 25, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    New Project 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சாதிமாறி காதலித்ததால் நெல்லையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட கவினின் தந்தையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்தித்தார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கவின் தந்தை சந்திரசேகருடன் முதல்வரை சந்தித்து பேசினோம். அவர்களது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். கவின் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என அவர் முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறினார்.

    கவின் கொலையில் கூலிப்படைக்கும் தொடர்பு உள்ளது என கவின் தந்தை முதல்வரிடம் கூறியுள்ளார். தனது இளைய மகளுக்கு அரசு வேலை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். கோரிக்கைகளை நிறைவேற்ற முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்.பள்ளி ஆசிரியையாக உள்ள கவின் தாயாருக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் வசிக்கும் பகுதியிலேயே வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என கூறியுள்ளோம். ஆணவக் கொலை தடுப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மாநில அரசுக்கு அந்த அதிகாரம் உண்டு.

    கல் உடைக்கும் தொழிலாளர் வாரியம் அமைக்க விசிக சார்பில் முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்..
    தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என ஏற்கனவே நாங்கள் கோரிக்கை விடுத்து விட்டோம். ஆனால் அந்த தொழில் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கான தொழிலாகவே நிரந்தரப்படுத்துவிட கூடாது என்பதற்காகவே அதை எந்திரமயமாக்க வேண்டும் என்று கூறினேன் . தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் அந்த தொழிலை செய்யலாம் என்ற சூழலை உருவாக்க வேண்டும் .
    அதை தவறாக புரிந்து கொண்டு நான் தூய்மை பணியாளர்களுக்கு எதிராக பேசியதைப் போல் சிலர் விமர்சிக்கின்றனர்.

    இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநாய்களுக்கு உணவளித்த பெண் – செல்போனை பிடுங்கிய காவலர்- நடந்தது என்ன?
    Next Article பொள்ளாச்சி ஜெயராமன் குறித்து அவதூறாக பேச தடை
    Editor TN Talks

    Related Posts

    நான் உயிரோடுதான் இருக்கிறேன்… மரணச் சான்றிதழோடு அலையும் இளைஞர்! இது மத்தியப் பிரதேச சோகம்!

    August 6, 2026

    பாலியல் தொல்லை புகாரில் பிரபல தொழிலதிபர் பி.ஆர். சுந்தர் கைது!

    August 6, 2026

    டிரம்ப் பயணித்த ஹெலிகாப்டருக்கு அருகே விமானப் பாதுகாப்பு நடைமுறையில் தவறு; அமெரிக்க அதிகாரிகள் விசாரணை

    August 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நான் உயிரோடுதான் இருக்கிறேன்… மரணச் சான்றிதழோடு அலையும் இளைஞர்! இது மத்தியப் பிரதேச சோகம்!

    பாலியல் தொல்லை புகாரில் பிரபல தொழிலதிபர் பி.ஆர். சுந்தர் கைது!

    டிரம்ப் பயணித்த ஹெலிகாப்டருக்கு அருகே விமானப் பாதுகாப்பு நடைமுறையில் தவறு; அமெரிக்க அதிகாரிகள் விசாரணை

    சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மைல்கல்.. மூலக்கடையை வந்தடைந்தது ‘நீலகிரி’..!!

    “அமித் ஷா நேரடியாகப் பேசட்டும்!”: தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு 3 நிபந்தனைகளை விதித்த ராகுல் காந்தி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.