Close Menu
    What's Hot

    அஜித்தின் கார் ரேஸ் பயணமான ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படம்: விரைவில் ரிலீஸ்!

    TNPL கிரிகெட்: முதல் ஆட்டத்தில் திருப்பூர் அணியை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி!

    ‘கஜினி’, ‘லகான்’ பட புகழ் பிரபல நடிகர் பிரதீப் ராவத் காலமானார்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»முடக்கப்பட்ட ஆபாச வீடியோக்கள் மீண்டும் பரவுவது எப்படி? நீதிமன்றம் கேள்வி
    தமிழ்நாடு

    முடக்கப்பட்ட ஆபாச வீடியோக்கள் மீண்டும் பரவுவது எப்படி? நீதிமன்றம் கேள்வி

    Editor TN TalksBy Editor TN TalksAugust 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG Madras High Court
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இணையத்தில் பரவிய பெண் வழக்கறிஞரின் அந்தரங்க வீடியோக்கள் முடக்கப்பட்டாலும், தமிழகத்தில் மட்டும் எப்படி மீண்டும் மீண்டும் பரவி வருகிறது என சைபர் கிரைம் காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    இணையதளங்கள், சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட தன்னுடைய அந்தரங்க வீடியோக்களை அகற்றக் கோரி பெண் வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விடியோக்களை நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. மேலும் வழிக்காட்டு நெறிமுறைகளை வகுக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞர் தரப்பில், இணையதளத்தில் வீடியோக்கள் முடக்கப்பட்ட போதிலும், தமிழகத்தில் 3 இணைதளங்களில் பரவி வருவதாகவும், புதிதாக ஒரு லிங்க் மூலமும் வீடியோ பகிரப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதி, வீடியோக்களை நீக்க உத்தரவிட்டும் பின்னர் மும்பை, டெல்லி போன்ற இடங்களில் இந்த வீடியோக்களை பார்க்க முடிவதில்லை என்ற நிலையில் தமிழகத்தில் மட்டும் எப்படி தொடர்ந்து பரவி வருகிறது என கேள்வி எழுப்பினார்.மேலும் இந்த வழக்கின் புலன் விசாரணை என்ன நிலையில் உள்ளது எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த சென்னை சைபர் கிரைம் காவல்துறை, இந்த வழக்கில் புலன் விசாரணை முடிந்து இறுதி அறிக்கை தயாராக இருப்பதாகவும், தடய அறிவியல் துறை அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    மத்திய அரசு தரப்பில், பெண்களின் வீடியோக்கள் பகிரப்படும் போது புகார் அளிக்கப்பட்டால் உடனடியாக இணையளதங்களில் முடக்கி நடவடிக்கை எடுப்பது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு வரும் செம்டம்பர் 2 ம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, நல்ல பேச்சுக்கள் அடங்கிய வீடியோக்கள் இணையத்தில் இருந்து நீக்கப்படுகின்றன, ஆனால் மோசமான வீடியோக்கள் மட்டும் அதிவேகமாக பரவி வருகிறது என வேதனை தெரிவித்தார். பெண் வழக்கறிஞர் வீடியோக்கள் இடம்பெற்ற 4 இணையதளங்களையும் முடக்க உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை செப்டம்பர் 11 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனு – விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு
    Next Article முத்தரப்பு கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் 3 அணிகள்
    Editor TN Talks

    Related Posts

    மருதமலை அருகே கருஞ்சிறுத்தை நடமாட்டம்: வைரல் வீடியோவால் பொதுமக்கள் அச்சம்!

    August 5, 2026

    முக்கிய பதவி உயர்வு, பணியிட மாற்றங்களுக்கு முதல்வரின் ஒப்புதல் கட்டாயம்: தமிழக அரசு புதிய அரசாணை!

    August 5, 2026

    இன்று தாக்கலாகிறது தவெக அரசின் முதல் பட்ஜெட்! நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல்!

    August 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அஜித்தின் கார் ரேஸ் பயணமான ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படம்: விரைவில் ரிலீஸ்!

    TNPL கிரிகெட்: முதல் ஆட்டத்தில் திருப்பூர் அணியை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி!

    ‘கஜினி’, ‘லகான்’ பட புகழ் பிரபல நடிகர் பிரதீப் ராவத் காலமானார்!

    மருதமலை அருகே கருஞ்சிறுத்தை நடமாட்டம்: வைரல் வீடியோவால் பொதுமக்கள் அச்சம்!

    முக்கிய பதவி உயர்வு, பணியிட மாற்றங்களுக்கு முதல்வரின் ஒப்புதல் கட்டாயம்: தமிழக அரசு புதிய அரசாணை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.