Close Menu
    What's Hot

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»9-ம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை… குல்தீப் நிச்சயம் இடம் பெற வேண்டும்… வலியுறுத்திய முன்னாள் வீரர்…
    விளையாட்டு

    9-ம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை… குல்தீப் நிச்சயம் இடம் பெற வேண்டும்… வலியுறுத்திய முன்னாள் வீரர்…

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவ் நிச்சயம் இடம் பெற வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் மதன் லால் வலியுறுத்தியுள்ளார்.

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கவுள்ளன. ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளும், பி பிரிவில் இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகளும் இடம்பெறவுள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் செப்டம்பர் 10-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தையும், 14-ம் தேதி பாகிஸ்தானையும், 19-ம் தேதி ஓமனையும் எதிர்கொள்கிறது.

    இந்நிலையில் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவ் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்று முன்னாள் வீரர் மதன் லால் தெரிவித்துள்ளார். இது குறித்து கூறியுள்ள அவர், “திறமையான அணியாக இருப்பதால் இந்தியா ஒரு வலுவான அணியாக உள்ளது. இருப்பினும் கணிக்க முடியாத டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் வெளிப்படுத்தும் செயல்பாடுகளைப் பொறுத்து இந்தியா கோப்பையை வெல்வது அமையும். குறிப்பாக ஆப்கானிஸ்தான் தற்போது சிறப்பாக விளையாடி வருகிறது. பாகிஸ்தான் அணிக்கு ஆப்கானிஸ்தான் சவாலைக் கொடுக்கும் அணியாக இருக்கிறது. இலங்கை, வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அனைத்தும் வலுவான போட்டியாளர்கள்.

    குல்தீப் யாதவின் தனித்துவமான பந்துவீச்சு பாணி காரணமாக அவர் பிளேயிங் லெவனில் கண்டிப்பாக சேர்க்கப்பட வேண்டும். அவரது பந்துவீச்சை டி20 கிரிக்கெட்டில் எதிர்கொள்வது கடினம். அவருடைய தேர்வு பற்றிய இறுதி முடிவு பிட்ச் மற்றும் கால சூழ்நிலைகளைப் பொறுத்து அமையும். துபாயில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் பிளேயிங் லெவனில் இடம்பெற வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றங்கள்… மத்திய அரசை தூண்டியது எது? ப.சிதம்பரம் கேள்வி…
    Next Article நிலை குலைந்துள்ள ஆசிரியர்கள்… அரசு துணை நிற்க வேண்டும்… வைகோ அறிவுறுத்தல்…
    Editor TN Talks

    Related Posts

    ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்!. இந்தியாவுக்கு 5 தங்கம்!. வீராங்கனைகள் அபார சாதனை!

    April 11, 2026

    கடைசி வீரரும் விடைபெற்றார்!. 96 வயதில் மறைந்தார் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சி.டி.கோபிநாத்!.

    April 10, 2026

    அணிக்கு திரும்பும் தல தோனி!. தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா சிஎஸ்கே?

    April 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    Trending Posts

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    April 11, 2026

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    April 11, 2026

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    April 11, 2026

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    April 11, 2026

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    April 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.