கரூரில் நடந்த தவெக பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த நிலையில், விஜய் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு முதலமைச்சர் பதிலளித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலை ஒட்டி கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். வேலுச்சாமிபுரத்தில் நடந்த பிரசாரத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பலர் மயக்கம் அடைந்து விழுந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர்.
இந்த துயர சம்பவம் இதயத்தை நொறுக்கியதை தொடர்ந்து இரவோடு இரவாக முதலமைச்சர் ஸ்டாலின் கரூர் விரைந்தார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின் தனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்து கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மிகுந்த துயரத்துடன், மிகவும் கனத்த இதயத்தோடு நின்று கொண்டிருக்கிறேன்.
ஒரு அரசியல் கட்சி நடத்தின கூட்டத்தில், இத்தனை பேரை இழந்த துயரமான சம்பவம் இதுவரை நடக்காதது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டிருந்தது” என்றார்.
இதற்கிடையே விஜய் கைது செய்யப்படுவாரா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஆணையத்தின் அறிக்கை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
