Close Menu
    What's Hot

    அனைத்து நெசவாளர்களுக்கும் ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு!. விஜய் வாக்குறுதி!

    தமிழகத்தில் 234 தொகுதிகள் உருவான ரகசியம்!. 1963-ல் நடந்த ‘மேஜிக்’ சீரமைப்பு இதுதான்!

    பூலுவப்பட்டி ரோடு ஷோ மிஸ்ஸிங்!. தவெக தொண்டர்கள் ஏமாற்றம்!. திருப்பூரில் நடந்தது என்ன?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»வாக்காளர் குளறுபடி; 22.7 லட்சம் தலித், முஸ்லிம் பெயர்கள் நீக்கம் – செல்வப்பெருந்தகை கண்டனம்
    அரசியல்

    வாக்காளர் குளறுபடி; 22.7 லட்சம் தலித், முஸ்லிம் பெயர்கள் நீக்கம் – செல்வப்பெருந்தகை கண்டனம்

    Editor TN TalksBy Editor TN TalksOctober 5, 2025Updated:October 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Selvaperunthagai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    22.7 லட்சம் தலித் மற்றும் முஸ்லிம் பெண்களின் பெயர்கள் திட்டமிட்ட வகையில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

    பீகாரில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள, சிறப்பு தீவிர திருத்த நடைமுறையை தேர்தல் ஆணையம் அமல்படுத்தியது. இதையடுத்து, அதிகாரிகள் இறந்தவர்கள், இடம் மாறியவர்கள், இரட்டை பதிவு கொண்டவர்கள் என 65 லட்சம் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    சிறப்பு தீவிர திருத்தத்தால் பீகார் வாக்காளர் பட்டியல் பெரும் சர்ச்சையை எதிர்கொண்ட நிலையில், தற்போது இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதை அடுத்து, சட்டப்பேரவைத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, “பீகார் மாநிலத்தில் நடைபெற்ற சமீபத்திய சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகளின் போது, மொத்தம் 22.7 லட்சம் தலித் மற்றும் முஸ்லிம் பெண்களின் பெயர்கள் திட்டமிட்ட வகையில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன என்பது மிகப் பெரிய ஜனநாயக அவலமாகும். இது வெறும் தவறோ அல்லது அலட்சியமோ அல்ல, மக்களின் அடிப்படை உரிமையான வாக்குரிமையை பறிக்கும் பெரும் அரசியல் குற்றச்செயல் ஆகும்.

    தன்னிச்சையாகவும், நடுநிலையாகவும் செயல்பட வேண்டிய இந்திய தேர்தல் ஆணையமே ஒன்றிய பாஜக அரசின் அரசியல் விளிம்பில் சிக்கி, “SIR” என்ற குறியீட்டின் பெயரில் வாக்காளர்களை சமூக அடிப்படையில் பிரித்து நீக்கியிருப்பது, அரசியல் நயவஞ்சகத்திற்கும் அரசியலமைப்பை அவமதிப்பதற்கும் உச்சமான சான்று ஆகும்.

    தலித் மற்றும் முஸ்லிம் பெண்கள் ஆகியோரின் வாக்குரிமையை மறுக்கும் இந்த செயல், சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை என்ற இந்திய அரசியலமைப்பின் மூலத்தத்துவங்களுக்கு நேரான துரோகமாகும்.

    ராகுல் காந்தி அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது போல், “இந்தியா மக்களின் குரலில் உயிர்பெற்றது; அதிகாரத்தின் குரலில் அல்ல.” அந்த மக்களின் குரலையே இவ்வாறு மௌனப்படுத்தும் முயற்சி, ஜனநாயகத்தை அழித்து, அதிகாரத்தை அடிமைப்படுத்தும் பாசிச முயற்சியாகும்.

    இந்திய தேர்தல் ஆணையம் இச்சம்பவம் குறித்து உடனடியாக விளக்கம் அளித்து, வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட அனைவரின் பெயர்களையும் மீட்டமைக்க வேண்டும். அதோடு, இதற்குப் பொறுப்பான அதிகாரிகள் மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இந்த ஜனநாயக விரோத செயல்களை கடுமையாகக் கண்டிக்கிறது.‌ வாக்குரிமை என்பது குடிமக்களின் உயிர்நாடி; அதை வெட்டி ஆட்சி நடத்த முடியாது. மக்கள் தான் இறுதி அதிகாரம். மக்கள் தான் ஜனநாயகம். மக்கள் தான் இந்தியா.

    இந்தியாவை பாகுபாடு அல்ல, அன்பு காக்கும்.
    அதிகாரம் அல்ல, உண்மை நிலைக்கும்.
    அராஜகம் அல்ல, ஜனநாயகம் வெல்லும்” என்று தெரிவித்துள்ளார்.

    bihar Dalit Muslim Women Names Removal selvaperunthagai Voter List Revision செல்வப்பெருந்தகை தலித் பீகார் பெயர்கள் நீக்கம் முஸ்லிம் பெண்கள் வாக்காளர் பட்டியல் திருத்தம்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகுழப்பத்தை உண்டாக்கும் ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு போராடும்! – ஆர்.என்.ரவிக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி
    Next Article பிக்பாஸ் சீசன் – 9 ; சினிமாவும், சினிமா சார்ந்தும்..
    Editor TN Talks

    Related Posts

    தமிழகத்தில் 234 தொகுதிகள் உருவான ரகசியம்!. 1963-ல் நடந்த ‘மேஜிக்’ சீரமைப்பு இதுதான்!

    April 14, 2026

    நாடாளுமன்றத்தில் ‘மெகா’ மாற்றம்!. 850 ஆகிறது லோக் சபா பலம்!. தமிழகம், தென் மாநிலங்களின் நிலை என்ன?

    April 14, 2026

    அனல் காற்று வீசும்; 105 டிகிரியைத் தாண்டிய வெயில்!. ஏப்.17 வரை வீட்டுக்குள்ளேயே இருங்க!

    April 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அனைத்து நெசவாளர்களுக்கும் ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு!. விஜய் வாக்குறுதி!

    தமிழகத்தில் 234 தொகுதிகள் உருவான ரகசியம்!. 1963-ல் நடந்த ‘மேஜிக்’ சீரமைப்பு இதுதான்!

    பூலுவப்பட்டி ரோடு ஷோ மிஸ்ஸிங்!. தவெக தொண்டர்கள் ஏமாற்றம்!. திருப்பூரில் நடந்தது என்ன?

    ராக்கெட் லாஞ்சர் வெடித்ததில் மாணவர் உயிரிழப்பு!. டிரெக்கிங் சென்றபோது நேர்ந்த சோகம்!.

    நாடாளுமன்றத்தில் ‘மெகா’ மாற்றம்!. 850 ஆகிறது லோக் சபா பலம்!. தமிழகம், தென் மாநிலங்களின் நிலை என்ன?

    Trending Posts

    அனைத்து நெசவாளர்களுக்கும் ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு!. விஜய் வாக்குறுதி!

    April 14, 2026

    தமிழகத்தில் 234 தொகுதிகள் உருவான ரகசியம்!. 1963-ல் நடந்த ‘மேஜிக்’ சீரமைப்பு இதுதான்!

    April 14, 2026

    பூலுவப்பட்டி ரோடு ஷோ மிஸ்ஸிங்!. தவெக தொண்டர்கள் ஏமாற்றம்!. திருப்பூரில் நடந்தது என்ன?

    April 14, 2026

    ராக்கெட் லாஞ்சர் வெடித்ததில் மாணவர் உயிரிழப்பு!. டிரெக்கிங் சென்றபோது நேர்ந்த சோகம்!.

    April 14, 2026

    நாடாளுமன்றத்தில் ‘மெகா’ மாற்றம்!. 850 ஆகிறது லோக் சபா பலம்!. தமிழகம், தென் மாநிலங்களின் நிலை என்ன?

    April 14, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.