Close Menu
    What's Hot

    தோனி @ 45: ராஞ்சியில் உதித்த சிங்கம்… தமிழகம் தத்தெடுத்த ‘தல’… மொழி கடந்த ஒரு மஞ்சள் சகாப்தம்!

    பெண்களைக் கத்தியைக் காட்டிய மிரட்டிய தவெக நிர்வாகி… 100 நாள் வேலைத் திட்டத்தில் தலையிட்டு அடாவடி

    வாட்ஸ்அப் ‘Username’ வசதி… மெட்டா பதிலளிப்பது எப்போது?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»என்டிஏ சட்டமன்ற குழு தலைவராக நிதிஷ் குமார் ஒருமனதாக தேர்வு
    இந்தியா

    என்டிஏ சட்டமன்ற குழு தலைவராக நிதிஷ் குமார் ஒருமனதாக தேர்வு

    Editor TN TalksBy Editor TN TalksNovember 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    nitish
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சட்டமன்றக் குழு தலைவராக நிதிஷ் குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    நடந்து முடிந்த பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில், பாஜக 89, ஜேடியு 85, எல்ஜேபி (ஆர்வி) 19, ஹெச்ஏஎம் 5, ஆர்எல்எம் 4 இடங்களில் வெற்றி பெற்றன. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை அடுத்து, புதிய அரசாங்கம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை தேசிய ஜனநாயகக் கூட்டணி மேற்கொண்டு வருகிறது.

    முக்கிய நடவடிக்கையாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சட்டமன்றக் குழு தலைவராக ஜேடியு தலைவரும் பிஹார் முதல்வருமான நிதிஷ் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கான கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. இதில், பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான தர்மேந்திர பிரதான், பிஹார் மாநில பாஜக தலைவர்கள் சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா, திலிப் குமார் ஜெய்ஸ்வால், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பாஸ்வான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக இன்று காலை, நிதிஷ் குமாரின் பாட்னா இல்லத்தில் ஜேடியு எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெற்றது. இதில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜேடியு எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவரான நிதிஷ் குமார், கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இதேபோல், பாட்னாவில் உள்ள பாஜக தலைமையகமான அடல் சபஹாரில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டமும் இன்று காலை நடைபெற்றது. இதில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களும், கட்சியின் மேலிட பார்வையாளராக உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியாவும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவராக சாம்ராட் சவுத்ரி முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்றக் குழு துணைத் தலைவராக விஜய் குமார் சின்ஹா தேர்வு செய்யப்பட்டார். கேசவ பிரசாத் மவுரியா இதனை அறிவித்தார்.

    ஆளுநர் ஆரிப் கானைச் சந்தித்த நிதிஷ் குமார், பிஹார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தைக் கொடுத்தார். மேலும், புதிய அரசை அமைக்க உரிமை கோரி கடிதம் அளித்தார். பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நாளை காலை 11.30 மணி அளவில் புதிய அரசு பதவியேற்க இருக்கிறது. இதில், 10வது முறையாக நிதிஷ் குமார் பதவியேற்க இருக்கிறார். இதில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக மூத்த தலைவர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ்நாட்டில் 95.16% SIR விண்ணப்பங்கள் வினியோகம்!
    Next Article கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் முடக்கம்: நவ.20, 21-ல் திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்!
    Editor TN Talks

    Related Posts

    தோனி @ 45: ராஞ்சியில் உதித்த சிங்கம்… தமிழகம் தத்தெடுத்த ‘தல’… மொழி கடந்த ஒரு மஞ்சள் சகாப்தம்!

    July 6, 2026

    வாட்ஸ்அப் ‘Username’ வசதி… மெட்டா பதிலளிப்பது எப்போது?

    July 6, 2026

    ஜம்மு – காஷ்மீரில் பெரும் நிலச்சரிவு!. மண்ணுக்குள் புதைந்த வாகனங்கள்!

    July 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தோனி @ 45: ராஞ்சியில் உதித்த சிங்கம்… தமிழகம் தத்தெடுத்த ‘தல’… மொழி கடந்த ஒரு மஞ்சள் சகாப்தம்!

    பெண்களைக் கத்தியைக் காட்டிய மிரட்டிய தவெக நிர்வாகி… 100 நாள் வேலைத் திட்டத்தில் தலையிட்டு அடாவடி

    வாட்ஸ்அப் ‘Username’ வசதி… மெட்டா பதிலளிப்பது எப்போது?

    இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20: இங்கிலாந்து அணி வீரர்கள் அறிவிப்பு

    நீர்கொழும்பு சிறையில் பயங்கர மோதல்!. போலீஸ் அதிகாரிகள் உட்பட 30 பேர் பலி; 100க்கும் மேற்பட்டோர் காயம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.