Close Menu
    What's Hot

    செந்தில்பாலாஜி சகோதரரின் முன்ஜாமீன் மனு ; வேறு நீதிபதிக்கு விசாரணையை மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு

    அடுத்த 10 ஆண்டுகளில் நீர் மேலாண்மைக்காக ரூ.1 லட்சம் கோடி அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

    கோவையில் பைக் திருட முயன்ற வடமாநில வாலிபர்.. கையும் களவுமாக சிக்கி கதறல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»செங்கோட்டை முதல் காஷ்மீர் வரை இந்தியாவை தாக்கினோம் – பாக். அரசியல் பிரமுகர்
    உலகம்

    செங்கோட்டை முதல் காஷ்மீர் வரை இந்தியாவை தாக்கினோம் – பாக். அரசியல் பிரமுகர்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    paks
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    செங்கோட்டை முதல் காஷ்மீர் காடுகள் வரை இந்தியாவை தாக்கியுள்ளதாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முன்னாள் ‘பிரதமர்’ என அறியப்படும் பாகிஸ்தான் அரசியல் பிரமுகர் சவுத்ரி அன்வர் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவுக்கு எல்லை தாண்டிய பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்குகிறது பாகிஸ்தான். இந்தச் சூழலில் கடந்த ஏப்ரலில் நடந்த பஹல்காம் தீவிரவாத தாக்குதல் மற்றும் அண்மையில் டெல்லி – செங்கோட்டையில் நடந்து கார் குண்டு வெடிப்பு தற்கொலை படை தாக்குதலை சுட்டிக்காட்டி சவுத்ரி அன்வர் உல் ஹக் பேசியுள்ளார்.

    “பலூசிஸ்தானில் அமைதியற்ற சூழல் தொடர்ந்தால் இந்தியாவை செங்கோட்டை முதல் காஷ்மீர் காடுகள் வரை தாக்குவோம் என நான் முன்பே சொல்லி இருந்தேன். இறைவனின் அருளால் நாம் அதை செய்துள்ளோம். அவர்கள் இன்னும் உயிரிழந்தவர்களின் உடல்களை எண்ணிக் கொண்டுள்ளனர். ஆயுதத்துடன் டெல்லிக்குள் நுழைந்த நபர், இந்த தாக்குதலை நடத்தினார்” என சவுத்ரி அன்வர் உல் ஹக் கூறியுள்ளார்.

    பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் பகுதியில் நிலவும் அமைதியற்ற சூழலுக்கு இந்தியாதான் காரணம் என பாகிஸ்தான் தற்போது தொடர்ந்து கூறி வருகிறது. அண்மையில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு வெளியே நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமடைந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு தெரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) தீவிரவாத படை பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில், இந்தத் தாக்குதலுக்கு இந்தியாதான் காரணம் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்திருந்தார். இப்படி இந்தியா மீது தொடர்ந்து பழி சொல்லி வருகிறது பாகிஸ்தான். இதற்கு முன்பும் பாகிஸ்தானை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் இந்தியா மீது இது மாதிரியான குற்றச்சாட்டுகளை வைத்தது உண்டு.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநான் காப்புரிமை கேட்பதில்லை – தேவா
    Next Article புதுச்சேரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் கட்சியிலிருந்து திடீர் விலகல்
    Editor TN Talks

    Related Posts

    வெனிசுலாவை புரட்டிப்போட்ட இரட்டை நிலநடுக்கம்!. பலி எண்ணிக்கை 3,300 ஆக உயர்வு!. 50,000 பேர் மாயம்!

    July 6, 2026

    6 நாள்.. 3 நாடுகள்..!! சுற்றுப்பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி..!!

    July 6, 2026

    நேட்டோ மாநாட்டில் ஜெலன்ஸ்கியை சந்திக்கிறார் டிரம்ப்..!! உக்ரைன் போர் முடிவுக்கு புதிய முயற்சி..!!

    July 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    செந்தில்பாலாஜி சகோதரரின் முன்ஜாமீன் மனு ; வேறு நீதிபதிக்கு விசாரணையை மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு

    அடுத்த 10 ஆண்டுகளில் நீர் மேலாண்மைக்காக ரூ.1 லட்சம் கோடி அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

    கோவையில் பைக் திருட முயன்ற வடமாநில வாலிபர்.. கையும் களவுமாக சிக்கி கதறல்!

    ஜம்மு – காஷ்மீரில் பெரும் நிலச்சரிவு!. மண்ணுக்குள் புதைந்த வாகனங்கள்!

    வண்டலூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்!. பெரும் விபத்து தவிர்ப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.