Close Menu
    What's Hot

    காய் நகர்த்தும் செங்கோட்டையன்!. விருப்பமனு அளிக்காத அதிமுக முக்கிய புள்ளிகள்!. அதிரடி உத்தரவிட்ட EPS!.

    பொங்கல் பரிசு தொகுப்பு!. டோக்கன் வினியோகம் எப்போது?. அதிகாரிகள் தகவல்!  

    பெரும் சோகம்!. உலகின் மிக அதிக எடை கொண்ட நபர் திடீர் மரணம்!. 

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»தேர்தல் ஆணையம் மீதான நம்பிக்கையை உடைக்க காங்கிரஸ் முயற்சி: ராகுலை கண்டித்து 272 பிரமுகர்கள் கடிதம்
    அரசியல்

    தேர்தல் ஆணையம் மீதான நம்பிக்கையை உடைக்க காங்கிரஸ் முயற்சி: ராகுலை கண்டித்து 272 பிரமுகர்கள் கடிதம்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Rahul Gandhi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தேர்​தல் ஆணை​யம் மீதான நம்​பிக்​கையை உடைக்க காங்​கிரஸ் கட்சி முயற்​சிப்​ப​தாக ஓய்​வு​பெற்ற நீதிப​தி​கள், உயர் அதி​காரி​கள் உள்​ளிட்ட 272 முக்​கிய பிர​முகர்​கள் குற்றம்சாட்டி உள்​ளனர்.

    ஓய்​வு​பெற்ற 16 நீதிப​தி​கள், 123 அரசு உயர் அதி​காரி​கள், 133 ராணுவ உயர் அதி​காரி​கள் உள்​ளிட்ட 272 முக்​கிய பிர​முகர்​கள் ‘தேசிய அரசி​யல் சாசன அமைப்​பு​கள் மீதான தாக்​குதல்’ என்ற தலைப்​பில் திறந்த மடல் எழுதி உள்​ளனர்.

    அதில் கூறி​யிருப்​ப​தாவது: சில அரசி​யல் தலை​வர்​கள், நேர்​மை​யான மாற்று கொள்​கைகளை முன்​வைப்​ப​தற்கு பதில், ஆதா​ரமற்ற குற்​றச்​சாட்​டு​களை முன்​வைத்து அரசி​யல் நாடகம் நடத்​துகிறார்​கள். அவர்​கள் இந்​திய பாது​காப்​புப் படை​யினரின் வீரத்​தை​யும் சாதனை​களை​யும் சந்​தேகிக்​கின்​றனர்.

    நீதித் துறை​யின் செயல்​ பாட்​டை​யும் சந்​தேகிக்​கின்​றனர். நாடாளு​மன்​றத்​தை​யும் அதன் அதி​காரி​களை​யும் குறை கூறுகின்​றனர். இப்​போது அதேமுறை​யில் இந்​திய தேர்​தல் ஆணை​யத்​தின் நேர்மை கண்ணி​யத்​தின் மீது குறை கூறுகிறார்​கள்.

    குறிப்​பாக, வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி (எஸ்ஐஆர்) என்ற பெயரில் தேர்​தல் ஆணை​யம் தொடர்ந்து வாக்குகளை திருடு​வ​தாக காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்தி குற்​றம்​சாட்டி வரு​கிறார். தேர்​தல் ஆணை​யத்​துக்கு எதிராக 100% ஆதா​ரம் இருக்​கிறது என்​றும் ஹைட்​ரஜன் குண்டு இருக்​கிறது என்​றும் அவர் தெரி​வித்​தார். ஆனால், அதற்கு உரிய ஆதா​ரங்​களை அவர் வழங்​க​வில்​லை.

    காங்​கிரஸ் கட்​சி​யின் பிற தலை​வர்​கள், பிற எதிர்க்​கட்​சித் தலைவர்​கள், சில தன்​னார்வு தொண்டு நிறு​வனங்​கள் உள்ளிட்டவை​யும் இதே மாதிரி​யான குற்​றச்​சாட்​டு​களை முன்வைக்​கின்​றன. ஆனால் இவை அனைத்​தும் அடிப்​படை ஆதாரமற்ற குற்​றச்​சாட்​டு​கள் என ஆய்​வில் தெரிய​வந்​துள்​ளது.

    தேர்​தல் ஆணை​யம் எஸ்​ஐஆர் நடை​முறையை வெளிப்​படை​யாக தெரி​வித்​துள்​ளது. இதன்​மூலம் நீதி​மன்ற உத்​தர​வின்​படி இந்த பணி நடை​பெறு​வது தெரி​கிறது. தகு​தி​யற்ற பெயர்​கள் பட்டியலில் இருந்து நீக்​கப்​பட்​டு, தகு​தி​யுடைய வாக்​காளர்​கள் சேர்க்​கப்​பட்​டுள்​ளனர்.

    தொடர்ந்து தேர்​தலில் தோல்வி அடை​யும் அரசி​யல் கட்​சிகள் விரக்​தி​யடைந்து இது​போன்ற குற்​றச்​சாட்​டு​களை கூறி வருகின்றன. தேர்​தல் ஆணை​யம் தனது வெளிப்​படைத் ​தன்மையை தொடர வேண்​டும். அதே​நேரம், அரசி​யல் சாசன அமைப்​பு​களின் செயல்​முறையை அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் மதிக்க வேண்​டும். ஆதா​ரமற்ற குற்​றச்​சாட்​டு​களை முன்​வைக்​கக் கூடாது. ஜனநாயக தீர்ப்பை ஏற்​க வேண்​டும்​. இவ்வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleயாருக்கு அதிகாரம்? – கோஷ்டி அரசியலில் கொடிகட்டிப் பறக்கும் தவெக
    Next Article ஜி 20 உச்சி மாநாடு: தெ.ஆப்., புறப்பட்டார் பிரதமர் மோடி!
    Editor TN Talks

    Related Posts

    பொங்கல் கரும்பை உழவர்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்- அன்புமணி

    January 1, 2026

    “2026-ல் தர்மம் வெல்லும்; 26 தொகுதிகளில் பா.ம.க வெற்றி நிச்சயம்!” -பா.ம.க செயல் தலைவர் ப.ஸ்ரீகாந்தி

    January 1, 2026

    காங்கிரசில் விருப்ப மனு அவகாசம் நீட்டிப்பா? செல்வ பெருந்தகை பதில்

    December 31, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காய் நகர்த்தும் செங்கோட்டையன்!. விருப்பமனு அளிக்காத அதிமுக முக்கிய புள்ளிகள்!. அதிரடி உத்தரவிட்ட EPS!.

    பொங்கல் பரிசு தொகுப்பு!. டோக்கன் வினியோகம் எப்போது?. அதிகாரிகள் தகவல்!  

    பெரும் சோகம்!. உலகின் மிக அதிக எடை கொண்ட நபர் திடீர் மரணம்!. 

    சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பிரபல தொடக்க ஆட்டக்காரர் ஓய்வு!. உருக்கமான பேச்சு!. ஆரம்பித்த இடத்திலேயே முடிவு!. 

    இப்படித் தூங்கினால் விரைவில் முதுமை வந்துவிடும்!. இந்த தவறை செய்யாதீர்கள்!.

    Trending Posts

    திருப்பதி சொர்க்க வாசல் தரிசனம்!. டேக்கனே தேவையில்லை!. பக்தர்களுக்கு ஃப்ரீ!.

    December 16, 2025

    காய் நகர்த்தும் செங்கோட்டையன்!. விருப்பமனு அளிக்காத அதிமுக முக்கிய புள்ளிகள்!. அதிரடி உத்தரவிட்ட EPS!.

    January 2, 2026

    பொங்கல் பரிசு தொகுப்பு!. டோக்கன் வினியோகம் எப்போது?. அதிகாரிகள் தகவல்!  

    January 2, 2026

    பெரும் சோகம்!. உலகின் மிக அதிக எடை கொண்ட நபர் திடீர் மரணம்!. 

    January 2, 2026

    சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பிரபல தொடக்க ஆட்டக்காரர் ஓய்வு!. உருக்கமான பேச்சு!. ஆரம்பித்த இடத்திலேயே முடிவு!. 

    January 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.