Close Menu
    What's Hot

    சொத்தை பழம் போல் இன்றைய பட்ஜெட்!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!.

    இடைக்கால பட்ஜெட்டை 2 மணிநேரம் 22 நிமிடம் வாசித்த தங்கம் தென்னரசு!.

    பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு குட்நியூஸ்!. கைத்தறி, கதர் துறைக்கு ரூ.1,943 கோடி ஒதுக்கீடு!. 

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»அடுத்த 9 நாட்கள் யாரும் வெளியே போகக் கூடாது! அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு பறந்த உத்தரவு!
    அரசியல்

    அடுத்த 9 நாட்கள் யாரும் வெளியே போகக் கூடாது! அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு பறந்த உத்தரவு!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 25, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    admk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிமுகவினர் அடுத்த 9 நாட்களுக்கு தங்கள் மாவட்டத்தை விட்டு வெளியே வராமல், வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகளை (SIR) கவனமுடன் செய்ய வேண்டும் என அக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR), அதிமுகவினருக்கு கிடைத்த வரம் என்றும் அவர் கூறினார்.

    தமிழகத்தில் தற்போது எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு திமுக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எஸ்ஐஆர்-க்கு வரவேற்பு தெரிவித்துள்ளன.

    சிறுபான்மையினர் மற்றும் பாஜகவுக்கு எதிரானவர்களின் வாக்குகளை திட்டமிட்டு நீக்கும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக திமுக குற்றம்சாட்டி வருகிறது. மேலும், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. ஆனால், எஸ்ஐஆர்-க்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

    இதையடுத்து, தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதுவரை 6.19 கோடி பேருக்கு விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், 59 சதவீத விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. விண்ணப்பங்களை பூர்ததி செய்து கொடுக்க டிசம்பர் 4 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது ஒருபுறம் இருக்க, சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் காணொளி காட்சி மூலமாக கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் எஸ்ஐஆர் பணிகள் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.

    அப்போது பேசிய அவர், “வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நமக்கு கிடைத்த வரம் என்பதை யாரும் மறக்கக் கூடாது. 21 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இப்பணியை அனைத்து மாவட்ட செயலாளர்களும் துல்லியமாக, சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.

    மீதமுள்ள 9 நாட்களும், மாவட்ட செயலாளர்கள், தங்கள் மாவட்டத்தை விட்டு வெளியே செல்லாமல், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளை கவனமாக செய்ய வேண்டும். இறந்தவர்கள், குடி பெயர்ந்தவர்களை நீக்கி துல்லியமான வாக்காளர் பட்டியல் உருவாக அயராது உழைக்க வேண்டும்” என எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article140 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை! முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!
    Next Article உதடு வெடிப்பு முதல் செரிமானம் வரை – குளிர்கால பிரச்சனைகளை தடுக்கும் தேங்காய் எண்ணெய்!
    Editor TN Talks

    Related Posts

    சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?

    February 16, 2026

    திருமாவை நெருக்கும் சில சிறுத்தைகள்..! திமுக போடும் மாஸ்டர் பிளான்!

    February 13, 2026

    ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டில் எடுபடாது; ஏற்கப்படாது…! மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து..!

    February 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சொத்தை பழம் போல் இன்றைய பட்ஜெட்!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!.

    இடைக்கால பட்ஜெட்டை 2 மணிநேரம் 22 நிமிடம் வாசித்த தங்கம் தென்னரசு!.

    பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு குட்நியூஸ்!. கைத்தறி, கதர் துறைக்கு ரூ.1,943 கோடி ஒதுக்கீடு!. 

    ஜிஎஸ்டியால் நடப்பாண்டில் ரூ.9,600 கோடி இழப்பு ஏற்படும்!. தங்கம் தென்னரசு!

    சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.1634 கோடி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!.

    Trending Posts

    மருத்துவத்துறைக்கு ரூ.22,090 கோடி; எரிசக்தித்துறைக்கு ரூ.18,301 கோடி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!

    February 17, 2026

    ஜிஎஸ்டியால் நடப்பாண்டில் ரூ.9,600 கோடி இழப்பு ஏற்படும்!. தங்கம் தென்னரசு!

    February 17, 2026

    காங்கிரஸ் தலைவராக ஈராண்டுகள் நிறைவு..! செல்வப்பெருந்தகை செய்தது என்ன?

    February 17, 2026

    இடைக்கால பட்ஜெட்டை 2 மணிநேரம் 22 நிமிடம் வாசித்த தங்கம் தென்னரசு!.

    February 17, 2026

    சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.1634 கோடி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!.

    February 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.