Close Menu
    What's Hot

    புதுக்கோட்டை: மாநகராட்சி குளங்களில் 15,000 மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்!

    பெரம்பலூர் : மதுரை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து தீப்பிடிப்பு..! 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்பு..!

    சிதம்பரம்: மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா விமர்சையாக கொடியேற்றத்துடன் தொடக்கம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»உன் வீட்டுல ஒரு ரூபா கூட இல்ல இதுல இத்தன கேமராவா – திருடன் எழுதி வைத்த கடிதம் !!!
    தமிழ்நாடு

    உன் வீட்டுல ஒரு ரூபா கூட இல்ல இதுல இத்தன கேமராவா – திருடன் எழுதி வைத்த கடிதம் !!!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 26, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20251126 201327
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நெல்லை புறநகர் பகுதியான பேட்டை, ஐஓபி காலனியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் பால். 57 வயதான இவருக்கு சொந்தமான மகள் மதுரையில் தனியார் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அவருடைய மகளுக்கு துணையாக அவருடைய மனைவியும் அவருடைய மகளுடன் இணைந்து மதுரையில் வசித்து வருகின்றனர்.

    இதனால் ஜேம்ஸ் பால் அவ்வப்போது நெல்லையில் இருந்து மதுரைக்குச் சென்று தன்னுடைய மனைவி மற்றும் மகளை சந்தித்து வருவார். தன்னுடைய வீட்டில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதால், ஜேம்ஸ் தனது மொபைல் போனிலிருந்து வீட்டை கண்காணித்து கொள்வார்.

    அதன்படி கடந்த நவம்பர் 24ஆம் தேதி மதுரைக்கு ஜேம்ஸ் சென்று இருக்கிறார். அவர் சென்ற மறுநாள் 25ஆம் தேதி வீட்டின் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை என்று தெரிந்தவுடன், அங்கிருந்து தொலைபேசியில் தனது வீட்டின் பக்கத்தில் உள்ள நபரை அழைத்து தனது வீட்டில் சோதனை இடுமாறு கூறியிருக்கிறார்.

    பக்கத்து வீட்டு நபர் சோதனையிடும் பொழுது ஜேம்ஸ் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பது வெளிவந்தது. தகவல் அறிந்த ஜேம்ஸ் விரைந்து நெல்லைக்கு திரும்பினார். வீட்டிற்கு வந்து பார்க்கையில் வீட்டின் பீரோ திறக்கப்பட்டு உள்ளிருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் வீட்டில் வைத்திருந்த 25 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் காணாமல் போயிருந்தது.

    அதோடு திருட வந்த திருடன் ஜேம்ஸ் அவர்களுக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு போயிருக்கிறான்.”வீட்டில் ஒரு ரூபாய் கூட இல்லை.இதில் எத்தனை சிசிடிவி கேமராக்கள். அடுத்த முறை என்னைப் போல ஒரு திருடன் வந்தால் அவன் ஏமாறாமல் இருக்க காசு வை. மன்னித்துக் கொள்ளவும் – இப்படிக்கு திருடன்”, இவ்வாறு கடிதம் எழுதி வைத்துவிட்டு திருடிய திருடனை போலீசார் தேடி வருகின்றன.

    IMG 20251126 201251 IMG 20251126 201314 IMG 20251126 201304

    மறுபக்கம் இவ்வாறு நக்கலாக கடிதம் எழுதி வைத்து திருட வந்த அத்திருடனின் செயலால் அக்கம் பக்கத்தில் இருக்கும் மக்கள் அனைவரும் கடும் கோபத்தில் உள்ளனர்.

    Nellai
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபேரம் பேசிய திமுக… பிடிகொடுக்காத செங்கோட்டையன்
    Next Article 2 பேரை துடிக்கத் துடிக்க வெட்டிக் கொன்ற நபர்… கோவில்பட்டி அருகே பரபரப்பு
    Editor TN Talks

    Related Posts

    புதுக்கோட்டை: மாநகராட்சி குளங்களில் 15,000 மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்!

    July 18, 2026

    பெரம்பலூர் : மதுரை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து தீப்பிடிப்பு..! 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்பு..!

    July 18, 2026

    125 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களிடம் கட்டாய வசூல் புகார்: ‘கட்சி நிதி’ கேட்டு மிரட்டல்?

    July 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    புதுக்கோட்டை: மாநகராட்சி குளங்களில் 15,000 மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்!

    பெரம்பலூர் : மதுரை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து தீப்பிடிப்பு..! 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்பு..!

    சிதம்பரம்: மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா விமர்சையாக கொடியேற்றத்துடன் தொடக்கம்!

    125 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களிடம் கட்டாய வசூல் புகார்: ‘கட்சி நிதி’ கேட்டு மிரட்டல்?

    பழனி கோவில் நில சர்ச்சை: சேதுபதி வீட்டில் இறங்கிய சிபிசிஐடி.. தலைமறைவானவருக்கு வலை..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.