Close Menu
    What's Hot

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தஞ்சையில் பள்ளிக்கு சென்ற ஆசிரியை வழிமறித்து கொலை – காதலனின் கொடூர செயல்
    தமிழ்நாடு

    தஞ்சையில் பள்ளிக்கு சென்ற ஆசிரியை வழிமறித்து கொலை – காதலனின் கொடூர செயல்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 28, 2025Updated:November 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    mrd
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆலங்குடி அருகே காதலித்த பெண்ணிற்கு நிச்சயம் ஆனதால், காதலனே காதலியை நடுரோட்டில் வைத்து வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தஞ்சாவூர் மாவட்டம் மாரியம்மன் கோயில் அருகே மேலகளக்குடியைச் சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவரது மகள் காவியா (26). இவர் ஆலங்குடி அரசு தொடக்கப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரும், அதே ஊரைச் சேர்ந்த அஜித்குமார் (29) என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் இவர்களுடைய காதல் இரு வீட்டாருக்கும் தெரிய வந்திருக்கிறது. இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும், இவர்களது திருமணத்திற்கு காவியாவின் பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

    தொடர்ந்து, காவியாவை வற்புறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவருடைய உறவினர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். ஆனால் இதுகுறித்து அஜித்குமாரிடம் தெரிவிக்காமல் காவியா அவருடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இந்நிலையில்,  இரவு இருவரும் செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது, தனக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட தகவலை அஜித்குமாரிடம் தெரிவித்த காவியா, அந்த புகைப்படங்களையும் அனுப்பியுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமார், நேற்று (நவ.27) காலை வழக்கம்போல் காவியா தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தபோது, மாரியம்மன் கோயில் கொத்தட்டை காலனி ராமகிருஷ்ண மடம் அருகே அவரை வழிமறித்து அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர், தான் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் காவியாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த காவியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்து அந்த இடத்திற்குச் சென்ற அம்மாபேட்டை போலீசார், காவியாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, அஜித்குமாரை கைது செய்து பாபநாசம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பள்ளிக்குச் சென்ற ஆசிரியையை காதலன் நடுரோட்டில் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜோதிட நாள்காட்டி 28.11.2025 | கார்த்திகை 12 – விசுவாவசு
    Next Article தூத்துக்குடியில் நீடிக்கும் கனமழை – மருத்துவமனைக்குள் புகுந்த தண்ணீர்
    Editor TN Talks

    Related Posts

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    December 26, 2025

    சமூகவலைதளங்களை பயன்படுத்த சிறுவர்களுக்குத் தடை! மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

    December 26, 2025

    சுனாமி நினைவு தினம்: கடலோர மாவட்டங்களில் கண்ணீர் அஞ்சலி

    December 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    அதிமுகவில் டிச.31 வரை விருப்ப மனு அளிக்கலாம்! இபிஎஸ் அறிவிப்பு

    தேர்தல் நேரத்தில் கோயில், பக்தி ! திருமா. மீது குஷ்பு தாக்கு

    Trending Posts

    வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு தமிழகம் துணை நிற்கும்; முதல்வர் ஸ்டாலின்

    December 26, 2025

    தேமுதிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடா? ஜெயக்குமார் சொன்ன பதில் இதுதான்

    December 26, 2025

    சுனாமி நினைவு தினம்: கடலோர மாவட்டங்களில் கண்ணீர் அஞ்சலி

    December 26, 2025

    இந்தியாவிலேயே தமிழகம் தனிகாட்டு ராஜா: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

    December 26, 2025

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    December 26, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.