Close Menu
    What's Hot

    நிலநடுக்கங்களால் உருக்குலைந்த வெனிசுலா..! ரூ.95,000கோடி இழப்பு என தகவல்..!

    சிவகாசி : பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து..! மீட்பு பணிகள் தீவிரம்..!

    கோவளம் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? இந்திய கம்யூனிஸ்ட் விளக்கம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»தஞ்சையில் பள்ளிக்கு சென்ற ஆசிரியை வழிமறித்து கொலை – காதலனின் கொடூர செயல்
    தமிழ்நாடு

    தஞ்சையில் பள்ளிக்கு சென்ற ஆசிரியை வழிமறித்து கொலை – காதலனின் கொடூர செயல்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 28, 2025Updated:November 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    mrd
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆலங்குடி அருகே காதலித்த பெண்ணிற்கு நிச்சயம் ஆனதால், காதலனே காதலியை நடுரோட்டில் வைத்து வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தஞ்சாவூர் மாவட்டம் மாரியம்மன் கோயில் அருகே மேலகளக்குடியைச் சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவரது மகள் காவியா (26). இவர் ஆலங்குடி அரசு தொடக்கப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரும், அதே ஊரைச் சேர்ந்த அஜித்குமார் (29) என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் இவர்களுடைய காதல் இரு வீட்டாருக்கும் தெரிய வந்திருக்கிறது. இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும், இவர்களது திருமணத்திற்கு காவியாவின் பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

    தொடர்ந்து, காவியாவை வற்புறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவருடைய உறவினர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். ஆனால் இதுகுறித்து அஜித்குமாரிடம் தெரிவிக்காமல் காவியா அவருடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இந்நிலையில்,  இரவு இருவரும் செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது, தனக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட தகவலை அஜித்குமாரிடம் தெரிவித்த காவியா, அந்த புகைப்படங்களையும் அனுப்பியுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமார், நேற்று (நவ.27) காலை வழக்கம்போல் காவியா தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தபோது, மாரியம்மன் கோயில் கொத்தட்டை காலனி ராமகிருஷ்ண மடம் அருகே அவரை வழிமறித்து அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர், தான் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் காவியாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த காவியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்து அந்த இடத்திற்குச் சென்ற அம்மாபேட்டை போலீசார், காவியாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, அஜித்குமாரை கைது செய்து பாபநாசம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பள்ளிக்குச் சென்ற ஆசிரியையை காதலன் நடுரோட்டில் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜோதிட நாள்காட்டி 28.11.2025 | கார்த்திகை 12 – விசுவாவசு
    Next Article தூத்துக்குடியில் நீடிக்கும் கனமழை – மருத்துவமனைக்குள் புகுந்த தண்ணீர்
    Editor TN Talks

    Related Posts

    நிலநடுக்கங்களால் உருக்குலைந்த வெனிசுலா..! ரூ.95,000கோடி இழப்பு என தகவல்..!

    July 2, 2026

    சிவகாசி : பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து..! மீட்பு பணிகள் தீவிரம்..!

    July 2, 2026

    கோவளம் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? இந்திய கம்யூனிஸ்ட் விளக்கம்

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நிலநடுக்கங்களால் உருக்குலைந்த வெனிசுலா..! ரூ.95,000கோடி இழப்பு என தகவல்..!

    சிவகாசி : பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து..! மீட்பு பணிகள் தீவிரம்..!

    கோவளம் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? இந்திய கம்யூனிஸ்ட் விளக்கம்

    பெங்களூரு ஐடி நிறுவன கிரெச்சில் குழந்தைகள் சித்ரவதை: விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்

    இந்தியா – ஜப்பான் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து – பிரதமர் மோடி அறிவிப்பு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.