Close Menu
    What's Hot

    தமிழகத்தின் கழுத்தை நெரிக்கும் 6 நிதி நெருக்கடிகள்… வெள்ளை அறிக்கை தரும் பகீர் எச்சரிக்கை!

    இட ஒதுக்கீடு உயர்வு கோரிக்கையை  தவறாகச் சித்தரிப்பதா? பாஜகவுக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்

    தமிழ்நாட்டின் நிதி நிலைமை: வெள்ளை அறிக்கை வெளியிட்டார் நிதி அமைச்சர் மரியவில்சன்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»டெல்லி காற்று மாசு விவகாரத்தில் மோடி மவுனம் காப்பது ஏன்? – ராகுல் காந்தி கேள்வி
    இந்தியா

    டெல்லி காற்று மாசு விவகாரத்தில் மோடி மவுனம் காப்பது ஏன்? – ராகுல் காந்தி கேள்வி

    Editor TN TalksBy Editor TN TalksNovember 29, 2025Updated:November 29, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rhll
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டெல்லியில் காற்று மாசுபாட்டால் குழந்தைகள் மூச்சு திணறிக் கொண்டிருக்கும் போது, பிரதமர் மோடி தொடர்ந்து மவுனம் காப்பது ஏன் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்.

    இதுகுறித்து ராகுல் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: டெல்லியில் குழந்தைகள் நச்சுக் காற்றை சுவாசித்து வளர்கின்றன என்று பெற்றோர் கூறுகின்றனர். காற்று மாசு பாட்டால் டெல்லி மக்கள் சோர்வடைந்து, வெளியில் வர பயந்து வாழும் நிலை உருவாகியுள்ளது.

    இந்தியாவின் குழந்தைகள் நம் கண் முன்பாகவே மூச்சு திணறிக் கொண்டிருக்கும்போது நாட்டின் பிரதமராக மோடியால் எப்படி அமைதி காக்க முடிகிறது?

    இந்த இக்கட்டான சூழலை சமாளிக்க அரசு ஒரு உருப்படியான அவசர திட்டத்தை வகுக்கவில்லை. இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்ற வேகமோ, பொறுப்போ இல்லை. டெல்லியில் சுகாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, டெல்லியின் மோசமான காற்று மாசுபாடு குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் தேவை. காற்றின் நச்சு அளவை கையாளக்கூடிய கடுமையான மற்றும் உடனடியாக செயல்படுத்தக் கூடிய அவசர செயல்திட்டமே தற்போது நமக்கு தேவை. நமது குழந்தைகளுக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க கொடுப்பது நமது கடமை. இதில் சாக்குப்போக்கு, கவனச் சிதறல்கள் கூடாது. இவ்வாறு ராகுல் தெரிவித்துள்ளார்.

    கடந்த 15 நாட்களாக டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. வரும் வாரங்களில் நிலைமை இன்னும் மோசமாகலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் ராகுல் இவ்வாறு கூறியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாமகவை அபகரிக்க முயற்சி… அன்புமணி மீது ராமதாஸ் தாக்கு
    Next Article மாரி செல்வராஜ் திரைப்படங்கள் எப்பொழுதும் கனமாக அழுத்தமாக இருக்கும் – கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் !!!
    Editor TN Talks

    Related Posts

    புதுவை அமைச்சரவை விரிவாக்கம்..!! நாளை 3 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு..!!

    June 16, 2026

    நாடு முழுவதும் டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை..!! காரணம் என்ன தெரியுமா..??

    June 16, 2026

    12வது சர்வதேச யோகா தினம்..!! கொல்கத்தா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி..!!

    June 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழகத்தின் கழுத்தை நெரிக்கும் 6 நிதி நெருக்கடிகள்… வெள்ளை அறிக்கை தரும் பகீர் எச்சரிக்கை!

    இட ஒதுக்கீடு உயர்வு கோரிக்கையை  தவறாகச் சித்தரிப்பதா? பாஜகவுக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்

    தமிழ்நாட்டின் நிதி நிலைமை: வெள்ளை அறிக்கை வெளியிட்டார் நிதி அமைச்சர் மரியவில்சன்

    யாருக்கு யார் பாடம் நடத்துவது?  ஜெயக்குமார் Vs ஜோசப் விஜய்

    பயிர்க்கடன் தள்ளுபடி; முரணாகச் செயல்படுகிறது தவெக அரசு – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.