Close Menu
    What's Hot

    நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களில் மெகா திட்டம்!. லிஸ்டில் சென்னையும் இருக்கு!.

    கனவில் கத்தும்போது உங்களுக்கு சத்தம் கேட்பதில்லையா?. அதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?.

    “ஜென் இசட், ஆல்பா தலைமுறை நாட்டை வழிநடத்தும்” – பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»திருவண்ணாமலை தொகுதியில் போட்டியா? ஏ.சி.சண்முகம் பதில்
    அரசியல்

    திருவண்ணாமலை தொகுதியில் போட்டியா? ஏ.சி.சண்முகம் பதில்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 30, 2025Updated:November 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    acss
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வரும் தேர்தலில் நிச்சயம் வெற்றிபெறும் என புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

    புதிய நீதி கட்சியின் நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் “அண்ணாமலையார் கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். எனவே, திருவண்ணாமலையில் ரயில் போக்குவரத்தை மத்திய அரசு அதிகப்படுத்த வேண்டும். திருப்பதியில் செய்யப்பட்டு உள்ளது போன்று திருவண்ணாமலையிலும் ஏர்போர்ட் வசதி செய்ய வேண்டும். இதற்கான பணியை விரைந்து தொடங்க வேண்டும்” என்றார்.

    மேலும் பேசிய அவர், “வரி உயர்வு, மின் கட்டண உயர்வு போன்றவை உயர்ந்து வருவது ஒருபுறம் என்றால், மாணவர்களிடம் மது மற்றும் கஞ்சா பழக்கவழக்கம் தற்போது அதிகரித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலை ஏற்பட திமுக அரசு தான் முக்கிய காரணம். இது வரும் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும். திமுக கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. நீட் தேர்வை ஒழிப்போம் என்றார்கள், இதுவரை அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால், பல மத்திய அரசு திட்டங்களை, மாநில அரசு திட்டங்களாக மாற்றி செயல்படுத்தி வருகிறார்கள்” என்றார்.

    தொடர்ந்து பேசிய அவர், “இந்திய நாடு நம்முடைய பிரதமர் மோடிக்கு கோவில் கட்டி கும்பிட வேண்டும். அவர் பல வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்து உள்ளார். அனைத்து திட்டங்களிலும் இந்தியா முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னேறி உள்ளது. பிரதமர் மோடி பொறுப்பு ஏற்கும் போது பொருளாதாரத்தில் 13-வது இடத்தில் இருந்த இந்தியாவை தற்போது 4-வது இடத்திற்கு முன்னேற்றி உள்ளார். மற்ற நாடுகளுக்கு உதவும் நாடாக இந்தியா மாறியுள்ளது. பீகாரில் கிடைத்த வெற்றி பிரதமர் மோடிக்கு கிடைத்த வெற்றி. அதேபோல் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்” என்றார்.

    சட்டமன்ற தேர்தல் தொடர்பாக பேசிய அவர், “வருகிற சட்டமன்ற தேர்தலில் தங்கள் கட்சி சார்பில் 6 முதல் 8 இடங்கள் கேட்க முடிவு செய்துள்ளோம். குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி, திருவண்ணாமலை அல்லது கீழ்பென்னாத்தூர் தொகுதிகளை கேட்க முடிவு செய்துள்ளோம்” என்றார்.

    திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதியில் நீங்கள் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “அது ஆண்டவன் கையில் தான் உள்ளது” என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜோதிட நாள்காட்டி 30.11.2025 | கார்த்திகை 14 – விசுவாவசு
    Next Article பொதுமக்கள் அவசியம் இல்லாமல் வெளியே வர வேண்டாம் – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவுறுத்தல்!
    Editor TN Talks

    Related Posts

    “சமூக நீதி குறித்து பேசுவதற்கு திமுகவுக்கு தகுதியில்லை” – மதுரையில் அன்புமணி பேட்டி

    December 27, 2025

    தவெகவே எல்லா தொகுதியிலும் வெல்லும்; செங்கோட்டையன் நம்பிக்கை

    December 27, 2025

    தமிழகத்தின் மிகப்பெரிய வரலாற்றுப் பிழை: நயினார் நாகேந்திரன்

    December 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களில் மெகா திட்டம்!. லிஸ்டில் சென்னையும் இருக்கு!.

    கனவில் கத்தும்போது உங்களுக்கு சத்தம் கேட்பதில்லையா?. அதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?.

    “ஜென் இசட், ஆல்பா தலைமுறை நாட்டை வழிநடத்தும்” – பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

    “சமூக நீதி குறித்து பேசுவதற்கு திமுகவுக்கு தகுதியில்லை” – மதுரையில் அன்புமணி பேட்டி

    ஆண்கள் கிரிக்கெட்டில் யாரும் செய்யாத சாதனை!. முதல் இந்திய வீராங்கனை!. வரலாறு படைத்த தீப்தி சர்மா!. 

    Trending Posts

    தங்கம் விலை மீண்டும் உயர்வு… எவ்வளவு தெரியுமா?

    December 20, 2025

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    December 27, 2025

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    December 27, 2025

    திமுக அரசின் சாதனைகளில் 5%- ஆவது அதிமுக ஆட்சியில் நடந்ததா?. முதல்வர் ஸ்டாலின் சேலஞ்ச்!

    December 26, 2025

    நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களில் மெகா திட்டம்!. லிஸ்டில் சென்னையும் இருக்கு!.

    December 27, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.