Close Menu
    What's Hot

    வெள்ளை  அறிக்கை ஒரு ‘ஃப்ளாப் ஷோ’… தங்கம் தென்னரசு விளாசல்

    தமிழகத்தின் கழுத்தை நெரிக்கும் 6 நிதி நெருக்கடிகள்… வெள்ளை அறிக்கை தரும் பகீர் எச்சரிக்கை!

    இட ஒதுக்கீடு உயர்வு கோரிக்கையை  தவறாகச் சித்தரிப்பதா? பாஜகவுக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»பொதுமக்கள் அவசியம் இல்லாமல் வெளியே வர வேண்டாம் – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவுறுத்தல்!
    தமிழ்நாடு

    பொதுமக்கள் அவசியம் இல்லாமல் வெளியே வர வேண்டாம் – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவுறுத்தல்!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 30, 2025Updated:November 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    minnnnnnnn
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டிட்வா புயல் கரையை கடக்கும் வரை பொதுமக்கள் யாரும் அவசியம் இல்லாமல் வெளியே வர வேண்டாம் என தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவுறுத்தி உள்ளார்.

    சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் இயங்கும் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”டிட்வா புயல் காரணமாக தற்போது நாகை, மயிலாடுதுறை பகுதியில் மழை பெய்து வருகிறது. புயல் சென்னை கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்றிரவு முதல் தொடர்ந்து மழை பெய்ய உள்ளது. பொதுமக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்படி அவசியம் இன்றி வெளியே வர வேண்டாம்.

    பொதுமக்கள் வெளியே வரவில்லையென்றால் இடர்பாடுகளை கொஞ்சம் களைய முடியும். டிட்வா புயல் தொடர்பாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தவுடனே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதலமைச்சர் ஸ்டாலின் துரிதமாக எடுத்துள்ளார். அரசு உயரதிகாரிகள் மாவட்ட அதிகாரிகளை உடனே அறிவுறுத்தியதன் காரணமாக இதுவரை எந்தவிதமான உயிர்சேதமும் இல்லாமல் தவிர்த்துள்ளோம். 13 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டு 1058 நபர்கள் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தங்கியுள்ளவர்களுக்கு உணவு, போர்வை உள்ளிட்ட தேவையான வசதிகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    மருத்துவ உதவிகளும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தபடி அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். சென்னையில் இன்று இரவு முதல் நாளை மதியம் வரை மழை இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளதால் மக்கள் தேவையில்லாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். கையிருப்பில் 5 லட்சம் 5 கிலோ அரிசி பைகள் நிவாரண தேவைக்காக தயார் நிலையில் வைத்துள்ளோம்.

    இலங்கை விமான நிலையத்தில் சிக்கி உள்ள தமிழர்கள் முதல் நாள் சிரமப்பட்ட நிலையில் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி இலங்கை விமான நிலையத்தில் சிக்கி உள்ள 150 பேருக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். தற்போது வரை புயலின் காரணமாக 16 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 24 குடிசைகள் சேதமடைந்துள்ளன. தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளை முழுவதுமாக நிரப்பி வைக்காமல் 80% அளவிற்கு தான் கொள்ளளவு வைத்திருக்கிறோம்.

    அனைத்து மாவட்டங்களிலும் மாநில அவசர மையம் நிறுவப்பட்டுள்ளது. அதன் மூலம் புகார்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள அதிகாரிகளும் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்” என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருவண்ணாமலை தொகுதியில் போட்டியா? ஏ.சி.சண்முகம் பதில்
    Next Article காரைக்குடி வேட்பாளர் பெயர் சஸ்பென்ஸ்… தனக்காக ரிசர்வ் செய்திருக்கிறாரா சீமான்?
    Editor TN Talks

    Related Posts

    வெள்ளை  அறிக்கை ஒரு ‘ஃப்ளாப் ஷோ’… தங்கம் தென்னரசு விளாசல்

    June 16, 2026

    தமிழகத்தின் கழுத்தை நெரிக்கும் 6 நிதி நெருக்கடிகள்… வெள்ளை அறிக்கை தரும் பகீர் எச்சரிக்கை!

    June 16, 2026

    இட ஒதுக்கீடு உயர்வு கோரிக்கையை  தவறாகச் சித்தரிப்பதா? பாஜகவுக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்

    June 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வெள்ளை  அறிக்கை ஒரு ‘ஃப்ளாப் ஷோ’… தங்கம் தென்னரசு விளாசல்

    தமிழகத்தின் கழுத்தை நெரிக்கும் 6 நிதி நெருக்கடிகள்… வெள்ளை அறிக்கை தரும் பகீர் எச்சரிக்கை!

    இட ஒதுக்கீடு உயர்வு கோரிக்கையை  தவறாகச் சித்தரிப்பதா? பாஜகவுக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்

    தமிழ்நாட்டின் நிதி நிலைமை: வெள்ளை அறிக்கை வெளியிட்டார் நிதி அமைச்சர் மரியவில்சன்

    யாருக்கு யார் பாடம் நடத்துவது?  ஜெயக்குமார் Vs ஜோசப் விஜய்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.