Close Menu
    What's Hot

    முகத்தில் பருக்கள் உள்ளதா? அப்போ உடலில் இந்த பிரச்சனை கன்பர்ம்!

    10 வேட்பாளர்கள் கூட தவெகவில் கிடையாது! நயினார் நாகேந்திரன் கிண்டல்

    அதிமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்க 10 பேர் குழு! விரைவில் தமிழகம் முழுவதும் பயணம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»நடுரோட்டில் கிடந்த பச்சிளம் குழந்தை!. இரவு முழுவதும் பாதுகாத்த தெருநாய்கள்!. மேற்குவங்கத்தில் அதிசயம்!
    இந்தியா

    நடுரோட்டில் கிடந்த பச்சிளம் குழந்தை!. இரவு முழுவதும் பாதுகாத்த தெருநாய்கள்!. மேற்குவங்கத்தில் அதிசயம்!

    Editor TN TalksBy Editor TN TalksDecember 3, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    baby save street dogs
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாட்டின் பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் தாக்கி மக்கள் காயமடைவது வழக்கம். வீட்டில் தூங்கும் குழந்தைகள் கூட நாய்களின் தாக்குதலுக்கு பலியாகி வரும் நேரத்தில், தெருநாய்கள் ஒரு குழந்தையின் பாதுகாவலர்களாக மாறிய அதிசய சம்பவம் மேற்குவங்கத்தில் நிகழ்ந்துள்ளது. பிறந்த சில மணி நேரங்களிலேயே பச்சிளம் குழந்தையை பெற்றோர்கள் விட்டுச்சென்ற நிலையில், மீட்புக் குழு வரும் வரை, இரவு முழுவதும் தெருநாய்கள் பாதுகாத்துள்ளன.

    மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டத்தில் ரயில்வே எம்ப்ளாய்ஸ் காலனிக்கு அருகிலுள்ள ஒரு கழிப்பறைக்கு வெளியே குழந்தையை அடையாளம் தெரியாத நபர்கள் வீசி சென்றுள்ளனர். குழந்தையின் உடலில் இருந்த இரத்தக் கறைகள் கூட துடைக்கப்படவில்லை. இந்தநிலையில், அந்தப் பகுதியிலிருந்து வந்த ஒரு தெருநாய்க் கூட்டம் குழந்தையைப் பார்த்து ஓடி வந்தது. இரவு முழுவதும் குரைக்கவோ அல்லது அசையவோ இல்லாமல் குழந்தையை பாதுகாத்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இரவில் குழந்தையின் அருகில் வேறு யாரையும் நாய்கள் வர அனுமதிக்கவில்லை என்று உள்ளூர்வாசிகள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.

    காலையில், குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு உள்ளூர்வாசிகள் மருத்துவமனைக்கு விரைந்து சென்று அதை மீட்டனர். இந்த சம்பவத்தை முதலில் பார்த்த சுக்லா என்ற நபர் கூறுகையில், காலை எழுந்தபோது பார்த்த காட்சி இன்னும் எங்களை நடுங்க வைக்கிறது. நாய்கள் ஆக்ரோஷமாக இல்லை. அவை… எச்சரிக்கையுடன் இருந்தன. குழந்தை உயிர் காக்கப் போராடிக் கொண்டிருக்கிறதை அவை புரிந்துகொண்டதுபோல் இருந்தது.” என்று கூறினார்..

    அந்த நாய்களின் நடத்தை அங்கிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அவை ஒரு மனிதக் குழந்தையை பாதுகாக்கும் காவலர்களைப் போல அமைதியாகவும் கவனமாகவும் நின்றிருந்தன என்றும் அவர் தெரிவித்தார். இருப்பினும், குழந்தைக்கு எந்த காயமும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதங்கம் விலை மீண்டும் உயர்வு
    Next Article ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு!. முதல்முறையாக டாலருக்கு எதிராக 90 ஐ தாண்டியது!. என்ன காரணம்?.
    Editor TN Talks

    Related Posts

    தண்டவாளம் நடுவில் நின்ற ஆட்டோ! வந்தே பாரத் ரயில் தப்பியது

    December 25, 2025

    டெல்லி தேவாலயத்தில் மோடி பிரார்த்தனை! கிறிஸ்துமஸை முன்னிட்டு வழிபாடு

    December 25, 2025

    புதுச்சேரியில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து 3 மாணவர்கள் தப்பியோட்டம்

    December 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முகத்தில் பருக்கள் உள்ளதா? அப்போ உடலில் இந்த பிரச்சனை கன்பர்ம்!

    10 வேட்பாளர்கள் கூட தவெகவில் கிடையாது! நயினார் நாகேந்திரன் கிண்டல்

    அதிமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்க 10 பேர் குழு! விரைவில் தமிழகம் முழுவதும் பயணம்

    எஸ்ஐஆர் படிவத்தை முறையாக நிரப்பாததால் பெயர் நீக்கம் – 10 லட்சம் பேருக்கு விரைவில் நோட்டீஸ்!

    இறந்தவர்கள் பட்டியலில் நாதக வேட்பாளர் பெயர்! கொதித்தெழுந்த சீமான்

    Trending Posts

    முகத்தில் பருக்கள் உள்ளதா? அப்போ உடலில் இந்த பிரச்சனை கன்பர்ம்!

    December 25, 2025

    10 வேட்பாளர்கள் கூட தவெகவில் கிடையாது! நயினார் நாகேந்திரன் கிண்டல்

    December 25, 2025

    அதிமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்க 10 பேர் குழு! விரைவில் தமிழகம் முழுவதும் பயணம்

    December 25, 2025

    எஸ்ஐஆர் படிவத்தை முறையாக நிரப்பாததால் பெயர் நீக்கம் – 10 லட்சம் பேருக்கு விரைவில் நோட்டீஸ்!

    December 25, 2025

    இறந்தவர்கள் பட்டியலில் நாதக வேட்பாளர் பெயர்! கொதித்தெழுந்த சீமான்

    December 25, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.