டெல்லியில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவுடன் தாம் பேசியது என்ன? என்பது குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் பேட்டியளித்துள்ளார்.
டெல்லிக்கு ஓபிஎஸ் சென்றது முதல் அவர் தனிக்கட்சித் தொடங்கக்கூடும், பாஜகவில் சேரக்கூடும் எனத் தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில், டெல்லிக்கு சென்று திரும்பும் வழியில் சென்னையில் ஓபிஎஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மரியாதை நிமித்தமாகவே அவரை நான் சந்தித்துப் பேசினேன். எப்போது தேவைப்பட்டாலும், அரசியல் விவகாரம் குறித்து அவருடன் நான் பேசுவேன்.
புரட்சித் தலைவி அம்மா (ஜெயலலிதா) ஆட்சியில் மழை பாதிப்பின்போது உடனடியாக மக்களுக்கு நிவாரண உதவி அளிக்கப்படும். ஆனால் திமுக அரசோ எதையும் செய்யாமல், அமைதி காக்கிறது.
இவ்வாறு ஓபிஎஸ் கூறினார்.
