Close Menu
    What's Hot

    இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: மிடில் ஆர்டர் சொதப்பலால் 233 ரன்கள் மட்டும் எடுத்தது இந்தியா!

    ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: அதிர்வில் குலுங்கிய புற்றுநோய் மருத்துவமனை! 211 குழந்தைகள் அவசரமாக வெளியேற்றம்!

    நாடாளுமன்றத்தில் ஸ்மார்ட் வாட்ச், கேமரா பேனாக்களுக்கு தடை: எம்.பி.க்களுக்கு மக்களவை செயலகம் எச்சரிக்கை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»ரூ.18,000 வரையே கட்டணம்… விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு செக்
    இந்தியா

    ரூ.18,000 வரையே கட்டணம்… விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு செக்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Feature Image Kempegowda International Airport1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இண்டிகோ விமான சேவை 5-வது நாளாக நேற்றும் பாதிக்கப்பட்டது. இதற்கிடையே, உள்நாட்டு விமானங்களுக்கு ரூ.7,500 முதல் ரூ.18 ஆயிரம் வரை மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    விமான ஊழியர்களுக்கான புதிய பணி நேர வரம்பு விதிகளை இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ)கடந்த ஆண்டே அறிவித்திருந்தது. பயணிகள் பாதுகாப்பு மற்றும் விமான பைலட்களின் நலனை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்ட இந்த விதிகள் கடந்த மாதம் அமலுக்கு வந்தன.

    இதன்படி, பணி நேரம் குறைந்ததால் இண்டிகோ நிறுவனத்தில் பைலட் உள்ளிட்ட விமான ஊழியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் கடந்த 4 நாட்களாகசுமார் 2 ஆயிரம் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால், நாடு முழுவதும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.

    இதையடுத்து, புதிய விதிகள்தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக டிஜிசிஏ நேற்றுமுன்தினம் அறிவித்தது. இதுகுறித்து விசாரிக்க உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்தார். ஆனாலும், 5-வது நாளாக நேற்றும் 500-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. 4 முக்கிய விமான நிலையங்களில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதிகபட்சமாக பெங்களூரு விமானநிலையத்தில் 124, மும்பையில் 109, டெல்லியில் 106, ஹைதராபாத்தில் 66 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

    எனினும் நேற்று மாலை நிலவரப்படி, மொத்தம் உள்ள 138-ல் 135 நகரங்களில் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளதாகவும் 1,500-க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டதாகவும் இண்டிகோ நிறுவனம் நேற்று மாலை தெரிவித்தது. இண்டிகோ நிறுவனம் முன்னதாக வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த சில நாட்களாக பயணிகள் சிரமப்பட்டதை புரிந்து கொள்கிறோம். இதற்காக மன்னிப்பு கோருகிறோம். விமான போக்குவரத்தை விரைவில் இயல்புநிலைக்கு கொண்டுவர எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.

    டிசம்பர் 5 முதல் 15-ம் தேதிவரை முன்பதிவு செய்யப்பட்ட விமான டிக்கெட்டை ரத்து செய்யும் பயணிகளுக்கு பணம் முழுமையாக திருப்பித் தரப்படும். இது போல, விமான நிலையங்களில் காத்திருக்கும் பயணிகள் தங்குவதற்கு வசதியாக அருகில் உள்ள ஓட்டல்களில் அறைகளை முன்பதிவு செய்துள்ளோம்’ என கூறப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, ஸ்பைஸ்ஜெட், விஸ்தாரா உள்ளிட்ட நிறுவனங்கள் கூடுதல் விமானங்களை இயக்கி வருகின்றன. ஆனால், கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளதாக புகார் எழுந்தது. இதுகுறித்து விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில்மற்ற நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. பயணிகளின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நியாயமான கட்டணம் வசூலிப்பதை உறுதிசெய்வதற்காக, ஒழுங்குமுறை அதிகாரத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    உள்ளூர் விமானங்களில் (சாதாரண வகுப்பு) 500 கி.மீ. வரையிலான தூரத்துக்கு அதிகபட்சமாக ரூ.7,500 கட்டணம், 500 முதல் 1,000 கி.மீ. வரையிலான தூரத்துக்கு ரூ.12,000 கட்டணம், 1,000 முதல் 1,500 கி.மீ. வரையிலான தூரத்துக்கு ரூ.15,000 கட்டணம். 1,500 கி.மீ.க்கு அதிகமான தூரத்துக்கு ரூ.18 ஆயிரம் கட்டணம் விதிக்கலாம். பயனாளர் மேம்பாட்டு கட்டணம் (யுடிஎப்), பயணிகள் சேவைக் கட்டணம் (பிஎஸ்எப்) மற்றும் வரிகள் இதில் அடங்காது. பிசினஸ் வகுப்பு மற்றும் உடான் விமான பயணங்களுக்கும் இது பொருந்தாது.

    அனைத்து விமான நிறுவனங்களும் இந்த கட்டண உச்சவரம்பை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். நிலைமை சீராகும் வரை இது அமலில் இருக்கும். சிக்கலில் உள்ள பயணிகளை சுரண்டுவதை தடுப்பது, அவசரமாக பயணம் செய்ய வேண்டியவர்களை நிதி நெருக்கடிக்கு ஆளாக்காமல் இருப்பதை உறுதி செய்யவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

    இதுவரை ரத்து செய்யப்பட்ட விமான சேவைகளுக்கான கட்டணங்களை 7-ம் தேதி (இன்று) இரவு 8 மணிக்குள் முழுமையாக (ரீஃபண்ட்) திருப்பித் தர வேண்டும். மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பயணநேரம் மாற்றியமைக்கப்பட்டதற்காக பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலி!. தென்னாப்பிரிக்காவில் பயங்கரம்!.
    Next Article அட தேங்காய்ப்பாலில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா !!!
    Editor TN Talks

    Related Posts

    நாடாளுமன்றத்தில் ஸ்மார்ட் வாட்ச், கேமரா பேனாக்களுக்கு தடை: எம்.பி.க்களுக்கு மக்களவை செயலகம் எச்சரிக்கை!

    July 16, 2026

    சோனம் வாங்சுக்கின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு: நேரில் சந்தித்தார் ஆ. ராசா!

    July 16, 2026

    உணவகத்தில் மயோனைஸ் சாப்பிட்ட 3 பேருக்கு ஷிகெல்லா தொற்று!. கேரளாவில் அதிர்ச்சி!

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: மிடில் ஆர்டர் சொதப்பலால் 233 ரன்கள் மட்டும் எடுத்தது இந்தியா!

    ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: அதிர்வில் குலுங்கிய புற்றுநோய் மருத்துவமனை! 211 குழந்தைகள் அவசரமாக வெளியேற்றம்!

    நாடாளுமன்றத்தில் ஸ்மார்ட் வாட்ச், கேமரா பேனாக்களுக்கு தடை: எம்.பி.க்களுக்கு மக்களவை செயலகம் எச்சரிக்கை!

    சென்னை: நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த தனியார் பள்ளி பேருந்து! மாணவர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு!

    சோனம் வாங்சுக்கின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு: நேரில் சந்தித்தார் ஆ. ராசா!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.