Close Menu
    What's Hot

    ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியீடு!

    ‘ஜனநாயகன்’ வெளியாவதில் சிக்கல்..? காரணம் என்ன?

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»வேறு சிறைக்கு மாற்றப்படும் இம்ரான் கான்?- தொடர் போராட்டம் எதிரொலி!
    உலகம்

    வேறு சிறைக்கு மாற்றப்படும் இம்ரான் கான்?- தொடர் போராட்டம் எதிரொலி!

    Editor web1By Editor web1December 11, 2025Updated:December 11, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Imran
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை வேறு சிறைக்கு மாற்றம் செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான், கடந்த 2018 முதல் 2022ம் ஆண்டு வரை பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்த போது, அவர் மீது ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அப்போது நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மை இல்லாததால், 2022 ஏப்ரலில் இம்ரான் கான் பிரதமர் பதவியை இழந்தார். பின்னர் பொறுப்பேற்ற பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு, இம்ரான் கான் மீது, பல்வேறு வழக்குகளை பதிவு செய்தது.

    ஊழல் புகாரில் தண்டிக்கப்பட்ட இம்ரான் கான், கடந்த 2023  ஆகஸ்ட் முதல் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இம்ரான் கானை சந்திக்க அவரது குடும்பத்தினர் நீதிமன்ற ஆணை பெற்றிருந்தும், அவர்களுக்கும், இம்ரான் ஆதரவாளர்களுக்கும் போலீசார் அனுமதி மறுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், சிறையில் இம்ரான் கான் சித்ரவதை செய்யப்பட்டு, கொல்லப்பட்டுவிட்டதாக தகவல்கள் பரவியது. இந்த செய்தியை அடியாலா சிறை நிர்வாகம் மறுத்தது. இதனையடுத்து, இம்ரான் கான் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். சிறை வளாகங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் போராடிய அவர்கள் இம்ரான் குறித்த உண்மை செய்தியை பாகிஸ்தான் அரசு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    இதனையடுத்து, சிறையில் உள்ள இம்ரான் கானை, அவரது சகோதரி உஸ்மா கான் சந்திக்க அனுமதிக்கப்பட்டார். இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த உஸ்மா, தனிமைப்படுத்தப்பட்ட சிறையில் இம்ரான் அடைக்கப்பட்டுள்ளதாகவும், மனதளவில் அவர் சித்ரவதைக்குள்ளாக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.  இந்தநிலையில், இம்ரான் கானை மீண்டும் சந்திக்க அனுமதி மறுத்த சிறை நிர்வாகத்தைக் கண்டித்து, சிறை வளாகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. இதனால், சிறை வளாகப் பகுதியில் பரபரப்பான நிலவியது.

    இந்தநிலையில், தொடர் போராட்டம் காரணமாக, அடியாலா சிறையில் இருந்து, இம்ரான் கானை வேறு சிறைக்கு மாற்றம் செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அட்டோக் மாவட்ட சிறைக்கு அவரை மாற்றவே, அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் தெரிகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசர்வதேச திரைப்பட விழா சென்னையில் இன்று தொடக்கம்!. ரஜினியின் 50வது ஆண்டு திரைப்பயணத்துக்கு கௌரவம்!
    Next Article இந்தியா வரும் மெஸ்ஸி!. ஒரு போட்டோ எடுக்க ரூ.10 லட்சமா?. கடும் விமர்சனங்கள்!
    Editor web1
    • Website

    Related Posts

    குளிர்கால ஒலிம்பிக் விழாவின் ஜோதியை ஏந்திச் சென்றார் ஜாக்கி சான்!

    December 23, 2025

    புயலால் பாதித்த இலங்கைக்கு இந்தியா ரூ.4 ஆயிரம் கோடி நிதியுதவி!

    December 23, 2025

    உலகின் மிகக் கொடூரமான சர்வாதிகாரி!. இந்தியர்களை நாட்டை விட்டு வெளியேற்றிய இடி அமீன்!.

    December 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியீடு!

    ‘ஜனநாயகன்’ வெளியாவதில் சிக்கல்..? காரணம் என்ன?

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    ‘ஜனநாயகன்’ ஆடியோ விழாவில் அரசியல் பேசத் தடை?

    குளிர்கால ஒலிம்பிக் விழாவின் ஜோதியை ஏந்திச் சென்றார் ஜாக்கி சான்!

    Trending Posts

    இன்று தமிழகம் வருகிறார் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல்!. EPS உடன் பேச்சுவார்த்தை!.

    December 23, 2025

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    December 23, 2025

    டிடிவி, ஓபிஎஸ்-சை அதிமுக கூட்டணியில் இணைப்பது குறித்து இபிஎஸ்சுடன் கோயல் பேச்சா? நயினார் மறுப்பு

    December 23, 2025

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.11 லட்சம் பேர் விண்ணப்பம்! வரும் 27, 28- 3, 4ம் தேதிகளில் சிறப்பு முகாம்!

    December 23, 2025

    கூடங்குளத்தில் ஐயப்ப பக்தர்களின் மண்டல பூஜை விழா

    December 23, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.