நடிகர் சூர்யாவின் 47வது திரைப்படத்தை பிரபல OTT நிறுவனம் மிகப் பெரிய தொகைக்கு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் அடுத்தாண்டு வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து வெங்கி அட்லுரி இயக்கத்தில் ‘சூர்யா 46’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்தநிலையில், ‘ஆவேஷம்’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்த மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார். இந்தப் படத்தில் காவல்துறையாக சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சூர்யாவுடன், ‘பிரேமலு’ ஹீரோ நஸ்லேன் மற்றும் நஸ்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் பூஜை சென்னையில் அண்மையில் நடைபெற்றது.
இந்தநிலையில், ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாக உள்ள ‘சூர்யா 47’ படத்தின் OTT உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இந்த படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
