Close Menu
    What's Hot

    விஜய்யும், சீமானும் ஆர்எஸ்எஸ்சின் கையாட்கள்! புட்டு புட்டு வைத்த திருமாவளவன்

    “என்னை ஏமாத்திட்டாங்க..” விஜய் காரை மறித்து கதறிய பெண்! பரபரப்பான பனையூர்!!

    கூடங்குளத்தில் ஐயப்ப பக்தர்களின் மண்டல பூஜை விழா

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»லக்னோவில் இன்று 4வது டி20 போட்டி: தொடரை கைப்பற்றுமா இந்திய அணி?
    விளையாட்டு

    லக்னோவில் இன்று 4வது டி20 போட்டி: தொடரை கைப்பற்றுமா இந்திய அணி?

    Editor TN TalksBy Editor TN TalksDecember 17, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    t20 match
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 4வது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென்னாப்பிரிக்க அணி தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்துள்ள 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டிலும், தென்னாப்பிரிக்க அணி ஒரு போட்டியிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன. இதன் காரணமாக இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில், இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கும் இடையிலான நான்காவது டி20 போட்டி இன்று (டிசம்பர் 17) லக்னோவிலுள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை வெல்லும். தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை சமன் செய்யும். இதன் காரணமாக இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.

    சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அணியின் பேட்டிங்கில், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா அகியோர் வலுசேர்க்கும் நிலையில், ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், ஷிவம் தூபே ஆகியோர் தொடர்ந்து சொதப்பி வருவது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    அதேசமயம் இதனால் இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனை தேர்வு செய்ய வேண்டும் என்ற குரல்களும் எழத்தொடங்கியுள்ளன. பந்துவீச்சை பொறுத்தவரையில் ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இருப்பது பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.

    மறுபக்கம் ஐடன் மார்க்ரம் தலைமையில் களமிறங்கியுள்ள தென்னாப்பிரிக்க அணிக்கும் பேட்டிங் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. ஏனெனில் அந்த அணியில் குயின்டன் டி காக், ஐடன் மார்க்ரம் ஆகியோரைத் தவிர்த்து மற்ற நட்சத்திர வீரர்கள் இதுவரையிலும் பெரிதாக ரன்களைச் சேர்க்கவில்லை. அதுவே அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

    அணியின் பந்துவீச்சில் மார்கோ ஜான்சன், லுங்கி இங்கிடி, ஓட்னியல் பார்ட்மேன் உள்ளிட்டோருடன், டோனவன் ஃபெரீரா, ஜார்ஜ் லிண்டே ஆகியோரும் பக்க பலமாக இருக்கின்றன. இருப்பினும் அந்த அணி பேட்டிங்கில் முன்னேற்றம் காணும் வரையில், வலுவான இந்திய அணியை வீழ்த்தியது கடினம் தான்.

    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இரு அணிகளும் இதுவரை 34 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 20 போட்டிகளில் வெற்றி பெற்று ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது. அதேசமயம் தென்னாப்பிரிக்க அணி 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.

    மேலும் இந்தியாவில் இவ்விரு அணிகளும் 15 முறை நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், அதில் தென்னாப்பிரிக்க அணி 7 முறையும், இந்தியா 7 முறையும் வெற்றியைப் பதிவு செய்துள்ளனர். மேலும் ஒரு போட்டியின் முடிவு எட்டப்படவில்லை. இதனால் இன்றைய ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

    லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை 9 சர்வதே சடி20 போட்டிகள் நடைபெற்றுள்ள. இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 5 முறையும், சேஸிங் செய்த அணிகள் 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. மேலும் பனியின் தாக்கம் இருக்கும் என்பதால், டாஸ் வெல்லும் கேப்டன் பவுலிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகே.என். நேரு தம்பி கொலை வழக்கு – 6 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த முக்கியப் புள்ளி கைது
    Next Article இதுதான் தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்கும் லட்சனமா? மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் அன்புமணி ஆத்திரம்
    Editor TN Talks

    Related Posts

    கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு… சிஎஸ்கே முன்னாள் வீரர் அறிவிப்பு

    December 23, 2025

    பாகிஸ்தானிடம் படுதோல்வி!. கேப்டன், கோச் மீது நடவடிக்கையா?. பிசிசிஐ அதிரடி!

    December 23, 2025

    இந்திய வீராங்கனைகளுக்கு ஜாக்பாட்!. 150% வரை சம்பள உயர்வு!. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

    December 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விஜய்யும், சீமானும் ஆர்எஸ்எஸ்சின் கையாட்கள்! புட்டு புட்டு வைத்த திருமாவளவன்

    “என்னை ஏமாத்திட்டாங்க..” விஜய் காரை மறித்து கதறிய பெண்! பரபரப்பான பனையூர்!!

    கூடங்குளத்தில் ஐயப்ப பக்தர்களின் மண்டல பூஜை விழா

    ரூ.900 கோடி வசூல்… தொடர்ந்து பட்டையை கிளப்பும் துரந்தர்

    கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு… சிஎஸ்கே முன்னாள் வீரர் அறிவிப்பு

    Trending Posts

    இன்று தமிழகம் வருகிறார் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல்!. EPS உடன் பேச்சுவார்த்தை!.

    December 23, 2025

    கூடங்குளத்தில் ஐயப்ப பக்தர்களின் மண்டல பூஜை விழா

    December 23, 2025

    உலகின் மிகக் கொடூரமான சர்வாதிகாரி!. இந்தியர்களை நாட்டை விட்டு வெளியேற்றிய இடி அமீன்!.

    December 23, 2025

    இந்திய வீராங்கனைகளுக்கு ஜாக்பாட்!. 150% வரை சம்பள உயர்வு!. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

    December 23, 2025

    “இந்திய அரசமைப்பை முழுமையாக அப்புறப்படுத்த பாஜக முயற்சி” – பெர்லினில் ராகுல் காந்தி பேச்சு!

    December 23, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.