Close Menu
    What's Hot

    ஆக. 26ல் ‘டாக்ஸிக்’ ரிலீஸ்!

    இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் பதவி விலக முடிவு?

    நீட் மறுதேர்வு நிறைவு! இந்த பாடத்தின் கேள்விகள் தான் கடினமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»ஆஸ்கர் விருது வெல்லுமா ஹோம்பவுண்ட் படம்?
    சினிமா

    ஆஸ்கர் விருது வெல்லுமா ஹோம்பவுண்ட் படம்?

    Editor TN TalksBy Editor TN TalksDecember 17, 2025Updated:December 17, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    hmbb
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2026-ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்காக இந்தியா சார்பில் இந்தி திரைப்படமான ஹோம்பவுண்ட்’ (Homebound) அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    2020-ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது, நூற்றுக்கணக்கான மைல்கள் கால்நடையாகத் தங்கள் ஊருக்குப் பயணம் செய்த இரு புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது ஹோம்பவுண்ட் திரைப்படம்’மசான்’ (Masaan) திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற நீரஜ் கய்வான் இப்படத்தை இயக்கியுள்ளார்.
    கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் படத்தை தயாரித்துள்ளது. இஷான் கட்டர், விஷால் ஜெத்வா மற்றும் ஜான்வி கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பஷரத் பீர் என்பவர் ‘நியூயார்க் டைம்ஸில்’ எழுதிய கட்டுரையைத் தழுவி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
    2020-ஆம் ஆண்டு இந்தியாவில் கொரோனா ஊரடங்கின்போது இதயத்தை உலுக்கிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, பஷரத் பீர் “A Friendship, a Pandemic and a Death Beside the Highway” என்ற கட்டுரையை எழுதினார்.
    2020-ஆம் ஆண்டு மே மாதம், கொரோனா ஊரடங்கின் போது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் ஒரு இளைஞன், மயக்கமடைந்து உயிருக்குப்போராடிக் கொண்டிருந்த தனது நண்பனை மடியில் கிடத்தி, நெடுஞ்சாலை ஓரத்தில் அழுதுகொண்டிருப்பார். இதைப் பார்த்த பஷரத் பீர், அந்த இளைஞர்களைத் தேடிச் சென்று அவர்களின் கதையை கட்டுரையாக எழுதினார்.
    அந்த இரு நண்பர்கள் முகமது சையூப் மற்றும் அமிர்த் குமார். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அவர்கள் குஜராத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும், வேலையிழந்த இவர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப லாரியில் ஏறினர். வழியில் அமிர்த் குமாருக்குக் கடும் காய்ச்சல் ஏற்பட்டதால், லாரியில் இருந்த மற்றவர்கள் அவரை கட்டாயப்படுத்தி கீழே இறக்கி விட்டுவிடுவார்கள்.
    தனது நண்பனைத் தனியாக விட மனமில்லாத சையூப், தானும் அவரோடு நடுவழியில் இறங்கிக்கொண்டார். நெடுஞ்சாலையில் பல மணிநேரம் உதவிக்காகக் காத்திருந்து, இறுதியில் மருத்துவமனைக்கு சென்றும் சிகிச்சை பலனின்றி அமிர்த் உயிரிழந்தார். தனது நண்பனின் சடலத்தை எப்படியாவது அவனது பெற்றோரிடம் கொண்டு சேர்க்க சையூப் நடத்திய சட்டப் போராட்டங்களையும், அந்த ஆழமான நட்பையும் பஷரத் பீர் தனது கட்டுரையில் மிக உருக்கமாக எழுதியிருந்தார்.
    மனதை உருக்கும் இந்த கட்டுரையின் அடிப்படையிலே ‘ஹோம்பவுண்ட்’ திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.  படத்தில் சையூப்பின் கதாபாத்திரம் ஷோயப் என்றும், அமிர்தின் கதாபாத்திரம் சந்தன் என்றும் மாற்றப்பட்டுள்ளது. ஷோயப் கதாபாத்திரத்தில் இஷான் கட்டரும், சந்தன் கதாபாத்திரத்தில் விஷால் ஜெத்வாவும் நடித்துள்ளனர்.
    மதத்தையும் சாதியையும் கடந்த ஒரு புனிதமான நட்பையும், அதே சமயம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வலியையும் இத்திரைப்படம் உலகிற்கு உரக்கச் சொன்னது. ஆஸ்கர் விருதுக்கான சிறந்த சர்வதேசத் திரைப்படப் பிரிவுக்கான இறுதிப் பட்டியலுக்கு முந்தைய பட்டியலில் ஹோம்பவுண்ட் இடம் பிடித்துள்ளது. இதில் மொத்தம் 15 வெளிநாட்டு படங்கள் இடம் பிடித்துள்ளன.
    இந்த 15 படங்களில் இருந்து 5 படங்கள் மட்டுமே இறுதிப் பரிந்துரைக்கு தேர்வாகும், இறுதிப் பரிந்துரை பட்டியல் வரும் ஜனவரி மாதம் 22-ஆம் தேதி அறிவிக்கப்படும். 98-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் மாதம் நடைபெறுகிறது.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமருத்துவர்களின் மருந்துச் சீட்டுகளைக் கண்காணிக்க குழு அமைக்க வேண்டும்!. மருத்துவக் கல்லூரிகளுக்கு NMC உத்தரவு!
    Next Article ஒவ்வொரு சிறிய விஷயத்திற்கும் அழுகிறீர்களா?. மன வலிமையுடன் இருப்பது எப்படி?
    Editor TN Talks

    Related Posts

    ஆக. 26ல் ‘டாக்ஸிக்’ ரிலீஸ்!

    June 21, 2026

    சமூக ஊடகங்களுக்கு கயாடுலோஹர் இடைவெளி? இதுதான் காரணமா?

    June 20, 2026

    ஆக்‌ஷனில் கலெக்‌ஷனை அள்ளிய சமந்தாவின் ’எங்கள் தங்கம்’..!

    June 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆக. 26ல் ‘டாக்ஸிக்’ ரிலீஸ்!

    இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் பதவி விலக முடிவு?

    நீட் மறுதேர்வு நிறைவு! இந்த பாடத்தின் கேள்விகள் தான் கடினமா?

    அமோனியா வாயு கசிவு சம்பவம்: அரசியல் கட்சித் தலைவர்கள் அரசுக்கு வலியுறுத்தல்

    போலி என்கவுன்டர் விவகாரம்: நீதி விசாரணைக்கு பீகார் முதல்வர் உத்தரவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.