Close Menu
    What's Hot

    நீங்கள் சாப்பிடுவது ஐஸ்கிரீமா… ப்ரோசன் டெசர்டா? – வரிசைக் கட்டும் நோய்கள்… எச்சரிக்கும் நிபுணர்கள்!

    மண்ணுக்குள் உறங்கும் இயக்குநர் பாரதிராஜா..!! குடும்பத்திற்கு கடிதம் எழுதிய பிரதமர் மோடி..!!

    அசாம்: விமான விபத்தில் உயிரிழந்த வீரர்கள் யார் யார்..?? வெளியான விவரங்கள்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»மாணவர்களை ஆசிரியர்கள் அடித்தால்…. தனியார் பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை
    தமிழ்நாடு

    மாணவர்களை ஆசிரியர்கள் அடித்தால்…. தனியார் பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை

    Editor TN TalksBy Editor TN TalksDecember 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    students
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆசிரியர்கள், முதல்வர்கள் உள்ளிட்ட பள்ளி நிர்வாகத்தினர், மாணவர்களை உடல் ரீதியாகவோ, உளவியல் ரீதியாகவோ எவ்வித துன்புறுத்தலும் செய்யக்கூடாது என தனியார் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

    இதுகுறித்து தனியார் பள்ளிகள் இயக்குநர் குப்புசாமி, பள்ளி மாணவர்கள் பாதுகாப்பு தொடர்பாக சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “தமிழ்நாட்டில் இயங்கி வரும் அனைத்து தனியார் பள்ளிகளிலும் மாணவர்களின் நற்பண்புகள் மற்றும் செயல்பாடுகளை ஆக்கப்பூர்வமாக வழிநடத்திட வேண்டும். தினமும் காலை வணக்கக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். அந்த சமயத்தில், விளையாட்டு மைதானத்தில், அனைத்து மாணவர்களையும் வரிசையாக அவர்களின் உயரங்களின் அடிப்படையில் நிற்க வைத்து, தமிழ்த்தாய் வாழ்த்து, நாட்டுப்பண் ஆகியவற்றை பாட செய்ய வேண்டும். ஒலிப்பெருக்கியை பயன்படுத்தி பாடல்களை ஒலிபரப்பக் கூடாது.

    பின்னர், அன்றைய தின செய்தித்தாள்களில் வெளியாகி இருக்கும் கல்வி மற்றும் அறிவியல் சார்ந்த சாதனைகள், தேர்வு அட்டவணை, விளையாட்டு சார்ந்த நிகழ்ச்சிகள் போன்ற செய்திகளை, மாணவர்கள் அறியும் வகையில் வாசிக்க வேண்டும்.

    மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் நன்னடத்தை, அதிக மதிப்பெண், விளையாட்டு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி, மற்ற மாணவர்களுக்கு உற்சாகம் அளிக்க வேண்டும். பள்ளி மாணவர்களிடையே சாதி – சமூக வேறுபாடுகளை களைந்து, நல்லிணக்கம் மற்றும் நற்பண்புகளை வளர்ப்பது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விளக்கிக் கூற வேண்டும்.

    பள்ளி பேருந்துகளில் மாணவர்கள் உரிய பாதுகாப்புடன் வந்து செல்வதை உறுதி செய்ய வேண்டும். பேருந்தில் இருந்து இறங்கி, மாணவர்கள் அங்கும் இங்குமாக ஓடாமல் உதவியாளர் துணையுடன் வகுப்பறைக்கு வரை வருவதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். அனைத்து பள்ளி வாகனங்களிலும் பெண் உதவியாளர் இருக்க வேண்டும்.

    பள்ளி சொத்துக்களை கல்விசாராத நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக் கூடாது. மேலும், கலையரங்குகள், வகுப்பறைகள் விளையாட்டு மைதானங்கள் அல்லது திறந்தவெளியில் துறை சாராமல் நடத்தப்படும் ஒத்திகைகள், அணிவகுப்புகளை நடத்தக் கூடாது. அதேபோல், வகுப்புவாதம், சாதி, மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை பள்ளி வளாகங்களில் நடத்தக் கூடாது. ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் உள்ளிட்ட பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்களை உடல் ரீதியாகவோ உளவியல் ரீதியாகவோ எவ்வித துன்புறுத்தலும் செய்யக்கூடாது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleரஷ்ய ராணுவத்தில் 26 இந்தியர்கள் கொல்லப்பட்டனர்!. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்!.
    Next Article பெண்ணின் ஹிஜாப்பை நீக்கிய விவகாரம்… நிதிஷ்குமாருக்கு பாகிஸ்தான் கண்டனம்
    Editor TN Talks

    Related Posts

    மண்ணுக்குள் உறங்கும் இயக்குநர் பாரதிராஜா..!! குடும்பத்திற்கு கடிதம் எழுதிய பிரதமர் மோடி..!!

    June 13, 2026

    ரஜினியின் பெயர், படங்களை அரசியலில் பயன்படுத்தக்கூடாது..!! ரசிகர் மன்றம் அதிரடி அறிக்கை..!!

    June 13, 2026

    இரவில் மின்வெட்டுக்கு காரணமே இதுதான்..!! ராதாகிருஷ்ணன் பரபரப்பு தகவல்..!!

    June 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நீங்கள் சாப்பிடுவது ஐஸ்கிரீமா… ப்ரோசன் டெசர்டா? – வரிசைக் கட்டும் நோய்கள்… எச்சரிக்கும் நிபுணர்கள்!

    மண்ணுக்குள் உறங்கும் இயக்குநர் பாரதிராஜா..!! குடும்பத்திற்கு கடிதம் எழுதிய பிரதமர் மோடி..!!

    அசாம்: விமான விபத்தில் உயிரிழந்த வீரர்கள் யார் யார்..?? வெளியான விவரங்கள்..!!

    பாக்.-ல் பொருளாதார நெருக்கடி..!! 6 ஆண்டுகளில் 2.7 கோடி பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் சென்ற அவலம்..!!

    இந்திய ராணுவத்தின் புதிய கமாண்டராக தீரஜ் சேத் நியமனம்..!! மத்திய அரசு அறிவிப்பு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.