Close Menu
    What's Hot

    ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியீடு!

    ‘ஜனநாயகன்’ வெளியாவதில் சிக்கல்..? காரணம் என்ன?

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»போலி மருந்து தயாரிப்பு விவகாரம்: சிபிஐ, என்ஐஏ விசாரணைக்கு புதுச்சேரி ஆளுநர் பரிந்துரை
    தமிழ்நாடு

    போலி மருந்து தயாரிப்பு விவகாரம்: சிபிஐ, என்ஐஏ விசாரணைக்கு புதுச்சேரி ஆளுநர் பரிந்துரை

    Editor TN TalksBy Editor TN TalksDecember 22, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    poli marunthu 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    போலி மருந்து தயாரிப்பு விவகாரத்தில் சிபிஐ, என்ஐஏ விசாரணைக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பரிந்துரை செய்துள்ளார்.

    புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலைகள், குடோன்களை சிபிசிஐடி கண்டறிந்து சீல் வைத்து உரிமையாளர் ராஜா உட்பட 16 பேரை கைது செய்துள்ளது. மருந்து மாத்திரைகள் 16 மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டிதிருந்ததால் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் தொடங்கி ஆளும் கூட்டணியில் உள்ள பாஜகவும் சிபிஐ விசாரணை கோரின. தேசியக் கட்சிகளான காங்கிரஸும், பாஜகவும் துணைநிலை ஆளுநரிடம் மனு தந்தன. பல சமூக அமைப்புகளும் கோரிக்கை வைத்திருந்தனர்.

    ஆளுநரிடம் மனு தந்தும் நடவடிக்கை இல்லாததால் டெல்லி சென்று காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. பாஜக தரப்பில் பேரவைத் தலைவர் செல்வம், முதல்வர் நாராயணசாமி ஆட்சியில்தான் இந்த தொழிற்சாலைகளுக்கு உரிமம் தந்தனர் என்றும் குற்றம்சாட்டியது.

    இந்நிலையில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “எந்த விசாரணைக்கும் நான் தயார். அதேநேரத்தில் போலி மருந்து விவகாரத்தில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம், பேரவைத் தலைவர் செல்வம் மற்றும் பாஜக தலைவர்களுக்கு தொடர்பு உள்ளது. அவர்கள் விசாரணைக்கு தயாரா?” என்று கேட்டார்.

    போலி மருந்து விவகாரம் கடும் அதிர்வை ஏற்படுத்திய நிலையில், சிபிசிஐடி விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இந்த விவகாரத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நபர்கள் தொடர்பு கொண்டு இருப்பதாலும், தேசிய அளவிலான விசாரணை அவசியம் என்ற காரணத்தினாலும், இது தொடர்பான விசாரணையை சிபிஐ (CBI) மற்றும் என்ஐஏ (NIA) அமைப்புகள் மேற்கொள்ள புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பரிந்துரைத்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதென்னிந்திய படப்பிடிப்பில் மோசமான அனுபவம்: ராதிகா ஆப்தே வருத்தம்
    Next Article உள்துறை செயலாளர், டிஜிபி நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு!
    Editor TN Talks

    Related Posts

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    December 23, 2025

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.11 லட்சம் பேர் விண்ணப்பம்! வரும் 27, 28- 3, 4ம் தேதிகளில் சிறப்பு முகாம்!

    December 23, 2025

    சென்னை – தூத்துக்குடிக்கு ரூ.13,400! 3 மடங்கு உயர்ந்த விமானக் கட்டணம்

    December 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியீடு!

    ‘ஜனநாயகன்’ வெளியாவதில் சிக்கல்..? காரணம் என்ன?

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    ‘ஜனநாயகன்’ ஆடியோ விழாவில் அரசியல் பேசத் தடை?

    குளிர்கால ஒலிம்பிக் விழாவின் ஜோதியை ஏந்திச் சென்றார் ஜாக்கி சான்!

    Trending Posts

    இன்று தமிழகம் வருகிறார் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல்!. EPS உடன் பேச்சுவார்த்தை!.

    December 23, 2025

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    December 23, 2025

    டிடிவி, ஓபிஎஸ்-சை அதிமுக கூட்டணியில் இணைப்பது குறித்து இபிஎஸ்சுடன் கோயல் பேச்சா? நயினார் மறுப்பு

    December 23, 2025

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.11 லட்சம் பேர் விண்ணப்பம்! வரும் 27, 28- 3, 4ம் தேதிகளில் சிறப்பு முகாம்!

    December 23, 2025

    கூடங்குளத்தில் ஐயப்ப பக்தர்களின் மண்டல பூஜை விழா

    December 23, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.