ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்தை 0-3 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தி தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் 2-வது மற்றும் 3-வது டெஸ்ட் போட்டிகளுக்கு இடையே பிரிஸ்பேனுக்கு அருகிலுள்ள நூஸா நகருக்குச் சென்ற இங்கிலாந்து வீரர்கள் அதிக அளவில் மது அருந்தியதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக இங்கிலாந்து அணியின் நிர்வாக இயக்குநர் ராபர்ட் கீ விசாரணை நடத்தி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் அறிக்கை அளிக்கவுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “போட்டிகளுக்கு இடையே ரிலாக்ஸ் ஆகும் வகையில் வீரர்கள் மது அருந்துவது சகஜம்தான். அதேநேரத்தில் அதிக அளவில் மது அருந்துவது ஏற்கக்கூடியதல்ல. அளவுக்கு அதிகமாகக் குடிப்பதை அபத்தமானது என்று நான் நினைக்கிறேன். இதுதொடர்பாக விரைவில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்படும்” என்றார்.
