Close Menu
    What's Hot

    அயோத்தி ராமர் கோயில் சர்ச்சை!. ரூ.5 கோடி மதிப்பிலான தங்க புத்தகம் மாயம்!. முன்னாள் அதிகாரி பரபரப்பு!

    ஜம்மு-காஷ்மீர் என்கவுன்டர்!. பஹல்காம் பயங்கரவாதி உட்பட 2 பேர் சுட்டுக்கொலை!.

    பைனான்சியரை நிர்வாணமாக்கி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல்;  ஆண் நண்பருடன் பெண் கைது

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»சமூகவலைதளங்களை பயன்படுத்த சிறுவர்களுக்குத் தடை! மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
    தமிழ்நாடு

    சமூகவலைதளங்களை பயன்படுத்த சிறுவர்களுக்குத் தடை! மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 26, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    madurai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் சமூக வலைதளங்களை பார்க்க விதிக்கப்பட்டுள்ள தடையை போல, இந்தியாவிலும் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    இதுதொடர்பாக எஸ். விஜயகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “இணையத்தில் ஆபாச படங்கள் தாராளமாக உலாவுகின்றன. இதுபோன்ற ஆபாச படங்களை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்ற நிலை தற்போது உள்ளது. இதனால் சிறுவர், சிறுமிகளின் எதிர்காலம் பாழாகும் நிலை உள்ளது.

    எனவே, தேசிய குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி, இதுபோன்ற ஆபாச வீடியோக்களை தடுக்கும் விதமான மென்பொருளை பயன்படுத்துமாறு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் செயலாளர், உள்துறை செயலாளர், தேசிய மற்றும் தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையங்களின் உறுப்பினர் செயலாளர்கள், இணைய சேவை வழங்கும் சங்கத்தின் செயலாளர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும்” என தனது மனுவில் கோரப்பட்டிருந்தது.

    இந்நிலையில், இந்த மனுவானது, நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய, மாநில அரசுகள் இதுதொடர்பாக தங்கள் வாதங்களை எடுத்துரைத்தன.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். அவர்கள் கூறுகையில், “மத்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டு பிறப்பித்துள்ள உத்தரவின்படி, இதுபோன்ற சர்ச்சைக்குரிய வீடியோக்களை தடுக்க வழிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனாலும், ஆபாச படங்களை குழந்தைகள் பார்ப்பதை முற்றிலும் தடுக்க வழிவகை செய்ய மென்பொருள் அவசியம் தேவை.

    இதுபோன்ற ஆபாசமான, அருவருப்பான காட்சிகளை பார்ப்பதும், தவிர்ப்பதும் அவரவர் தனிப்பட்ட விருப்பம் மற்றும் உரிமையை சார்ந்தது. இருந்தபோதிலும், இதுபோன்ற வீடியோக்களை குழந்தைகள் பார்த்தால், அதனால் ஏற்படும் பாதிப்பு அதிகம்.

    எனவே, ஆஸ்திரேலியா நாட்டில் 16 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் சமூக வலைதளங்களை பார்க்க விதிக்கப்பட்டுள்ள தடையை போல, இந்தியாவிலும் மத்திய அரசும் கொண்டு வர வேண்டும். அதுவரையில் இந்த விவகாரம் குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகளும், குழந்தைகள் உரிமை ஆணையங்களும் மேற்கொள்ள வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபராசக்தி பட ரிலீஸுக்கு தடை விதிக்க முடியாது: ஐகோர்ட்
    Next Article விஜய் கட்சியை கிண்டலடித்த சரத்! தேர்தலுக்கு பிறகு தவெக இருக்குமா என கேள்வி
    Editor TN Talks

    Related Posts

    பைனான்சியரை நிர்வாணமாக்கி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல்;  ஆண் நண்பருடன் பெண் கைது

    July 5, 2026

    ஈரோடு : காதலியை கழுத்தில் குத்திய காதலன்..! காதலை துண்டித்ததால் நடந்த விபரீதம்..!

    July 5, 2026

    ஒரே இடத்தில் பெரியார், அம்பேத்கர் சிலைகள்: கோவையில் எம்.பி ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் திறந்து வைத்தனர்!

    July 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அயோத்தி ராமர் கோயில் சர்ச்சை!. ரூ.5 கோடி மதிப்பிலான தங்க புத்தகம் மாயம்!. முன்னாள் அதிகாரி பரபரப்பு!

    ஜம்மு-காஷ்மீர் என்கவுன்டர்!. பஹல்காம் பயங்கரவாதி உட்பட 2 பேர் சுட்டுக்கொலை!.

    பைனான்சியரை நிர்வாணமாக்கி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல்;  ஆண் நண்பருடன் பெண் கைது

    ஈரோடு : காதலியை கழுத்தில் குத்திய காதலன்..! காதலை துண்டித்ததால் நடந்த விபரீதம்..!

    ஒரே இடத்தில் பெரியார், அம்பேத்கர் சிலைகள்: கோவையில் எம்.பி ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் திறந்து வைத்தனர்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.