Close Menu
    What's Hot

    விஜய் ஹசாரே டிராபி!. 7 விக்கெட்டுகளை வீழ்த்தி CSK வீரர் அபாரம்!.

    இந்தியாவில் அதிகம் விற்ற ஸ்மார்ட்போன்! ஐ-போன் 16 சாதனை!

    2026 டி20 உலகக் கோப்பை!. இங்கிலாந்து அணி அறிவிப்பு!. அதிரடி வீரர்களுக்கு இடமில்லை!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»விபத்து நடந்த உடனேயே ஓட்டுநர் உரிமங்களை பறிமுதல் செய்ய கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
    தமிழ்நாடு

    விபத்து நடந்த உடனேயே ஓட்டுநர் உரிமங்களை பறிமுதல் செய்ய கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 30, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    licence
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விபத்து நிகழ்ந்த உடனேயே அசல் ஓட்டுநர் உரிமங்களை பறிமுதல் செய்வது ஏற்புடையது அல்ல என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    திண்டுக்கல், திருச்சி அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்கள் இருவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நாங்கள் பேருந்துகள் இயக்கியபோது விபத்து நிகழ்ந்தது. இதையடுத்து எங்களின் அசல் ஓட்டுநர் உரிமத்தை போலீஸார் பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலரிடம் ஒப்படைத்துவிட்டனர். விதிமுறைகளை பின்பற்றாமல் எங்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஓட்டுநர் உரிமங்களை திரும்ப வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுக்களை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: மதுரை-போடி மற்றும் ஜெயங்கொண்டம்-திருச்சி வழித்தடங்களில் நடைபெற்ற விபத்துகளுக்காக மனுதாரர்களின் அசல் ஓட்டுநர் உரிமங்களை போலீஸார் பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர். விபத்து நடந்த மறுநாள் ஓட்டுநர் உரிமங்களை பறிமுதல் செய்வது ஏற்புடையது அல்ல. மோட்டார் வாகனச் சட்டப்படி, விபத்து நேரிடும்போது ஓட்டுநர் உரிமங்களை உரிய விதிமுறைகளை பின்பற்றி விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்கிய பிறகே பறிமுதல் செய்ய வேண்டும்.

    விபத்து நிகழ்ந்த உடனே, விசாரணையின் தொடக்கத்திலேயே ஓட்டுநர் உரிமங்களை பறிமுதல் செய்வது சரியல்ல. எனவே மனுதாரர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஓட்டுநர் உரிமங்களை உசிலம்பட்டி, லால்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமெல்போர்ன் டெஸ்ட் ஒரு கேலிக்கூத்து என்பது பிட்சினால் அல்ல பேட்டர்களினால் – இயன் சாப்பல் சாடல்
    Next Article அமைதிப் பேச்சுவார்த்தையில் நெருங்கி வரும் உக்ரைன், ரஷ்யா: ட்ரம்ப் தகவல்
    Editor TN Talks

    Related Posts

    கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு 23-வது முறை வெடிகுண்டு மிரட்டல்..,

    December 30, 2025

    சேலம், கள்ளக்குறிச்சியில் அதிமுக பொதுக்குழு கூட்டம்!. எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு!.

    December 30, 2025

    ஓய்வூதியத் திட்டம்!. முழு அறிக்கையை முதல்வரிடம் சமர்பித்தார் ககன்தீப் சிங் பேடி!.

    December 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விஜய் ஹசாரே டிராபி!. 7 விக்கெட்டுகளை வீழ்த்தி CSK வீரர் அபாரம்!.

    இந்தியாவில் அதிகம் விற்ற ஸ்மார்ட்போன்! ஐ-போன் 16 சாதனை!

    2026 டி20 உலகக் கோப்பை!. இங்கிலாந்து அணி அறிவிப்பு!. அதிரடி வீரர்களுக்கு இடமில்லை!.

    கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு 23-வது முறை வெடிகுண்டு மிரட்டல்..,

    இதற்காக காவல்துறையினரையும் தண்டிக்க வேண்டும்! ராமதாஸ் சொல்கிறார்

    Trending Posts

    சூர்யகுமார் யாதவ் எனக்கு மெசேஜ் அனுப்பி கொண்டே இருப்பார்.. பற்ற வைத்த பாலிவுட் நடிகை.. யார் இவர்?

    December 30, 2025

    இந்தியாவில் அதிகம் விற்ற ஸ்மார்ட்போன்! ஐ-போன் 16 சாதனை!

    December 30, 2025

    இதற்காக காவல்துறையினரையும் தண்டிக்க வேண்டும்! ராமதாஸ் சொல்கிறார்

    December 30, 2025

    புதின் வீட்டில் ட்ரோன் தாக்குதல் எதிரொலி!. பிரதமர் மோடி கவலை!

    December 30, 2025

    ஷாக்! சின்னத்திரை நடிகை நந்தினி தற்கொலை

    December 30, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.