Close Menu
    What's Hot

    கூட்டாட்சி தத்துவத்திற்கு பெரும் பின்னடைவு! செல்வப்பெருந்தகை கண்டனம்

    காசோலை மோசடி வழக்கு! மதிமுக எம்எல்ஏக்கு 2 ஆண்டு ஜெயில்!

    அணுகுண்டு தாக்குதல் பீதி! அலறியடித்து புதினை போனில் அழைத்த டிரம்ப்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»ஷாக்! சின்னத்திரை நடிகை நந்தினி தற்கொலை
    சினிமா

    ஷாக்! சின்னத்திரை நடிகை நந்தினி தற்கொலை

    Editor TN TalksBy Editor TN TalksDecember 30, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    nandini actress suicide
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பிரபல சின்னத்திரை நடிகை நந்தினி பெங்களூருவில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழ் மற்றும் கன்னடத்தில் பிரபல சீரியல் நடிகையாக இருந்தவர் நந்தினி. பெங்களூருவில் தங்கியிருந்து சீரியல்களில் நடித்து வந்த இவர், இன்று (டிசம்பர் 29) கெங்கேரியில் உள்ள தனது ஹாஸ்டலில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

    சம்பவத்தன்று இரவு, தனது நண்பர் புனீத் என்பவரைச் சந்தித்துவிட்டு நள்ளிரவு 11 மணிக்கு விடுதிக்கு நந்தினி திரும்பியுள்ளார். அதன் பிறகு புனீத் அவரைத் தொடர்பு கொள்ள முயன்றபோது நந்தினி போனை எடுக்கவில்லை. சந்தேகமடைந்த புனீத் விடுதி மேலாளருக்குத் தகவல் அளித்து, கதவை உடைத்துப் பார்த்தபோது நந்தினி தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
    நந்தினியின் திடீர் மறைவுச் செய்தி தமிழ் மற்றும் கன்னட சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்த தமிழ்நாட்டிலிருந்து பல்வேறு சின்னத்திரை கலைஞர்கள் பெங்களூரு சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து பெங்களூரு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திர மாநிலம் பெல்லாரியைச் சேர்ந்த நந்தினி, பெங்களூருவில் பொறியியல் படிப்பில் சேர்ந்தார். ஆனால், நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு, 2019 முதல் சின்னத்திரையில் பயணிக்கத் தொடங்கினார்.

    கன்னடத்தில் சில சீரியல்களில் நடித்த நந்தினி, தமிழில் ‘கௌரி’ தொடர் மூலம் பிரபலமானார். நந்தினியின் தந்தை 2023-ல் காலமானார். அதைத் தொடர்ந்து, அவருக்குக் கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்பட்டது. ஆனால், நடிப்பில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தினால் அவர் அந்த அரசு வேலையை ஏற்க மறுத்துவிட்டார்.

    அரசு வேலையை விட்டுவிட்டு நடிப்பைத் தொடர்வதில் குடும்பத்தினருக்கும் அவருக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து தனது டைரியில் அவர் எழுதியுள்ள குறிப்பில், தனது உணர்வுகளைக் குடும்பத்தினர் புரிந்து கொள்ளவில்லை என்றும், அரசு வேலையில் தனக்கு விருப்பமில்லை என்றும் நந்தினி குறிப்பிட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகலிதா ஜியா மறைவு: வங்காளதேசத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு
    Next Article வெற்றிமாறன் இயக்கத்தில் கமல்ஹாசன்?
    Editor TN Talks

    Related Posts

    வெற்றிமாறன் இயக்கத்தில் கமல்ஹாசன்?

    December 30, 2025

    ரூ.40 கோடி தருவதாகச் சொல்லியும் புகையிலை விளம்பரத்தை நிராகரித்த சுனில் ஷெட்டி

    December 30, 2025

    தேதி குறிச்சாச்சு!. ரஷ்மிகா மந்தனா – விஜய் தேவரகொண்டாவுக்கு டும் டும் டும்!.

    December 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கூட்டாட்சி தத்துவத்திற்கு பெரும் பின்னடைவு! செல்வப்பெருந்தகை கண்டனம்

    காசோலை மோசடி வழக்கு! மதிமுக எம்எல்ஏக்கு 2 ஆண்டு ஜெயில்!

    அணுகுண்டு தாக்குதல் பீதி! அலறியடித்து புதினை போனில் அழைத்த டிரம்ப்!

    கபட நாடக அரசு! திருத்தணி சம்பவத்தை சுட்டிக்காட்டி விஜய் பாய்ச்சல்

    ஜன 1 முதல் 65 ரயில்களின் வேகம் அதிகரிப்பு! தெற்கு ரயில்வே அறிவிப்பு

    Trending Posts

    சூர்யகுமார் யாதவ் எனக்கு மெசேஜ் அனுப்பி கொண்டே இருப்பார்.. பற்ற வைத்த பாலிவுட் நடிகை.. யார் இவர்?

    December 30, 2025

    கூட்டாட்சி தத்துவத்திற்கு பெரும் பின்னடைவு! செல்வப்பெருந்தகை கண்டனம்

    December 30, 2025

    கபட நாடக அரசு! திருத்தணி சம்பவத்தை சுட்டிக்காட்டி விஜய் பாய்ச்சல்

    December 30, 2025

    ஜன 1 முதல் 65 ரயில்களின் வேகம் அதிகரிப்பு! தெற்கு ரயில்வே அறிவிப்பு

    December 30, 2025

    மும்பையில் பயங்கரம்! பேருந்து மோதி சாலையோரம் நின்ற 4 பேர் பலி

    December 30, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.