2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விருப்பமனு பெற்றவர்களுக்கான நேர்காணல் அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை தொடங்குகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 7,988 விண்ணப்பங்களும் , பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிட விருப்பம் தெரிவித்து 2,187 விண்ணப்பங்களும் என 10,175 விண்ணப்பங்கள் கட்சித் தலைமை அலுவலகத்திற்கு வரப்பெற்றது .
இதில் நாளை சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, கரூர், நாமக்கல், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொகுதியில் போட்டியிட விருப்ப மனு வழங்கியவர்களிடம் எடப்பாடி பழனிசாமி நேர்காணல் நடத்துகிறார் .
நாளை முதல் 10 , 12 , 13 ஆகிய தேதிகளிலும் அதனைத் தொடர்ந்து 24ஆகிய தேதியும் என மொத்தம் 5 நாட்கள் நேர்காணல் நடைபெறுகிறது . காலை மாலை என இரு வேளையிலும் நடைபெறும் இந்த நேர்காணலில் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு பெற்று தருமாறு யாரையும் அணுகி ஏமாற வேண்டாம் , கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கோடு சிலர் கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டு வருவதாக கட்சி தலைமைக்கு தகவல் வந்துள்ளது.
கட்சிக்காக உழைப்பவர்களுக்கு முக்கியத்துவமும் அங்கீகாரமும் உரிய நேரத்தில் வழங்கப்படும் , விருப்ப மனு பெற்றதற்கான அசல் ரசீதுடன் நிர்வாகிகள் நேர்காணலுக்கு வருமாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது .
