அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சூரிய மூர்த்தி என்பவர், எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் முறையிடப்பட்டது. அதை கடந்த செப்டம்பர் 4ம் தேதி விசாரித்த நீதிமன்றம் சூரியமூர்த்தி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சூரியமூர்த்தி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் நரசிம்மா, ஆலோக் ஆராதே அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இரட்டை இலை சின்னம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக நீடிப்பதில் எந்த சிக்கலும் இல்லை.
