இசை கலைஞர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனக்கு பிடித்த பாடல், இசையமைப்பாளர்கள் என பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது பாடலாசிரியர் மதன் கார்க்கி விண்டேஜ் கார் ஓட்டியது குறித்து முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், கோயம்புத்தூரில் சென்று கார் வாங்கி ஒட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தேன். இரவில் கார் ஓட்டுவது எனக்கு ரொம்ப பிடிக்கும். டிரைவரை கார் ஓட்டவே விட்டது இல்லை” என பகிர்ந்து கொண்டார்.
தொடர்ந்து இசை கலைஞர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், பயணங்களின் போது அச்சம் என்பது மடமையடா, நீ இல்லாத உலகத்தில் நிம்மதி இல்லை போன்ற பழைய பாடல்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றார். மேலும் பாடகர்களுடன் இணைந்து நீ இல்லாத உலகத்தில் பாடலை பாடி அசத்தினார்.
தனது இளமை பருவத்தில் ”பறவைகள் பலவிதம்” ஒவ்வொன்றும் ஒருவிதம் உள்ளிட்ட பாடல்களை அதிகமாக விரும்பி கேட்டதாக தெரிவித்தார். தொடர்ந்து தனக்கு எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், அனிரூத் உள்ளிட்டோரின் பாடல்கள் பிடிக்கும் என்றார். மேலும் தனக்கு பாடகர் டி.எம். சௌந்தரராஜன் என கூறினார்.
