கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக 2வது முறையாக விசாரணைக்கு ஆஜரான விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு திணறடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
செப்டம்பர் 27ம் தேதி நடந்த கரூர் துயரம் தொடர்பாக டெல்லியில் நடந்து வரும் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி தவெக தலைவர் விளக்கம் அளித்து வருகிறார். கடந்த 12ம் ஆஜரான விஜயிடம் கரூரில் நடந்தது தொடர்பாக சுமார் 7 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அதை தொடர்ந்து பொங்கல் பண்டிகைக்கு பிறகு இன்று மீண்டும் விசாரணைகு விஜய் ஆஜரானார்.
அவரிடம் கூட்ட நெரிசல் ஏற்பட்ட போது தொடர்ந்து பிரச்சாரம் செய்தது ஏன்? எப்போது பேச்சை முடித்தீர்கள், பிரச்சாரம் நடைபெறும் இடத்திற்கு ஏன் தாமதமாக போனீர்கள்? அனுமதிக்கப்பட்ட கூட்டத்தை விட அதிகமானோர் வந்தது எப்படி? தண்ணீர் பாட்டிலை தூக்கி வீசியபோது பார்க்கவில்லையா? வாகனத்தின் மேலே நின்றபோது கீழே நடந்ததை பார்க்கவில்லையா?
அவ்வளவு நெரிசலிலும் வாகனத்தை முன்னே செலுத்தியது ஏன்? என அடுக்கடுக்கான கேள்விகளை விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் கேட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கு எல்லாம் பதிலளித்த விஜய், கரூரில் கட்டுக்கடங்காமல் வந்த கூட்டத்தை போலீசார் தடுக்க தவிறிவிட்டதாக விஜய் குற்றம்சாட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
