மகாராஷ்டிர மாநிலம் பாராமதியில் நடைபெற இருந்த கட்சி நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக சென்ற போது விமானம் விபத்துக்குள்ளானதில் துணை முதல்வர் அஜித் பவார் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அஜித் பவார் இன்று காலை மும்பையில் இருந்து பாரமதிக்கு ஒரு சார்ட்டர்ட் விமானத்தில் (சிறிய ரக விமானம்) சென்றுக்கொண்டிருந்தார். அவருடன் உதவியாளர்கள் இருவர் உள்பட 5 பேர் இருந்துள்ளனர். இந்நிலையில், அவர் சென்ற விமானம் இன்று (ஜன.28) காலை சரியாக 8.45 மணிக்கு விபத்துக்குள்ளாகியுள்ளது. பாராமதியில் விமானம் தரையிரங்க முயற்சித்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் ஆபத்தான நிலையில் மீட்கபட்ட அஜித் பவார், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
https://x.com/narendramodi/status/2016377755471118758
இந்தநிலையில், இவரது மரணத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அஜித் பவாருடன் எடுத்து புகைப்படங்களையும் மோடி பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், “அஜித் பவார் அவர்கள் அடித்தட்டு மக்களுடன் வலுவான தொடர்பைக் கொண்ட ஒரு மக்கள் தலைவராகத் திகழ்ந்தார். மகாராஷ்டிர மக்களின் சேவைக்கு முன்னணியில் நின்று உழைக்கும் ஒருவராக அவர் பரவலாக மதிக்கப்பட்டார். நிர்வாக விஷயங்களில் அவர் கொண்டிருந்த புரிதலும், ழை எளிய மக்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் அதிகாரம் அளிக்க வேண்டும் என்ற அவரது பேரார்வமும் குறிப்பிடத்தக்கவை.
அவரது அகால மரணம் மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன் என்று பிரதமர் மோடி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
