இன்று பட்ஜெட் தாக்கல் செய்ய வந்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அணிந்து வந்துள்ள புடவைக்கு பின்னால் உள்ள காரணம் என்ன தெரியுமா?
தொடர்ந்து 9ஆவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் , பட்ஜெட் நாளில் அணிந்து வரும் புடவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மிகவும் ஆடம்பரமாக இல்லாமல், சிம்பிளாக அவர் அணிந்து வரும் புடவைகள் பார்ப்பதற்கு அழகாக இருப்பது மட்டுமல்ல; அந்தப் புடவைக்கு பின்னால் நிறைய விஷயங்களும் இருக்கும். அதாவது, அவர் தாக்கல் செய்யும் பட்ஜெட்டின் சாராம்சத்தை வெளிப்படுத்தும் வகையில் அவரது புடவை இருக்கும்.
முந்தைய பட்ஜெட்களிலும் அவர் அணிந்து வந்த புடவைகள் மற்றும் பட்ஜெட்டின் சாராம்சங்கள் நாட்டு மக்களுக்கு குளிர்ச்சியான இனிமை தரும் செய்திகளை வழங்கிய பட்ஜெட்டாகவும் புடவையாகவும் இருந்தது. ஒரு தரப்பினரிடையே விமர்சனங்கள் இருந்தாலும் பரவலாக நாட்டு மக்களுக்கு நன்மை தரும் பட்ஜெட்டாக இருந்தன. இந்நிலையில், இன்று 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
இன்று அவர் தமிழகத்தை பிரதிபலிக்கும் அகையில் காஞ்சிபுரம் பட்டுப்புடவையை அணிந்துள்ளார். ஊதா நிற காஞ்சிபுரம் பட்டுப்புடவையில், வெளிர் தங்க – பழுப்பு நிறத்தில் சிறு கட்டங்கள் உள்ளன. மேலும் காபி பிரவுன் பார்டரும் புடவையில் உள்ளது.
இதேபோல், கடந்த 2019: மங்களகிரி பட்டு (ஆந்திரா) 2021: போச்சம்பள்ளி இக்கட் (தெலுங்கானா) 2022: பொம்காய் பட்டு (ஒடிசா) 2023: இல்கல் புடவை (கர்நாடகா) 2025: மதுபானி ஓவியம் வரையப்பட்ட புடவை (பீகார்) ஆகிய மாநிலங்களை பிரதிபலிக்கும் வகையில் இருந்தது.
ஆனால் இம்முறை தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நிர்மலா சீதாராமன், இந்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தனது சொந்த மாநிலத்தின் கலை மற்றும் கைத்தறிக்கு மதிப்பளிக்கும் வகையில் காஞ்சிபுரம் பட்டைத் தேர்வு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
