அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) சமீபத்தில் “மிகவும் மோசமானவர்கள்” (Worst of the Worst – WOW) என்ற தரவுத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், குற்றச் செயல்களில் ஈடுபட்ட 25,000 சட்டவிரோத வெளிநாட்டினர், அதாவது, அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் குற்றவாளிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்தக் குற்றவாளிகளில் கொலை, பாலியல் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற கடுமையான குற்றங்களைச் செய்தவர்களும் அடங்குவர். இந்த பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 89 பேரும் அடங்குவர்.
DHS-இன் படி, இந்த தரவுத்தளம் பொதுமக்கள் அணுகக்கூடிய வகையில் உள்ளது. இதில் சட்டவிரோதமாக அமெரிக்காவில் வாழ்ந்த குற்றவாளிகளின் பெயர்கள், புகைப்படங்கள், செய்த குற்றங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த இணையதளம் (WOW.DHS.GOV) மூலம், எந்தெந்தக் குற்றவாளிகள் நாட்டில் சட்டவிரோதமாக வசித்து வந்தார்கள், எந்தக் குற்றங்களுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டார்கள், மற்றும் எந்தெந்த சமூகங்களில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்பதைச் சாதாரண அமெரிக்கர்கள் தெரிந்துகொள்ளலாம் என்று DHS ஒரு சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளது.
DHS-ன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில், இது மொத்தக் குற்றவாளிகளைப் பற்றிய ஒரு சிறு பகுதியே என்றது. டிரம்ப் நிர்வாகத்தின் போது தெருக்களில் இருந்து அகற்றப்பட்டவர்கள் இதில் அடங்குவதாகக் கூறப்பட்டது. “இவர்கள் தான் நமது சமூகங்களில் பயம் ஏற்படுத்திய குற்றவாளிகள்,” என DHS குறிப்பிட்டது. “ஒவ்வொரு குற்றவாளியும் நாட்டிலிருந்து அகற்றப்படும் வரை நாங்கள் ஓய மாட்டோம். சட்டப்பூர்வமாக இங்கு இருக்கத் தகுதியற்றவர்களால் அமெரிக்கக் குடிமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,
